Skip to main content

நக்கீரன் கோபாலிடம்  ‘மிரட்டல்’ விசாரணை! சி.பி.சி.ஐ.டி. போலீஸின் அத்துமீறல்!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

 

பொள்ளாச்சி விவகாரத்தில் விசாரணை என்கிற பெயரில்... மிரட்டியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.

 

g

 

பொள்ளாச்சி  கொடூர பாலியல் வன்முறை தொடர்பாக நக்கீரன் தொடர்ந்து புதிய ஆதாரங்களை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இந்நிலையில், பொள்ளாச்சி காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்பிறகும், அந்த வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தொடர்ந்து கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஆசிரியர் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி வந்தனர்.

 

g

 

இதனையடுத்து, நக்கீரன்கோபால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், 'சென்னையில் இருக்கும் பத்திரிகை ஆசிரியரை கோவைக்கு அழைப்பதன் காரணம் என்ன? உண்மையிலேயே விசாரணை ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் சென்னையிலேயே விசாரித்திருக்கலாமே?' என்று கூறி சென்னையில் 2019 ஏப்ரல்-1 ந்தேதி அவரை விசாரிக்கலாம் என்றும் மேற்குறிப்பிட்ட இரண்டு வழக்குகளைத் தவிர வேறு எந்த வழக்கு குறித்தும்  அவரிடம் விசாரிக்கக்கூடாது என்றும் நக்கீரன்கோபால் அன்றைய தேதியில் ஆஜராகி போலீஸார் கேட்கும் ஆவணங்கள் இருக்குமாயின் அதை தரலாம் என்றும் அவரை துன்புறுத்தாமல் இந்த விசாரணை நடைபெறவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

 

g

 

இதனைத் தொடர்ந்து இன்று (01-04-2019) மாலை 2:50 மணிக்கு சென்னை எழும்பூரிலுள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரானார் நக்கீரன் கோபால்.  இவருடன் சென்ற வழக்கறிஞர்கள் இளங்கோவன், சிவக்குமார், வெங்கடாஜலபதி ஆகியோரை வேறொரு அறையில் இருக்கும்படி கூறிவிட்டு,  சாட்சியான நக்கீரன் கோபாலை மட்டும்  தனி அறையில் வைத்து குற்றஞ்சாட்டப்பட்டவரைப்போல் விசாரித்திருக்கிறார்கள் எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீஸார்.  

 

g

 

கிட்டத்தட்ட, 4 மணி நேரத்துக்கு மேலான விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த நக்கீரன் கோபால்,  சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்  பத்திரிகை ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “இவ்வளவு கொடூரமான பாலியல் கொடூரத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது நக்கீரன். ஆனால், ஏன் வெளிக்கொண்டு வந்தீர்கள்? என்று கேட்பதுபோல் இருந்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸின் விசாரணை.  அதுவும், 1200 க்குமேற்பட்ட வீடியோக்கள் எங்கே?  இதை, யார் உங்களுக்கு கொடுத்தது?  பெயர் மறைத்து வெளியிட்டுள்ள இளம்பெண்களின் பெயர்கள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.ஏற்கனவே புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்டதால்தானே எஸ்பி பாண்டியராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் உள்ளார்.

 

g

 

பத்திரிகை தர்மத்தின் அடிப்படையில் யார் தகவலைக் கொடுத்தார்கள் என்று சோர்ஸை காட்டிக்கொடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.   நாங்கள் கேட்குற கேள்விகளுக்கு பதில் சொல்லலைன்னா  என்ன ஆகும் தெரியுமில்ல என்று மிரட்டல் தொனியில் கேட்டார் ஒரு டி.எஸ்.பி.  ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு பதம் என்பதுபோல் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரங்களுக்கு ஒரு வீடியோவே சாட்சி. அந்த பெண்ணின் கதறல் வீடியோவைப் பார்த்தபிறகும்கூட எப்படி இப்படியெல்லாம் என்னிடம் கேட்கத் தோன்றுகிறது என்று  விசாரணை பெண் போலீஸாரிடம் கேட்டேன். அவர்கள்,  எழுப்பிய கேள்விகள் என்னை மன வேதனை அடைய வைத்தது.  ஏழு வருடங்களாக நடக்கிறது என்று எழுதியிருக்கிறீகளே உங்களுக்கு எப்படி தெரியும்?  இப்படி பல்வேறு கேள்விகளை எழுப்பியது... அந்த குற்றவாளிகளை மட்டுமல்ல அவர்களுக்கு பின்னால் இருக்கும் பெரிய ஓநாய்களையும் காப்பாற்றுவதுபோல் இருந்தது விசாரணை.

 

g

 

ஒரு பத்திரிகை செய்தி வெளியிடுகிறது என்றால் அதன் பின்னணியை விசாரிக்கவேண்டியது போலீஸ்.  ஆனால்,  உண்மை செய்தியை வெளியிட்ட எங்களையும்  எனது தம்பிகளையும் மிரட்டி இனி  பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்த செய்தி வெளிவரக்கூடாது என்று மிரட்டுவதுபோல் இருந்தது சி.பி.சி.ஐ.டி. விசாரணை.  சட்டம் தெரியாமலா 31 வருடங்களுக்கு மேலாக பத்திரிகை நடத்திக்கொண்டிருக்கிறோம்? உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி 4 மணிநேரத்துக்குமேலாக என்னை துன்புறுத்துவதுபோல் கேள்வி எழுப்பினார்கள். வரும்  3-ந்தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று இன்னொரு சம்மனைக் கொடுத்தார்கள். அவ்வளவு சீக்கிரம் ஆவணங்களை தர இயலாது. எங்களிடம் உள்ள ஆவணங்களை விரைவில் சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்” என்றார் வேதனையுடன்.


 

g

 

ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் அனுப்பிவிட்டு ஆவணங்களைக் கொடுத்தது யார்? தகவல் கொடுத்தது யார்? என்று ஆசிரியர் நக்கீரன் கோபாலை  விசாரித்திருப்பது பொள்ளாச்சி பாலியல் கொடூரன்களை காப்பாற்றுவதுபோல் உள்ளது.

 

மேலும், கைது செய்யப்பட்ட நான்கு பேரை மட்டுமே வைத்து  அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிருக்கும் சிபிசிஐடி போலீஸ் நக்கீரனிடம் வேறு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா என்று சோதனையிடவே இப்படி ஒரு விசாரணையை செய்திருக்கிறது என்பது  தெரியவருகிறது.   சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்கை இன்னும் சிபிசிஐடி போலீசே விசாரிப்பதன் உள்நோக்கம் தற்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.