Skip to main content

கோலியையும், இந்திய அணியையும் பார்க்க வேண்டும்-விஜய் மல்லையா வேண்டுகோள்   

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

 

kholi

 

இந்திய வங்கிகள் பலவற்றில் 9000கோடிக்கும் மேல் கடன் பெற்றுவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் அவரை தேடப்படும் குற்றவாளியாக இருப்பவரை, அழைத்துவர இந்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. இந்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது அவர் ஜாமீனில் இருக்கிறார்.

 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20, மூன்று ஒருநாள் விளையாடிவிட்டு, தற்போது டெஸ்ட் போட்டிகள் விளையாடிக்கொண்டிருக்கிறது.  இதனிடையே விராட் கோலி மற்றும் அவரது தலைமையிலான இந்திய அணி வீரர்களை இந்த மாதத்தில் சந்திக்க விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் விஜய் மல்லையாவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது. இந்திய அணியை விஜய் மல்லையா சந்தித்தால் ஏற்படும் பெரும் சர்ச்சையை தவிர்க்கவே கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்திய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆர் சி பி அணியின் கேப்டன் இந்திய அணியின் கேப்டான் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கனவே இங்கிலாந்து ரசிகர்களிடம் விராத் கோலி புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் பரவும் போது, அந்த புகைப்படத்தில் விஜய் மல்லையா போன்று ஒருவர் இருக்கிறார் என்று சர்ச்சைகள் கிளப்பப்பட்டது. தற்போது விஜய் மல்லையாவே இவ்வாறு வேண்டுகோள் விட்டிருப்பதால் மேலும் சர்ச்சையாகியுள்ளது.          

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொறுப்புடன் ஆடிய கோலி; சிலிர்த்தது சின்னசாமி மைதானம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
rcb vs kkr ipl live score update kohli played important knock

ஐபிஎல் 2024 இல் 10 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூர் அணியை முதலில் பேட் செய்யுமாறு அழைத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் கேப்டன்  டூப்ளசிஸ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு கேமரூன் கிரீன் கோலியுடன் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த மேக்ஸ் வெல்லும் கோலியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை எடுத்து நரேன் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ராஜத் பட்டிதார் மீண்டும் ஏமாற்றினார். 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அனுஜ் ராவத்தும் 3 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஒருபுறம் வீரர்கள் தவறான ஷாட்டுகளால் ஆட்டம் இழந்த போதிலும் மறுபுறம் விராட் கோலி எப்போதும் போல தனக்குரிய பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் எப்போதும் போல தன்னுடைய பினிஷிங் அதிரடியை காட்டினார். 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கி 3.5 ஓவர்களிலேயே 52 ரன்களுடன் அதிரடியாக ஆடி வருகிறது.  சால்ட் 12 பந்துகளில் 24 ரன்களும், நரைன் 11 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் 83 ரன்கள் எடுத்ததன் மூலம், விராத் கோலி இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த எடுத்துள்ள வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றுக் கொண்டார். 

Next Story

கிரிக்கெட் மட்டுமல்ல எல்லாத்துலயும் ‘நம்பர் 1’ தான்; விராட்டின் புதிய சாதனை

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Not just cricket but 'No. 1' in everything; Virat's new record

 

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரும் அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி நடப்பு தொடரில் 639 ரன்களை விளாசியுள்ளார். அதில் 2 சதங்களும் அடக்கம். 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 53.25 சராசரியுடன் நடப்பு சீசனில் அவர் விளையாடியுள்ளார். 

 

மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதமடித்தவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இதுவரை விராட் 7 சதங்களை பதிவு செய்துள்ளார். இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெயில் 6 சதங்களை அடித்துள்ளார். தொடர்ந்து அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலிலும் விராட் முதலிடத்தில் உள்ளார். 

 

ஐபிஎல் தொடரில் இருந்து அவரது அணி வெளியேறிய பின் தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது லண்டன் சென்றுள்ள அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னை முழுமூச்சில் தயார்படுத்தி வருகிறார். 

 

ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெறவில்லை என்றாலும் கூட இரண்டு நாட்கள் இணையத்தை கலக்கினார் கோலி. தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 1601 பதிவுகளுடன் 250 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்கிற பெருமையைப் பெறுகிறார்.