Skip to main content

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ஒத்திவைப்பு!!!!

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

supreme court


ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்தத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது பாட்டியாலா நீதிமன்றம்.

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் சிக்கலில் ப.சிதம்பரம்.... உயர்நீதிமன்றத்தை அணுகிய சிபிஐ, அமலாக்கத்துறை...

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை நேற்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிபிஐ அதிகாரிகள். அப்போது சிபிஐ தரப்பில் நீதிமன்ற காவலில் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி, ப.சிதம்பரத்தை 14 நாட்கள் (செப்டம்பர் 19 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

 

cbi reaches delhi highcourt in aircel maxis case

 

 

இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்ய உதவியதாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது தொடுக்கப்பட்டுள்ள மற்றொரு வழக்கில் அவர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி நேற்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ, அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளளது. 

 

 

Next Story

ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியது சிபிஐ நீதிமன்றம்...

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

anticipatory bail granted for chidambaram in aircel maxis case

 

 

ஏற்கனவே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கிலும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிபிஐயின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற அறிவுரையுடன் ப.சிதம்பரத்திற்கும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மேலும் விசாரணை வரை இருவரும் இந்தியாவை விட்டு வெளியே செல்வதற்கும் தடை விதித்து நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கிடைத்துள்ளதால் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ, அமலாக்கத்துறை கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.