Skip to main content

"உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு போக வேண்டாம்... எடப்பாடி பழனிசாமி போனால் போதும், திமுக ஜெயித்துவிடும்.." - புகழேந்தி!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

as

 

அதிமுக முன்னணியினர் மீது ரெய்டு நடவடிக்கைகள் தற்போது வேகமெடுத்துள்ளது. கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் தொடங்கிய இந்த ரெய்டு, வீரமணி, சி. விஜயபாஸ்கர், வேலுமணி என்று அடுத்தடுத்த பிரபலங்களை நோக்கி பாய்ந்தது. உச்சகட்டமாக எடப்பாடி பழனிசாமியின் மிக முக்கிய தளபதியாக இருக்கும் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று முன்தினம் (15.12.2021) சோதனை நடத்தியிருந்தார்கள். இந்நிலையில், தங்கமணியிடம் நடைபெற்ற சோதனை, அதிமுக தேர்தல், போயஸ் கார்டன் நினைவு இல்லம் ஆகியவை தொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் முழுவதும் சோதனை நடத்தி முடித்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து இப்படியான ரெய்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன? 

 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பலரும் தொடர் புகார்களை அரசாங்கத்திடமும், காவல் நிலையங்களிலும் கொடுத்துவருகிறார்கள். அதன் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. அதுவும் தற்போது ரெய்டு நடவடிக்கையில் சிக்கியிருக்கும் தங்கமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 

இந்த ரெய்டு மூலம் அதிமுகவை முடக்கப்பார்க்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டுள்ளார்களே? 

 

அதிமுகவில் முடக்க என்ன இருக்கிறது, எல்லாமே முடங்கிப்போய்தானே இருக்கிறது. ஆட்சி அதிகாரம் இருந்தவரையில் ஊரை ஏமாற்றிவிட்டு, கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்குப் பயந்துகொண்டு, அவர்களுக்கு ஜால்ரா போட்டுவந்தார்கள். கட்சியும், இரட்டை இலையும் அவர்களிடம் இருக்கும்வரை அவர்கள் ஆட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அதை தேர்தல் வெற்றியாக இவர்களால் ஒருபோதும் மாற்ற முடியாது. நீங்கள் வேண்டுமானால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஜீரோதான் கிடைக்கும். ஸ்டாலின் பிரச்சாரத்துக்குக் கூட போக தேவையில்லை, எடப்பாடி பழனிசாமி போனால் போதும், திமுக வெற்றி பெற்றுவிடும். 

 

இவர்களால் அம்மா வாழ்ந்த வீட்டைக் காப்பாற்ற முடிந்திருக்கிறதா? இப்போது கேட்டால் மேல் முறையீடு செய்வோம் என்று கூறியிருக்கிறார்களே என்று கேட்கிறீர்கள். சாவியை தீபா வாங்கிவிட்டார். இவர்கள் தற்போது மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கதைவிட ஆரம்பித்துள்ளார்கள். அம்மா அவர்களை வீட்டில் சேர்க்கவே இல்லை, அதற்கு முதலில் காரணத்தை தீபாவை சொல்லச் சொல்லுங்கள், அதைவிட்டுவிட்டு அத்தை வீட்டில் அதைக் காணவில்லை, இதைக் காணவில்லை என்று பஞ்சாயத்து பேசாதீர்கள். சொந்தமாக வாங்கியவன் கூட இவர்களை மாதிரி கவலைப்படுவானா என்று தெரியவில்லை. இந்த எடப்பாடி பழனிசாமி குரூப்புக்கு ஒரு ஆர்டரை ஒழுங்காக போடத் தெரிகிறதா? நீதிமன்றம், நினைவில்லம் என்ற அந்த உத்தரவையே தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அதிமுகவை அடகு வைத்துவிட்டார்கள், அவர்களால் அம்மாவுக்கோ, தொண்டர்களுக்கோ எதுவும் செய்ய முடியாது என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை. 

