Skip to main content

காங்கிரஸை திட்டினால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா? -வானதி சீனிவாசன் 

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். 
 

காங்கிரஸை திட்டுவதை விட்டு கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனைகளை பட்டியலிடுங்கள் என பிரதமர் மோடியை பிரியங்கா காந்தி கேட்டிருக்கிறாரே? 
 

 

rahul

 

ஒவ்வொரு பொதுக்கூட்ட மேடைகளிலேயும், ஒவ்வொரு மாநிலங்களுக்கு செல்லும்போதும் தன்னுடைய அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்பதை மிக விரிவாக மோடி பேசிக்கொண்டிருக்கிறார். பிரியங்கா காந்தி காங்கிரஸ் என்கிற வார்த்தை வரும்போது மட்டும் பிரதமரின் பேச்சை கவனிக்காமல் மற்ற அத்தனைப் பேச்சுக்களையும் உற்று கவனித்தால் பிரதமர் என்ன செய்திருக்கிறார் என்பது புரியும். 
 

காங்கிரஸ் பதவிக்காக அலைகிறது என்று சொல்லும் மோடி, பாஜகவும் பதவிக்காகத்தானே தேர்தலில் போட்டியிடுகிறது என்பதை ஏன் மறந்துவிடுகிறார்?
 

 

பதவி என்பதை பாரதீய ஜனதா கட்சி மக்களுக்கு சேவை செய்கின்ற ஒரு வாய்ப்பாக பார்க்கிறது. கடைக்கோடி மனிதனுக்கும், கடைக்கோடி குடிமகனுக்கும் அவனை முன்னேற்றுவதற்கான வழி என்பதுதான் தங்களுக்கு பிரதான குறிக்கோள் என பாஜக உழைத்துக்கொண்டிருக்கிறது. பாஜக என்பது ஒரு தனிமனிதரின் பின்னாலேயோ, ஒரு தனிக்குடும்பத்தின் பின்னாலேயோ இயங்குகின்ற கட்சி அல்ல. முழுக்க முழுக்க ஜனநாயக ரீதியாக இந்த நாட்டில் இருக்கின்ற, அரசியலில் ஈடுபட துடிக்கின்ற அத்தனைப் பேருக்கும், தகுதியும் திறமையும் இருக்கின்றபோது உயர் பதவிகளுக்கு வர முடியும் என்பதை காட்டிக்கொண்டிருப்பது பாஜக. பதவிக்காக வருவது என்பது மக்களுடைய சேவையை பிரதானமாக வைப்பது என்பதை பாஜக கொள்கையாக வைத்திருக்கிறது. 

 


3 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து படேலுக்கு சிலை வைத்தும், சொந்த மாநிலமான குஜராத் தொகுதி எதிலாவது போட்டியிடாமல் ஏன் வாரணாசியிலேயே மோடி போட்டியிடுகிறார்?
 

அந்த சொந்த மாநிலத்தில்தான் மூன்று முறை முதல் அமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றிக்கரமாக ஆட்சி செய்தார். கடந்த முறை வாரணாசியில் அவர் போட்டியிட்டார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்பது ஏதோ ஒரு மாநிலத்தை புறக்கணிப்பதாக ஆகாது. இந்த நாட்டின் அத்தனைப்பேருக்கும் சொந்தமான தலைவர். எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் குடும்பத்தில் இருக்கின்ற ராகுல், சோனியா காந்தி ஆகியோர் திரும்பத் திரும்ப ஏன் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்கள்? அவர்களுக்கு தைரியம் இருந்தால் வேறு தொகுதியில் போட்டியிடலாமே? 
 

கங்கையை சுத்தம் செய்வதாக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியும் கங்கை பழைய நிலையிலேயே இருக்கிறதே? வாரணாசி மக்கள் மோடிக்கு வாக்களிப்பார்களா?
 

modi

 

கங்கைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மிகச் சரியாக செலவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 120 வருட காலம் கங்கையை அசுத்தப்படுத்திய கால்வாய்களெல்லாம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. கங்கை நதியினுடைய தூய்மையைப் பற்றி இந்திய அரசாங்கமல்ல, உலக அமைப்புகளே இன்று சான்றுகள் கொடுக்கக்கூடிய அளவில் கங்கை தூய்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. கங்கை தூய்மைப்படுத்தப்படவில்லை என்று அவர்கள் சொல்லுவது தவறு. வாரணாசி மக்கள் வெகு நிச்சயமாக மோடியை தேர்ந்தெடுத்து மக்களவைக்கு அனுப்புவார்கள். 

