Skip to main content

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,311 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

jlk

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 9 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 19 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் ஆரம்பத்தில் பரவியது. சில மாதங்களுக்கு முன்பு வரை கரோனா தொற்று தினமும் 90 ஆயிரத்தை கடந்த நிலையில் இருந்து வந்தது.

 

இந்நிலையில் தற்போது கரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 16,311 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 1.04 கோடி பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்