 

இந்நிலைமையில் இவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். இவர்கள் போராட்ட அறிவிப்பைப் பார்த்ததும் ஸ்டாலின் அப்படியே ராஜினாமா செய்துவிட்டுப் போயிடுவார் என்று பார்க்கிறார்களா? அனைவரும் இவர்கள் போராட்ட அறிவிப்பைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு, எங்களின் வளர்ச்சியைப் பார்த்து எங்களைக் கட்டுப்படுத்த வழக்குப் போடுவதாக வேலுமணி உள்ளிட்டவர்கள் கூறிவருகிறார்கள். என் மீது செடிஷன் வழக்கு போட்டுள்ளார்கள் இவர்கள். அண்ணன் நாஞ்சில் சம்பத் மீது 12 வழக்குகள் இதுவரை போடப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு இது பழிவாங்கும் நடவடிக்கை என்று. தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள்தான், சந்தித்து வெளியே வாருங்கள். வெற்றுக் கூச்சல் போடாதீர்கள். 

 

 

Next Story

ஓபிஎஸ் அணி சார்பில் கர்நாடகாவில் தனித்துப் போட்டி? -ஆலோசனையில் புகழேந்தி

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

eparate competition in Karnataka on behalf of the OPS team? -pughazhendhi in consultation

 

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கர்நாடக அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

 

கர்நாடக மாநில அதிமுக சார்பில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநில கழக செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவைத் தலைவர் ஏ.ஆனந்தராஜ்,  பொருளாளர் மனோகர், இணைச்செயலாளர் வசந்த ராணி, துணைச் செயலாளர் அனிதா, மாவட்ட கழக செயலாளர் முனிரத்தினம், தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணா, பரசுராமன், இஸ்ரேல், பங்காரு பேட்டை ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சண்முகம், ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் எஸ்.ரவி, கோலார் மாவட்ட கழக செயலாளர் சாயி இன் ஷா, காந்திநகர் தொகுதி அவை தலைவர் பாண்டு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

முன்னதாக அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்குக் கழக கொள்கை பரப்பு செயலாளர் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணியில் இணைந்து போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் கோலார் தங்க வயல், காந்திநகர், பங்காரு பேட் போன்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓபிஎஸ்ஸிடம்சமர்ப்பித்து அனுமதி பெறப்படுகிறது என தீர்மானிக்கப்பட்டது.

 

eparate competition in Karnataka on behalf of the OPS team? -pughazhendhi in consultation

 

தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் வா.புகழேந்தி பேசும்போது,''கோலார் தங்கவேல் காந்திநகர் போன்ற இடங்களில் தனித்து நின்று ஜெயலலிதா ஆணைக்கிணங்க தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறோம். ஆகவே இந்த தேர்தலிலும் ஓபிஎஸ் அனுமதித்தால் போட்டியிடத் தயார். தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளராக அவர் இருப்பதால் அவர்தான் ஏ, பி பாரங்களை வழங்க வேண்டும். இரட்டை இலை எங்களுக்குதான் கிடைக்கும். ஓபிஎஸ் நிர்வாகிகளை அறிவித்த பின்னர் இந்த மண்டபத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. மீண்டும் கர்நாடகா கழகம் எழுச்சி பெற்றுள்ளது'' என்றார்.

 

முன்னதாக ஓபிஎஸ் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 24 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு கர்நாடகத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

 

 

Next Story

“வளர்மதி நவீன புரட்சித் தலைவி...” - இ.பி.எஸ் அணியின் மீது புகழேந்தி பாய்ச்சல்

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

pugazhenthi talk about admk and edappadi palanisamy

 

