Skip to main content

அடுத்து எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும்... முதல்வர் யார்..? தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்!

Published on 08/03/2021 | Edited on 11/03/2021

 

Which party will rule next ... Who is the Chief Minister ..? Tamil Nadu politics and astrology!

 

தொகுதி ஒதுக்கீட்டுக்குப் பிறகு, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள். அடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார்? அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைச் சந்திப்பவர்கள் யார்? என்ற கேள்விகள் எழும். தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமோ? என்ற கவலை, சம்பந்தப்பட்ட கட்சிகளைப் போலவே, வேட்பாளர்களையும் ஆட்டிப்படைக்கும். இதற்கான தீர்வு, வாக்காளர்களின் விரல்களில் இருந்தாலும், முடிவுகள் தெரியும் வரை வேட்பாளர்களின் மனம் இருப்பு கொள்ளாது. ஆறுதலான வார்த்தைகளுக்காக, நம்பிக்கையான ஜோதிடர்களிடம் சென்று, பரிகாரம் தேடி, நற்பலனை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சில ஜோதிடர்கள் அந்த வேட்பாளர்களிடம் “நீங்க நிச்சயம் ஜெயிப்பீங்க.. இத நான் சொல்லல.. உங்க கட்டம் சொல்லுது..” என்று நம்பிக்கை வார்த்தைகளை அள்ளித்தெளித்து, அந்த நேரத்தில் ‘கூல்’ செய்துவிடுவர்.

 

‘ஜோதிடம் என்பது ஒரு கணிதமே! இது அறிவியல்பூர்வமானது என்பதைவிட, விஞ்ஞானபூர்வமானது என்பதே சரி!’ என்று ஒரு தரப்பு கூறி வந்தாலும், ‘ஜோதிடம் முற்றிலும் வணிகமயமாகிவிட்டது. அறிவியல்பூர்வமானதல்ல! வானத்தில் உள்ள நட்சத்திரங்களும் கிரகங்களும் எந்த விதத்திலும் மனிதர்களைக் கட்டுப்படுத்தாது..’ என்ற எதிர் கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

 

‘நம் முன்னோர்கள் சூரியக் குடும்பத்தின் அடிப்படையில் வகுத்த சில கணித முறைகளைப் பின்பற்றியே, இந்நாளில் ஜோதிடம் பார்க்கப்படுகிறது. இது ஒரு கணிப்பு! அவ்வளவே! கணிப்புகள் சில சமயங்களில் தவறாகலாம். ஆனாலும், ஜோதிடத்தைக் கற்றுத் தேர்ந்து ஓரளவுக்குத் துல்லியமாகக் கணிப்பவர்களும் உண்டு.’ என்ற பொதுவான கருத்தே ஆன்மிக நம்பிக்கையாளர்களிடம்  பரவலாக வெளிப்படுகிறது. 

 

Which party will rule next ... Who is the Chief Minister ..? Tamil Nadu politics and astrology!

 

சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண் கல்வி போன்ற முற்போக்கான கொள்கைகளை வலியுறுத்தும் புரட்சிகரமான சிந்தனையுடனே, திராவிடக் கட்சியான திமுக-வின் ஆட்சி 1967-இல் தமிழகத்தில் மலர்ந்தது. 1977-இல், பகுத்தறிவுக் கொள்கையில் பெரிதாக ஈடுபாடு காட்டாத அதிமுக ஆட்சி அரியணை ஏறியது. 1991-இல் அதே அதிமுக ஆட்சியின் முதலமைச்சரானார் ஜெயலலிதா. அழுத்தமான ஆன்மிக நம்பிக்கையுள்ள அவர், பின்னாளில் ஜாதகத்தைப் பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையை மேற்கொண்டதும் நடந்தது. அவர் ஆரம்பித்து வைத்ததுதான்! அரசியலும் ஜோதிடமும் தற்போது பிரிக்க முடியாததாகிவிட்டது. சசிகலா, தற்போது அரசியலைவிட்டு ஒதுங்கியிருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஜோதிட கணிப்பே பிரதானமாக உள்ளது. 

 

Which party will rule next ... Who is the Chief Minister ..? Tamil Nadu politics and astrology!

 

சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த  வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கில், 1996-இல் கைதானார் ஜெயலலிதா. 1997-இல் தோழி சசிகலா உள்ளிட்ட, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் மீதான 47 ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு மூன்று சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது அன்றைய திமுக அரசு. நிலக்கரி இறக்குமதி ஒப்பந்த வழக்கு, ப்ளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, டான்சி நில ஒப்பந்த வழக்கு என வழக்குகள் துரத்தினாலும், 2001-இல் இரண்டாவது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. டான்சி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட, முதல்வர் பதவியை இழந்தார். பிறகு, இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, 2002-இல் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் முதல்வரானார். ஆனாலும், 2003-இல் திமுகவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

 

Which party will rule next ... Who is the Chief Minister ..? Tamil Nadu politics and astrology!

 

மாறி மாறி சோதனைகளை ஜெயலலிதா சந்தித்துவந்த நிலையில், 2006-இல் சட்டமன்றத்துக்கான தேர்தல் வந்தது. அரசியல் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்கும், வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், தெய்வ வழிபாடுகளும் யாகபூஜைகளும் போதாதென்று, ஜோதிடத்தை முழுமூச்சாக நம்பினார். ‘இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்குமா? நான் மீண்டும் முதலமைச்சராக முடியுமா?’ எனத் தன்னைத் துளைத்தெடுத்த சந்தேகத்தை ஜோதிடர்களிடம் முன்வைப்பதற்கு ஆயத்தமானார். தனக்கு வலதுபக்கம் சசிகலாவையும்,  இடதுபக்கம் மகாதேவனையும் வைத்துக்கொண்டு, எதிரே மூன்று மூன்றாக 9 இருக்கைகளில்  ஜோதிடர்களை அமரச் செய்து, கேள்வியை வீசினார். ‘அம்மா.. உங்க ஜாதகப்படி  நீங்கதான் அடுத்த முதல்வர்..’ என்று ஜோதிடர்கள் கோரஸாகக் கூற, அவர்களில் வயதான குருக்கள் ஒருவர் ‘ஜெயலலிதா என்னும் நான் என்று பதவியேற்பீர்கள். இதைப் பகவானே சொல்லிட்டார்..’ என்று சிலிர்க்க, பூரித்துப்போனார் ஜெயலலிதா. 

 

Which party will rule next ... Who is the Chief Minister ..? Tamil Nadu politics and astrology!
                                                        மகாதேவன்


அவர்களில் ஒரு ஜோதிடர் மட்டும் ‘இந்தத் தேர்தலின் மூலம் அதிமுகவால் ஆட்சியமைக்க முடியாது. 60-லிருந்து 65 சீட்கள்தான் கிடைக்கும். நீங்கள் முதலமைச்சராக முடியாது..’ என்று குரலில் அழுத்தம் தந்து பேச, அந்த நொடியே ‘கெட்-அவுட்’ என்று ஜெயலலிதா சீற, போயஸ் கார்டனே அதிர்ந்தது.  மகாதேவனால் அழைத்துவரப்பட்ட அந்த ஜோதிடர் உடனே வெளியேறினார். 

 

யார் அந்த ஜோதிடர்..?

 

தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா ‘என்னென்ன’ செய்தார்? - தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்! #2  

 

 

 

 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.