Skip to main content

ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!! புதிய டெக்னிக்கில் மணல் கடத்தும் கடத்தல்காரர்கள்...

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
sand mafia


 

ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது, மண் எப்படி அள்ளுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தற்போது நடந்துள்ளது.  
 

கொள்ளிடம் ஆற்றில் படகுகள் மூலம் மணல் கடத்தி வந்தவர்களை 3 படகுகளுடன் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். 

நாகை மாவட்டம்  கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில்  மணல் கடத்தல் தொடர்ந்து நடந்துவருகிறது, இதனை தடுப்பதற்கு சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் பாலசந்திரன் தலைமையிலான போலீஸார் சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையோரம்  ரோந்து பணியில் இருந்தனர். அப்போது,  கொள்ளிடம் ஆற்றில் மணல் திட்டுகளிலிருந்து படகுகள் மூலம் மணலை கடத்திக் கொண்டு ஒரு கும்பல்  கரைக்கு வந்துகொண்டுவருதை கண்ட போலீஸார் அவர்களை பிடிக்க முயன்றனர், அவர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் படகுகளை விட்டுவிட்டு தப்பினர். 
 

பிடிபட்ட ஒருவர் கொள்ளிடக்கரையோரம் உள்ள நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த சரத்குமார், வயது 22 . அவரையும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 நாட்டுப் படகுகளை பறிமுதல் செய்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில், மணல் திட்டுகளிலிருந்து இரவு நேரங்களில் படகுகளில் மணலை கடத்தி வந்து கரை பகுதியில் மொத்தமாக கொட்டிவைத்துவிட்டு பின்னர் லாரிகள் மூலம் அதை வேறு பகுதிக்கு கொண்டு சென்று மணல் விற்பனை செய்வதாக கூறினர்.

 "இரவில் எஞ்சின் வைத்த ஃபைபர் படகுகளிலும் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், இதை ஒன்றுமே செய்யமுடியவில்லை என்றும் புலம்புகிறார்கள் அப்பகுதி மக்கள்.

மணலை கொள்ளையடிக்க ஒவ்வொரு நாளும் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ, சைக்கிளில் கோணிச்சாக்கு மூலம் கடத்துறானுங்க, சூப்பர் எக்சல் டூவிலரில் பத்து கோணிசாக்குளில் மணலை கடத்துறாங்க, டாட்டா ஏஸ் வண்டியில் கடத்துறாங்க, மாட்டுவண்டி, டிராக்டர், லாரியை தாண்டி இப்போ மீன்பிடிக்கும் படகுகளிலும் கடத்துறாங்க, இத தடுக்கவே முடியாது, கடந்த சில மாதங்களில்கூட ஆற்றில் சட்டிகளுடன் இறங்கி (தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்போதே) மணல் அள்ளுகிறார்கள் என்று புலம்புகின்றனர் சில காவல்துறையினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.