Skip to main content

சத்தீஸ்கரில் உள்ள "ரபேல்" (Rafale) கிராமம் !

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

சத்தீஸ்கர் மாநிலத்தில் "ரபேல்" (Rafale) பெயரில் சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமம்  "மஹாசமுந்த் "மக்களவை தொகுதிக்கு உட்பட்டது . 2019 - ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து எதிர்கட்சிகளின் பரப்புரை என்பது "ரபேல்" தலைப்பு மட்டுமே. ஏனெனில் முந்தைய காங்கிரஸ் அரசு அரசு " ரபேல் போர் விமானத்தை" பிரான்ஸ் அரசிடம் வாங்க ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்ததை ரத்து செய்த பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு குறைந்த எண்ணிக்கையில் விமானங்களை வாங்கவும் , அதிக விலைகளை உள்ளிட்டக்கிய ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கையெழுத்திட்டனர். 

 

raffael



இந்நிலையில் இந்தியா சார்பில் ரிலையன்ஸ் குழுமம் தலைவர் அனில் அம்பானிக்கு சில ஒப்பந்தங்களை இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்திடம் கேட்டு பெற்று தந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 2014-2019 ஆண்டு வரை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதற்கு காரணம் "ரபேல்" விமான கொள்முதலில் பாஜக ஊழல் செய்ததாகவும் , ரிலையன்ஸ் குழுமம் தலைவர் அனில் அம்பானி அவர்களுக்கு முறைகேடாக ஒப்பந்தம் தந்துள்ளது என கூறி தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் விமான உற்பத்தியில் முன்னணியில் உள்ள பெங்களூர் " Hindustan Aeronautics Limited" நிறுவனத்ததிற்கு "ரபேல்" போர் விமான ஒப்பந்தம் தராமல் ஏன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பாஜக அரசு தந்தது என எதிர்கட்சிகள் இந்தியா முழுவதும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் " ரபேல்" விமான பெயரில் இந்தியாவில் ஒரு கிராமம் உள்ளது என்பதை கண்டு மக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.