திருச்சியில் வருகின்ற 24-ஆம் தேதி எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் கட்சி 50 ஆண்டுகள் முடிந்து 51 வது ஆண்டின் துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது. அதற்கான முன்னுரையாக நேற்று திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓபிஎஸ் தலைமையிலான தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் மருது அழகுராஜ் பேசுகையில், “அநீதி எழும்போதெல்லாம் திரைப்படத்தில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ராஜ்கிரண் வருவது போல எடப்பாடியின் அரசியல் பித்தலாட்டத்தை கண்டு  எங்கள் அண்ணன் ஓபிஎஸ் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நிற்கிறார். இபிஎஸ் என்ற துரோகியை குறித்து சொல்ல இருவர் இருந்தால், ஓபிஎஸ் என்ற உத்தமரை சொல்ல 4பேர் இருப்பார்கள். எனவே இங்குள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய பங்கிற்கு அதிகமான சீர் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். சமீபத்தில் ஒருவர் சீர் கொண்டு சென்றார். எடப்பாடி வயதிற்கு வந்துவிட்டாரோ? அதுவும் புதுக்கோட்டையில் இருந்து சீர் கொண்டு செல்லப்பட்டது. அந்த சீரில் குட்கா கொண்டு சென்றுள்ளனர். ஓபிஎஸ் செய்த ஒரு தவறை இபிஎஸ்ஸை சொல்லச் சொல்லுங்கள். எடப்பாடி செய்த துரோகத்தை வெளிச்சம் போட்டு இந்த ஊருக்கு சொல்லும் நாள் ஏப்ரல் 24 தான், இலை கோட்டையின் பலத்தை இந்த மலைக்கோட்டையில் காட்ட வேண்டும். திருச்சியில்  கடல் இல்லை என்ற ஒரு குறையை ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டு வரவேண்டும். இதை பார்க்கும் இபிஎஸ்க்கு லூஸ்மோசன் போக வேண்டும்” என்றார்.

 

புகழேந்தி கூறுகையில், “பிரதமரை பார்க்க ஓபிஎஸ் வந்தபோது இபிஎஸ் ஓரமாக ஒதுங்கி நின்றார். ஆனால் பிரதமர் ஓபிஎஸ்ஸை சந்தித்தாரே அவருடைய காலில் வந்து விழச் சொல்லுங்கள். வழக்கு தோல்வி அடைந்து விட்டதாகப் பலர் என்னிடம் கேட்டார்கள். இது தர்ம யுத்தம் டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவோம் என்று கூறினேன். இபிஎஸ் மீது தேர்தல் ஆணையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என இபிஎஸ் மனு அளித்தார். ஆனால் நீதிபதி தன்னால் விசாரிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். 1996ல் திருச்சியில் அன்று ஜெயலலிதா விடிய விடிய மாநாட்டை நடத்தினார்கள். நாம் நடத்தப்போகும் மாநாட்டில் நீங்கள் இராணுவ சிப்பாய்கள் போல இருந்து செயல்பட வேண்டும். எடப்பாடியை தகர்க்க எடப்பாடியில் இருந்து மிகப்பெரிய கூட்டம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்றைய காலகட்டத்தில்  நவீன பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் என்று பலர் அழைக்கப்படுகிறார்கள். அதில் பொன்னையன் தான் நவீன தந்தை பெரியார், அண்ணா யார் என்றால் கே.பி முனுசாமி, இன்னொருவர் தொப்பியும் கண்ணாடியும் போட்டுக் கொண்டு வலம் வந்தார்.  

 

வளர்மதி தான் நவீன புரட்சித் தலைவி, இது வெட்கக்கேடானது. அதேபோல் ஜெயகுமார் பேசுகிறார், "மாநாடு குறித்து பேசியவர் முதலில் தெருக்கூட்டம் என்றவர் கருப்புப் பணம் 200கோடியை வைத்து மாநாடு நடத்தப்படுகிறது" என்று கூறுகிறார். மாநாடு முடிந்த பிறகு மைதானத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் கேன்கள், பைகள் சேகரிக்கும் டெண்டரை ஜெயக்குமாருக்கு கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.  எடப்பாடி பல தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் ஓபிஎஸ் ஒரு முறை கூட தோற்கவில்லை. பிரதமர் ஓபிஎஸ்ஸை சந்தித்த போது தோளில் தட்டிக் கொடுத்ததற்கு காரணம் மீண்டும் நீங்கள் முதலமைச்சர் ஆவீர்கள் என்பதற்காகவே. ஓபிஎஸ் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்து நிறைய இழந்து விட்டார். ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும் ஓபிஎஸ்சை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  தற்போது இருக்கும் சபாநாயகர் புத்திசாலியானவர். இபிஎஸ்சின் திட்டம் என்ன என்று நன்றாகத் தெரியும். சட்டமன்றத்தில் மிகச் சிறப்பாக இபிஎஸ்ஸை கையாண்டு வருகிறார்.  ஏப்ரல் 24 இபிஎஸ்ஸின் அரசியலுக்கு சாவு மணி அடிக்கும் மகிழ்ச்சியான தருணமாக அமைய வேண்டும்” என்றார்.