Skip to main content

பட்டாசு நேரக்கட்டுப்பாடு: 108 வழக்குகள் பதிவு

Published on 06/11/2018 | Edited on 06/11/2018

 

இரண்டு மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்திருந்தது உச்சநீதிமன்றம். எந்த இரண்டு மணிநேரம் என்பதை அந்தந்த அரசுகளே முடிவுசெய்து கொள்ளட்டும் எனவும் தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் நேரத்தை நிர்ணயித்திருந்தது. இந்த நேரத்தை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188ன் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது 200 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.


 
மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை வெடிக்க தடையில்லை என்ற தகவல் உண்மையல்ல என தீயணைப்புத்துறை கூறியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் காவல்துறை கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது திருநெல்வேலியை அடுத்த சேரன்மாதேவியில் தடைசெய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 108 பேர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
passed away toll rises to 10 in firecracker factory incident

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமி புரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்துவந்த நிலையில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரில் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும் போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

Next Story

அயோத்தியை சேரும் முன்னரே வெடித்து சிதறி விபத்து; பரபரப்பு காட்சிகள் வெளியாகி வைரல்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
 Sivakasi firecrackers burst before reaching Ayodhya; Exciting scenes have gone viral

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு பிரபலங்கள், பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் பாஜக, ராமர் கோவிலை அயோத்தியில் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக ராமர் கோவில் விவகாரத்தை வைத்து பிரச்சாரம் நடத்தி இருந்தது.

தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிற நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. கோவில் வேலைகள் முழுமையாக முற்றுப்பெறாத நிலையில், பாஜக அரசு தேர்தலை காரணம் காட்டி முன்கூட்டியே கோவிலை திறப்பதாகவும், இது அரசியல் செயல்திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

காங்கிரஸ் ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பை நிராகரித்துள்ளது. இந்நிலையில், எஞ்சிய பணிகள் விரைவில் முடியும் என பாஜக ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் பல சங்கராச்சாரியார்களும் குடமுழுக்கை எதிர்ப்பதால் அயோத்தியில் பரபரப்பு நிலவியுள்ளது. மேலும் நாங்கள் ராமர் கோவில் கட்டுவதை எதிர்க்கவில்லை. இந்த நேரத்தில் இங்கு கும்பாபிஷேகம் நடப்பதைத்தான் எதிர்க்கிறோம் என அயோத்தியைச் சார்ந்த சில தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதில் கரசேகவராக இருந்து போலீசார் துப்பாக்கி சூட்டில் முதுகில் குண்டடிபட்ட சினில்குமார் கூறும்போது, ''நாங்கள் மட்டுமல்ல பல சங்கராச்சாரியார்களும் வருகின்ற 22 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த கும்பாபிஷேகத்தை ஏற்கவில்லை. நானும் அயோத்திவாசிதான். 1992 ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்ட போது நானும் சென்றேன். போலீஸ் சுட்டதில் என் மீது குண்டு பாய்ந்தது. நாங்கள் மட்டுமல்ல ஏராளமான சங்கராச்சாரியார்களும் 28 ஆம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்தை ஆதரிக்கவில்லை'' என்றார்.

 Sivakasi firecrackers burst before reaching Ayodhya; Exciting scenes have gone viral

இந்நிலையில் இன்னும் சில தினங்களே ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இருக்கும் நிலையில், அங்கு விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில் தமிழகத்தின் சிவகாசியில் இருந்து அயோத்தி பண்டிகைக்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் திடீரென சாலையிலேயே விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் உனாவ் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.