Skip to main content

"கம்யூனிசமோ சோசலிசமோ தேவையில்லை.. ராமராஜ்ஜியத்தையே நாடு விரும்புகிறது" - யோகி ஆதித்யநாத்!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

yogi adityanath

 

உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் கடைசி அமர்வில், நேற்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நேற்று இரண்டாவது துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், நாட்டிற்கு ராம ராஜ்யமே தேவை என கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; சோசலிசம் என்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை. இது குடும்ப சோசலிசம், மாஃபியா சோசலிசம், அராஜகவாத சோசலிசம், கலக சோசலிசம் மற்றும் பயங்கரவாத சோசலிசம் போன்ற பல போலி முத்திரைகளைக் கொண்டுள்ளது. சோசலிசம் என்பது ஒரு ரெட் அலர்ட் என்று மாநில மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். சோசலிசதிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

 

இந்த நாட்டிற்கு கம்யூனிசமோ சோசலிசமோ தேவையில்லை என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இந்த நாடு ராமராஜ்ஜியத்தை மட்டுமே விரும்புகிறது. உத்தரபிரதேசத்திற்கு ராமராஜ்ஜியத்தை மட்டுமே விரும்புகிறது. ராமராஜ்யம் என்பது நிலைத்திருப்பது, உலகளாவியது. எந்த சூழ்நிலையாலும் பாதிக்கப்படாதது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து; உ.பி. அரசு அதிரடி அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
UP Govt Action Announcement for Constable exam written by 50 lakhs cancelled

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 60,000 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து தேர்வெழுதினர். 

இந்த நிலையில், காவல்துறை பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு முன்னரே, வினாத்தாள் கசிந்து பரவியதாக வெளியான புகாரின் அடிப்படையில் இந்த தேர்வு ரத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது, ‘ரிசர்வ் சிவில் காவலர் பணியிடங்களுக்கான தேர்விற்காக நடத்தப்பட்ட தேர்வு 2023-ஐ ரத்து செய்து, அடுத்த 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளின் புனிதத் தன்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் தப்ப முடியாது. இதுபோன்ற கட்டுக்கடங்காத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

அரசியலமைப்பின் முன்னுரையில்  ‘மதச்சார்பற்ற, சோசியலிசம்’ இல்லை; காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Congress MP Accusation on the Preamble of the Constitution does not contain 'Secular, Socialism'

 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி  நேற்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற்றது.

 

அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில்  நேற்று (19-09-23) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு ஆதாரமளிக்கும் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த மசோதா மீதான விவாதம் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தில், சோனியா காந்தி, கனிமொழி உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.

 

இந்த நிலையில், நேற்று (19-09-23) புதிய நாடாளுமன்றத்தில் நடந்த முதல் கூட்டத்தின் போது தங்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் ‘மதச்சார்பற்ற’ , மற்றும் ‘சோசியலிச’ போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்திரி குற்றம் சாட்டியுள்ளார். 

 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆதிர் ரஞ்சன் செளத்திரி, “ எங்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு நகல்களை கொண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்தோம். ஆனால், அந்த நகலின் முன்னுரையில் ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘சோசியலிச’ போன்ற வார்த்தைகள் இல்லை. 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டியிருக்கின்றன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், தற்போது இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டியிருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. மத்திய அரசு இந்த மாற்றத்தை மிகவும் புத்திசாலித்தனமாக செய்துள்ளனர். மேலும், அவர்களின் நோக்கம் மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முயன்றேன். ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.