Skip to main content

திருமுருகன் காந்தி மீது மேலும் இரண்டு வழக்கு!  FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரம்!

Published on 19/08/2018 | Edited on 19/08/2018
t

 

மே-17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இது குறித்து அவ்வியக்கம் தெரிவித்துள்ளதாவது:

தூத்துக்குடி மக்கள் அமைதியாக நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மார்ச் மாதத்தில் பங்கேற்றதற்கும், சீர்காழியில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் பொது கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்கும் வழக்குகள் பதியப்பட்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.


 இதில் குறிப்பாக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் திருமுருகன் காந்தியை சிறையில் வைப்பதற்கான காரணமாக, அவர் பேசியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தியை தமிழ் மக்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். FIR-ல் உள்ள வார்த்தைகளை அப்படியே தருகிறோம்.


 
“இந்து மதத்தில் சமமாக உணவு உட்கார்ந்து சாப்பிட முடியாது. சாதிக் கட்டமைப்பால் சகோதரத்துவம் இல்லை என்றால் நியாயம், நேர்மை என்பது கிடையாது. இந்த சமூகம் அன்புக்கு எதிரானது. தலையில் இருந்து பிறந்தவன் பிராமணன். தோலிலிருந்து பிறந்தவன் சத்ரியன், தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன், காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் இப்படி இருக்கும் போது சமத்துவம் எப்படி வரும். இந்த படிநிலை உடைந்தால் மட்டும் தான் இந்த சமுதாயத்தில் சமத்துவம், சகோதரத்துவம் வரும்.
 


பிராமணன் நம்முடைய உழைப்பை திருடுகிறான். சூத்திரர்கள் பணம் வைத்து இருந்தால் பிராமணர்கள் கொள்ளையடித்துப் போகலாம் என மனுதர்மம் கூறுகிறது. பிராமணன் வந்து எது சொன்னாலும் அது சத்திய வாக்கு, அதனை யாரும் சந்தேகப்படக் கூடாது. பார்ப்பனர்கள் இந்தியா விடுதலைக்காக எவ்வித போராட்டத்திலும் ஈடுபடவில்லை. அடிபட்டு செத்தது எல்லாம் நம்முடைய ஆட்கள்.


 
இடஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு, ஒதுக்கப்பட்டவர்களுக்கும், கல்வியிலே பின் தங்கியவர்களுக்கும். அப்படி ஒரு வார்த்தை சேர்த்தால் தான் நம்மால் கல்வி கற்க முடிகிறது. அதை செய்து காட்டியவர் அம்பேத்கர். அவர் உழைத்து உழைத்து வாதம் செய்து பெற்றுத் தந்தார். அதை அழிப்பதற்கான வேலையைத் தான் பிஜேபி செய்து வருகிறது. நாம் பெற்ற உரிமைகளை மாற்றினால் திரும்பவும் நம்மை மனுதர்மத்தின் கீழே கொண்டுவர முடியும். அதற்குத் தான் புதிய கல்வி கொண்டுவருகிறான்.
 
 

100 வருசத்துக்கு முன்பு மருத்துவம் படிக்க வேண்டும் என்றால், சமஸ்கிருதத்தை படித்து பாஸ் ஆகினால் தான் மருத்துவப் படிப்பிற்கு போக முடியும். யார் படிப்பான் பார்ப்பான் தான் படிப்பான். நம்முடைய குழந்தைகள் சமஸ்கிருதம் படிக்காது. அதனால் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இல்லை. மக்களே நன்றாக புரிந்து கொள்ளுங்கள். பார்ப்பான் அறிவாளி கிடையாது. சூழ்ச்சிக்காரன். அவன் நரி மாறிதான் வேலை செய்வான். மனுதர்மத்தில் ஒரு பார்ப்பான் சூத்திரனை கொல்வதற்கு ஒரு தவளையைக் கொன்றால் என்ன பாவமோ அந்த அளவுக்குத் தான் அவனுக்கு பாவம் என்று சொல்கிறது. ஒரு பார்ப்பானுக்கு செல்வம் வேண்டுமென்றால் சூத்திரனுடைய செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்று மனுதர்மம் சொல்கிறது.


 
200ரூபாய் 500ரூபாய் திருடுபவனுக்கு குண்டர் சட்டம், ஆனால் சங்கராச்சாரியாருக்கு குண்டர் சட்டம் கிடையாது. கொலை செய்தார் நாங்கள் கைது பண்ணிவிட்டோம் இல்லையா, உள்ளே போட்டு விட்டோமோ இல்லையா என்கிறார்கள். 100 ரூபாய் 200 ரூபாய் திருடுபவனை குண்டர் சட்டத்தில் போடுகிறாய், ஏன் சங்கராச்சாரியாரை குண்டர் சட்டத்தில் போட மாட்டியா. இந்த குண்டர் சட்டம் நம்மை ஒடுக்குவதற்காக மட்டுமே. பார்ப்பான் தண்டிக்கப்பட மாட்டான். அவனுக்கு எந்த ஒரு தண்டனையும் இருக்காது”
 என இரு சாதியினரிடையே பிரச்சினையைத் தூண்டும் வகையிலும், இந்திய ஒருமைப்பாட்டுக்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் பேசினார். இதுதான் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள பெரியாரும், அம்பேத்கரும் எழுதாத பேசாத எதை திருமுருகன் காந்தி பேசிவிட்டார்.

