Skip to main content

'கங்குலி உடல்நிலை சீராக உள்ளது' - மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

bcci president sourav ganguly apollo hospital


கங்குலி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, இம்மாதத் தொடக்கத்தில் மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.

 

இதனையடுத்து கங்குலி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்தநிலையில், இன்று (27/01/2021) கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது. சவுரவ் கங்குலி தனது இருதய நிலையைப் பரிசோதித்துக் கொள்ளவே மருத்துவமனை வந்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்