 

ஏழைத்தாயின் மகன், டீக்கடைக்காரர் என்று சொல்லி பிரதமரான மோடி, இப்போது காவலாளி மோடி என்று கூறினாலும் கிண்டல் செய்கிறார்களே? இதை எப்படி பார்க்கிறீர்கள்? உங்கள் கட்சியின் சத்ருசின்கா காவலாளி என்று மோடி அழைப்பதை விமர்சித்திருக்கிறார். (திரும்ப திரும்ப காவலாளி என்று சொன்னால் ரபேல் பற்றி மக்களே கேள்விக் கேட்பாளர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்)

 

சத்ருசின்காவினுடைய விமர்சனத்திற்கு நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை. தொடர்ச்சியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் கட்சிக்கும், மோடிக்கும் எதிராக கருத்து சொல்லிக்கொண்டிருப்பவர். 
 

ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பாஜக அரசின் சாதனைகளாக எதையுமே பட்டியலிட முடியாதா? காங்கிரஸை திட்டினாலே மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா? 

 

ஒவ்வொரு முறையும் இந்த அரசாங்கம் செய்திருப்பதை நாங்கள் மக்களுக்கு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். காங்கிரஸை திட்டவது மட்டுமே  பிராதான தொழிலாக வைத்துக்கொள்வது இல்லை. ஆனால் வித்தியாசத்தை மக்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். காங்கிரஸ் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகாலம் செய்ய இயலாத விஷயங்களை இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களில் செய்திருக்கிறது என்பதை ஒவ்வொரு முறையும் சாதனைகளாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.
 


புல்வாமா தீவிரவாத தாக்குதலை பாஜக ஓட்டுக்காக தான் திட்டமிட்டு நடத்தியதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் பகிரங்கமாக சொல்லியிருக்கிறாரே?
 

இது மிக கேவலமாக நம்முடைய நாட்டினுடைய மதிப்பை குலைக்கின்ற செயலாக பார்க்கின்ற விமர்சனம். நம்முடைய ராணுவ வீரர்களின் மன உறுதியை குலைப்பதற்காக அரசியலுக்காக இதனை பயன்படுத்துகிறார்கள். இந்த நாட்டில் இதற்கு முன்பாக பல்வேறு முறை நம்முடைய ராணுவ வீரர்கள் மீதும், நம்முடைய மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான பதிலடி என்பது இப்போதுதான் இந்த அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டு வருகிறது. 
 

தமிழ்நாட்டில் பாஜகவில் எந்த அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்?
 

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பல்வேறு நடைமுறைகளை வைத்திருப்பார்கள். அதில், அந்த பிராந்தியத்தினுடைய தன்மை, அங்கு இருக்கும் கட்சியின் வளர்ச்சி என பல்வேறு விஷயங்களை பார்த்து ஒவ்வொரு தேர்தலிலேயும் வேட்பாளர் தேர்வு இருக்கும். அதிலும் பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் தனியாக பாராளுமன்ற போர்டு என இருக்கிறது. அந்த பாராளுமன்றக் குழு, ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலுக்கும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் மிக வெளிப்படையான தன்மையை பின்பற்றுகிறது. மாநில கமிட்டிகளிடமிருந்து பெயர்கள் வரவழைக்கப்பட்டு பரிசீலனை செய்துதான் அறிவிக்கிறார்கள். 

 

vanathi


 

பாஜகவினர் எதிர்பார்த்தார்களோ இல்லையோ, மாற்று கட்சியினர் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என்று கூறி வந்தார்கள். வேட்பாளர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறவில்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதை முழு மனதோடு நிறைவேற்றுகிற இடத்தில் நான் இருக்கிறேன். இதே அரசியல் கட்சித்தான் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு முறை வாய்ப்பு அளித்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வாய்ப்பு வழங்கியது, அதற்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து, சேலத்தில் இருந்து நீலகிரி வரை இருக்கின்ற பகுதிக்கும் என்னை பொறுப்பாளராக அறிவித்தது. என்னை எந்த தேர்தலில் வேட்பாளராக களம் இறக்க வேண்டும் என்பது கட்சிக்கு தெரியும். 87ஆம் வருடம் மாணவப் பருவத்திலேயே இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கக்கூடிய எனக்கு எந்த நேரத்தில் எந்த பதவி தருவது என்பது கட்சியினுடைய முடிவு. முழுமையாக இந்த கட்சியை நான் நம்புகிறேன். 
 

தேர்தலுக்குப் பின்னர் தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வருமா?

இதெல்லாம் கட்சி முடிவெடுக்க வேண்டிய விஷயம். 

 

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.