Skip to main content

கண்ணபிரான் கைது.! என்கவுண்டருக்கு தயாராகும் நெல்லை போலீஸ்..!!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
kannabiran


திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளரான நெல்லை தச்சநல்லூர் சத்திரப்புதுக்குளத்தைச் சேர்ந்த கண்ணபிரானை அவசரம் அவசரமாக திங்களன்று இரவு வேளையில் கைதுச்செய்துள்ளது நெல்லை சிட்டிப் போலீஸ்.. 5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 21 வழக்குகளைக் கொண்ட இவரைக் கைது செய்தது என்கவுண்டருக்குத் தான் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

 

 

"கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மல்லிகை திருமண மண்டபத்தில் சேலம் மத்தியச்சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக இருந்த முத்துக்குமாருக்குத் திருமணம் நடந்துள்ளது. அத்திருமணத்திற்கு அவருடன் அதே சிறைச்சாலையில் தண்டைனையை அனுபவித்த தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி தலைவர் கண்ணபிரான் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான்பாண்டியனுக்கும் அழைப்பிதழ் சென்றிருக்க, இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே சென்றிருக்கின்றனர். இவ்வேளையில், ஆழ்வார் திருநகரி கேம்பலாபாத் அருகிலுள்ள ஆற்றுப்பாலத்திலிருந்து 6 நபர்கள் கொண்ட கும்பல் ஜான்பாண்டியன் ஆதரவாளர் அழகர்சாமி சென்ற வாகனம் மீது கல்வீசி தாக்கி தப்பித்து ஓடியுள்ளது. " இதனை செய்தது கண்ணபிரான் டீமே.! " என ஆரம்பக் கட்டத்தில் தெரியப்படுத்தினாலும், ஜான்பாண்டியன் அதனை ஏற்கவில்லை என்றே கூறப்படுகின்றது.
  nellai


அதன் பிறகு ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனை செய்தது, பள்ளமடை பாலமுருகன், மாவடி பன்னீர்முருகன் மற்றும் கண்ணபிரானே என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியதாக மூவரையும் அவசரம் அவசரமாக கைது செய்துள்ளது போலீஸ் உதவி கமிஷனர்கள் கிருஷ்ணசாமி, சுபாஷ், இன்ஸ்பெக்டர்கள் ராமையா, சோமசுந்தரம், வனசுந்தர் தலைமையில் தனிப்படை போலீசார் டீம். ஜான்பாண்டியன் தரப்பே, அவர்கள் இல்லை என்று கூறியபிறகு இவர்களைக் கைது செய்வது யாரை திருப்திபடுத்த..? இல்லை என்கவுண்டருக்கா..?" என்ற கேள்வி தான் எங்களிடையே நிலவுகிறது." என்கின்றனர் கண்ணபிரான் தரப்பினர். கண்ணபிரானின் கைதைக்கண்டித்து நெல்லை மாநகரக் காவல்துறை எல்கைக்குள் 9 பேருந்துகளும், புறநகர் மாவட்டத்தில் 10 பேருந்துகளுமாக இதுவரை மொத்தம் 12 பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளது.
 

Nellai (2)


உளவுத்துறை அதிகாரி ஒருவரோ, " பொதுவாக பண்ணையார் குடும்பத்திற்கும், பசுபதி பாண்டியன் குடும்பத்திற்கும் தீராப் பகை. அதனால் இதுவரை பல கொலைகள் நடந்தேறியுள்ளது. பசுபதி பாண்டியனும் கொல்லப்பட, அதற்குக் காரணமானவர்களை பழிக்குப்பழி வாங்குவேன் என சபதமிட்டதோடு கடந்த சில வருடங்களுக்கு முன் பழையகாயலில் உள்ள சுபாஷ்பண்ணையாரின் தோட்டத்திற்குள் புகுந்து வெடிகுண்டு வீசி ஆறுமுகச்சாமி, கண்ணன் ஆகியோரைக் கொன்று தலையை மட்டும் வெட்டி எடுத்து தெய்வசெயல்புரத்திலுள்ள பசுபதிபாண்டியனின் பட்ம் முன் வைத்து தப்பித்தது இவரது டீம். இதில் சுபாஷ்பண்ணையார் தப்பிக்க மீண்டும் பழிவாங்கும் படலம் ஆரம்பித்தது. யார் அசந்தால் யார் தலையை கொய்வது என..?. இந்நிலையில் மீண்டும் சுபாஷ்பண்ணையாரை குறிவைத்து இயங்கியதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைக்க, இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் கண்ணபிரான். விரைவில் துப்பாக்கி வெடிக்கும்." என்றார் அவர்.

என்கவுண்டருக்கு தயாராகியுள்ளது நெல்லை போலீஸ்..! துப்பாக்கி வெடிக்குமா..?

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க. - த.ம.மு.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
BJP  TMMK. Alliance agreement signed between

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டி.டி.வி. தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கையெழுத்திட்டார். அதில், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
2 raiders passed away in encounter

காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று (26-12-23) காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து நடந்து சென்ற போது ஓட ஓட விரட்டி, வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான ரகு மற்றும் ஹசன் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், பிரபாகரனை கொலை செய்த ரகு மற்றும் ஹசன் ஆகியோர் காஞ்சிபுரம் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் பதுங்கி இருந்த ரவுடிகளை சுற்றி வளைத்தனர். 

அப்போது, ரகு மற்றும் ஹசன் ஆகியோர் போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தி அந்த இடத்தை விட்டு தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து, காவல்துறையினர் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரவுடிகளான ரகு மற்றும் ஹசன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் மீட்கப்ப்ட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.