Skip to main content

நித்தியானந்தா ஆசிரமத்திற்குள் பாதாள சிறைகள்! மகளைத் தேடியும் அலையும் குடும்பம்! 

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Underground prisons inside Nityananda Ashram! The family is looking for a daughter!
திருவண்ணாமலை ஆசிரமம் 

 

இளம்பெண் மாயமான விவகாரத்தில் போலி சாமியார் நித்தியானந்தாவின் திருவண்ணாமலை ஆசிரமம் அதிரடி ரெய்டுக்கு ஆளானது.

 

கர்நாடகா மாநிலம் பெங்களுரூ ஆர்.ஆர் நகரைச் சேர்ந்தவர் நாகேஷ். பொறியாளரான அவர், போலிச் சாமியார் நித்தியானந்தாவின் முன்னாள் பக்தர். அதனால் அப்போது கல்லூரிப் பேராசிரியராக இருக்கும் தன் மனைவி மாலா மற்றும் தம் இரண்டு மகள்களுடன் நித்தியின் பிடதி ஆசிரமத்தில் நடக்கும் சத்சங்க நிகழ்ச்சிக்குச் சிலமுறை சென்றுவந்திருக்கிறார். அந்த வகையில் அங்கு சென்று அவர்கள் திரும்பும்போது, அவர்களின் இளையமகள் மட்டும், ”நான் ஆசிரமத்தை விட்டு இப்போதைக்கு வரமாட்டேன். கொஞ்சநாள் இருந்து இங்கு நடப்பதைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, அங்கேயே இருந்துகொண்டார்.

 

இந்த நிலையில், நாகேஷின் இளைமகளிடம் இருந்து சரியான தகவல்கள் வராததால், மகளைப் பார்க்க பிடதி ஆசிரமத்திற்குச் சென்றிருக்கிறார் நாகேஷ். அப்போது ஆசிரம ஆட்கள், "உங்களைச் சந்திக்க மகள் விரும்பவில்லை” என்று கூறி அவரைத் துரத்தினர். மகளைத் தேடி அங்கு போகும் போதெல்லாம் கடும் மிரட்டலுக்கு ஆளான நாகேஷ், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, கர்நாடக போலீஸிடம் புகாரோடு போயிருக்கிறார். அங்கே பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

 

Underground prisons inside Nityananda Ashram! The family is looking for a daughter!

 

இந்த நேரத்தில் நாகேஷின் இளைய மகள், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இருப்பதாக நாகேஷுக்குத் தகவல் கிடைக்க, அவர் திருவண்ணாமலைக்கு குடும்பத்தோடு விரைந்து வந்தார். அங்கும் புகார் கொடுத்தார். அதில், தன் மகளை நித்தித் தரப்பு வெளியே வரமுடியாதபடி அடைத்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் குறிப்பிட்டிருந்தார்.

 

இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை தாலுகா இன்ஸ்பெக்டர் ஹேமலதா, எஸ்.ஐ. சுமன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி அங்குள்ள நித்தியின் ஆசிரமத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் ஆசிரமக் கதவைத் தட்டிய போது, லேசில் கதவு திறக்கப்படவில்லை. போலீஸ் டீம் எச்சரித்த பிறகு 30 நிமிடம் கழித்தே கதவைத் திறந்திருக்கிறார்கள். அங்கும் நாகேஷின் இளைய மகள் இல்லை. போலீஸ் டீம் விடாப்பிடியாக உள்ளே சென்று ஆய்வு செய்தபோது ரகசிய பாதாள அறைகள் சில, பூட்டப்பட்ட நிலையில் இருந்தன. "அதற்கான சாவி எங்களிடம் இல்லை' என்று அங்கிருந்த நித்தியின் சிஷ்யைகள் கைவிரித்துவிட்டார்கள்.

 

Underground prisons inside Nityananda Ashram! The family is looking for a daughter!
இன்ஸ்பெக்டர் ஹேமலதா,

 

இந்த விவகாரம் குறித்து நாம் காவல்துறைத் தரப்பிடம் கேட்டபோது "நித்தி-ரஞ்சிதா வீடியோ வெளியானபோது திருவண்ணாமலை ஆசிரமம் தான் முதலில் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இருந்தும் இங்குள்ள சில சமூக சேவை அமைப்புகளுக்கு பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து, அவர்களின் ஆதரவோடும் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உதவியோடும் இருந்த நித்தி, எங்கள் காவல் துறை அதிகாரிகளுக்கும் லட்ச லட்சமாய் வாரிக்கொடுக்க, அவர்களும் நித்திக்குத் தலையாட்டும் பொம்மைகளாகி விட்டார்கள். இப்போதும் பணம் தான் நித்திக்குக் கேடயமாக இருக்கிறது. அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதெல்லாம் டிராமா. நித்தியின் பிடியில் போதைக்கு அடிமையாக்கப்பட்ட இளம்பெண்கள் சிலரும் சிக்கி இருக்கிறார்கள். இதுகுறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள்” என்றது அழுத்தமாக.

 

"நாகேஷின் இளைய மகள் போல் நித்தி தரப்பால் மறைத்து வைக்கப்பட்ட இளம்பெண்கள், எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் அத்தனை பேரும் பாதுகாப்போடு இருக்கிறார்களா?' என்கிற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் நாகேஷின் குடும்பம், அவரின் மகளைத் தேடிப் பரிதவித்து வருகிறது.

 

 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.