பருத்திக்கு பூச்சி கொல்லி மருந்து தெளித்த
விவசாயிகள் 18 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் அதிக அளவிலான பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான விவசாயிகளின் முக்கியப் பயிராக பருத்தி இருந்து வருகிறது. இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு பருத்திக்கு பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்த போது மூச்சுத் திணறி விவசாயிகள் கொத்துக் கொத்தாக மயங்கி விழுந்துள்ளனர். இந்தக்கொடூர சம்பவத்தில் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.