 

 சாதிய ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் மனுதர்மம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு இழுக்கில்லையாம். அது இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டவில்லையாம். ஆனால் மனுதர்மத்தை எதிர்த்துப் பேசுவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு இழுக்காம்.


 
இப்படித்தான் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மீது பொய் வழக்குகள் போட்டு அவரை நீண்ட காலம் சிறையில் முடக்க பாஜக-எடப்பாடி அரசுகளின் கூட்டணி சதி செய்து வருகிறது. இந்த சதியினை முறியடிக்கவும், ஜனநாயகத்தினை காத்திடவும் குரல் எழுப்புவோம் .

 நின்றாலும், பேசினாலுமே வழக்கு என்றால் எங்கே இருக்கிறது ஜனநாயகம்?

சார்ந்த செய்திகள்

Next Story

இட ஒதுக்கீட்டைப் பறித்த மோடியைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தாதது ஏன்? - திருமுருகன் காந்தி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Thirumurugan Gandhi question Why didn't  pmk   struggle against Modi for taking away reservation

சிதம்பரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டனியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, சிதம்பரம் நகரம் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிற தேர்தல் இதுவரை நடக்காத வித்தியாசமான தேர்தல்.  இது யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்கான தேர்தல்.  மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கானது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல். கடந்த 10 வருடத்திற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது. தற்போது எரிவாயு, பெட்ரோல், டீசல் பன்மடங்கு உயர்ந்து மக்கள் மீளமுடியாத விலைவாசி உயர்வால் தினந்தோறும் அவதி அடைகின்றனர். இதில் ஜிஎஸ்டி வரியைப் போட்டு மக்களை நசுக்கி வருகிறது.  

தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைகளைத் தட்டிப் பறித்து மேல் சாதிக்காரனுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இட ஒதுக்கீட்டையும், வேலையையும் பறித்த மோடியைக் கண்டித்து பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது என்ன ஞாயம்? இவர்களுக்கு கல்வி உரிமையும், வேலை, இடஒதுக்கீடு உரிமையை மறுத்தபோது போராடியவர் திருமா தான். நெய்வேலி என்எல்சி யில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜசபாவில் அன்புமணி பேசினாரா?  கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் போதாது.  

மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடியும் தமிழகத்தில் என்ன செய்தார் என்பதை கூற முடியாது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யோக்கியர் போல் பேசுகிறீர்களே நீங்கள் மோடிக்கு அடிமையாக இருந்தது தெரியாதா? அமலாக்கத்துறை அனைவர் வீட்டுக்கும் செல்கிறது ஆனால் எடப்பாடி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? இதில் இருந்தே தெரியவில்லையா மோடிக்கும் எடப்பாடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் அதிமுக என்ற அடிமைக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.

இங்கே நிற்கக்கூடிய வேட்பாளர்கள் திருமாவுக்கும் எதிராக இணையான வேட்பாளர்களா? இவரது கல்வி தகுதிக்கும், பேச்சுக்கும், பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர்கள் கொடுப்பார்களா? அவர்கள் அடிமையாக தான் இருப்பார்கள். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய அளவில் கவனிக்கக் கூடிய தலைவராக திருமா திகழ்கிறார். அவர் இந்த தொகுதி பிரதிநிதி மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதிநிதி ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தான் நமக்கு பெருமை.  ஏப்ப சாப்பைகளை அனுப்பி என்ன பயன் எனவே சிந்தித்து திருமாவை தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறவைப்பது நமது கடமை” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடப்பார்வையாளர் பாவரசு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச்செயலாளர் பால.அறவாழி, திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.  

Next Story

அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
Enforcement Department filed a case against Ankit Tiwari

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

அதே சமயம் அங்கித் திவாரி, தான் பெற்ற லஞ்சப் பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாகத் தெரிவித்திருந்தார். எனவே லஞ்சப் பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 19 ஆம் தேதி  நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினியில் 75 அதிகாரிகளின் பட்டியலில் உள்ளது. அவர்கள் மீது வழக்குகள் உள்ளது. எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு கடந்த 20 ஆம் தேதி  வழங்கப்படும் என தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இதனையடுத்து அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியாக  விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி  அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பற்றி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்த போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாராணைக்கு வருமாறு அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு மதுரை தல்லாகுளம் போலீசார் தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.