Skip to main content

அதிமுக எம்பிக்களின் அமளி - 2வது நாளாக மாநிலங்களவை ஒத்திவைப்பு

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
r

 

அதிமுக எம்.பிக்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

 

மேகதாது அணைக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக எம்பிக்கள்.  பதாகைகளை ஏந்தி சென்று அவைத்தலைவர் இருக்கை முன்பாக முழக்கம் எழுப்பி முற்றுகையிட்டனர்.   அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  

 

 நேற்று பாராளுமன்றம் கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அமளி நீடித்தது. காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி திமுக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளூம் நாள் முழுவதும் முடங்கின.

இன்றைய தினமும் பாராளூமன்றம் கூடியதும்,  பதாகைகளை ஏந்தி சென்று அவைத்தலைவர் இருக்கை முன்பாக முழக்கம் எழுப்பி முற்றுகையிட்டு  அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகரின் உத்தரவால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  


 

சார்ந்த செய்திகள்