Skip to main content

இரட்டை குண்டுவெடிப்பு வழக்கு !! தீர்ப்பிற்கான தண்டனை தேதி ஒத்திவைப்பு!!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
BOMB

 

 

 

ஹைத்ராபாத் இரட்டை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் இரண்டு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

கடந்த 2007-ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஹைத்ராபாத்திலுள்ள கோகுல்சாட் மற்றும் லும்பினி பார்க் என்ற இடத்திலுள்ள திறந்தவெளி திரையரங்கில் வெடித்த  குண்டுவெடிப்பில் 44 பேர் உயிரிழந்துள்ளனர் ஏறக்குறைய 50 பேர் படுகாயமடைந்தனர்.19 குண்டுகள் வெடிகுண்டு நிபுணர்களால் வெடிக்காமல் கைப்பற்றப்பட்டது. பரபரப்பாக பேசப்பட்ட இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என விசாரணையில் தெரியவர அது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

அந்த இரட்டைகுண்டு வெடிப்பு சம்பவத்திற்கு  ஹைதராபாத் மெட்ரோபாலிடன் செசன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்ரி என்ற இருவரை குற்றவாளிகள் என அறிவித்தது. மற்ற மூன்று பேர்களில் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில்  மூன்றாவது நபருக்கான தீர்ப்பையும், குற்றவாளிகளுக்கான  தண்டனையையும் வரும் 10-ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.