Skip to main content

ஸ்டீவ் ஜாப்ஸ்: சாதனை மனிதனின் சர்ச்சைகளும், சறுக்கல்களும்..!

Published on 05/10/2019 | Edited on 11/10/2019

நிதானிக்க நேரமில்லாமல் எதையோ துரத்தி ஓடிக்கொண்டிருக்கிற இன்றைய இந்த தலைமுறையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, அவர்களது முன்னேற்றத்திற்கு துணைபுரிவது என்றால் அது தொழில்நுட்பங்கள் தான். இப்படி உலகையே இயங்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர்களாக இருவரை கூறலாம். ஒருவர் அமைதியானவர், பணம் சம்பாதிப்பதில் குறியானவர், சிறந்த தலைமை பண்புடையவர் என பெயரெடுத்தவர்.  மற்றொருவர் கரடுமுரடானவர், வளர்ச்சியில் குறியானவர், எதேச்சதிகார பண்புடையவர் என பெயரெடுத்தவர். இதில் முதல் நபர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். இரண்டாவது நபர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். 

பிறந்தது முதலே பல்வேறு துன்பங்கள், சறுக்கல்கள், சர்ச்சைகள் என பலவற்றை கடந்து தொழில்நுட்ப உலகையே கட்டி ஆட்சிபுரிந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் பிறந்த இரண்டாவது மாதமே அவரது வாழ்க்கையை சர்ச்சைகள் ஆட்கொள்ள தொடங்கிவிட்டன எனலாம்.  1955, பிப்ரவரி 24 ஆம் தேதி இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த அப்துல்பட்டா ஜந்தாலி- ஜோன் சிம்ப்சன் ஆகிய இருவருக்கும் பிறந்தவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இவரது தந்தை சிரியாவை சேர்ந்தவர், தாய் ஜெர்மன் வம்சாவளியை சேர்ந்தவர். இவர்கள் இருவரின் காதலுக்கு ஜோன் சிம்ப்சனின் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக ஸ்டீவ் ஜாப்ஸை தத்துக்கொடுக்க முடிவெடுத்தார் அவரது தாய். கணவர் அப்துல்பட்டா ஜந்தாலிக்கு தெரிவிக்காமல் அதற்கான ஏற்பாடுகளை செய்த அவர், பால்-கிளாரா தம்பதிக்கு ஜாப்ஸை தத்துக்கொடுத்தார். 2 மாத குழந்தையான ஸ்டீவ் பல்வேறு சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குக்கு பின்னர் பால்-கிளாரா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டார். 

 

steve jobs life history

 

 

சிறு வயது முதலே தொழில்நுட்பங்களில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் புத்தகங்களை கடந்து மனிதர்களையும், தொழில்நுட்பங்களையுமே அதிகம் பயின்றார் எனலாம். முன்கோபமும், பிடிவாதமும் ஒருங்கே கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ், தனது இந்த குணங்களால் பலமுறை பள்ளி, கல்லூரிகளில் இருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மீதான ஆர்வம் குறைந்துகொண்டே சென்ற அதே நேரத்தில், தொழில்நுட்பம் குறித்த கனவுகள் அவரை தூக்கமில்லாமல் புரளச்செய்தன. தொழில்நுட்பத்தை கொண்டு சாதிக்க முடிவெடுத்த ஸ்டீவ், தனது கல்லூரி படிப்பை உதறித்தள்ளினார். 

1976, ஏப்ரல் 1, தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் அசைக்கமுடியாத சக்தியாக மாறப்போகும் ஒரு நிறுவனத்தை, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மிக எளிமையாக ஆரம்பித்தார் ஸ்டீவ். அதற்கு ஆப்பிள் என பெயரும் வைத்தார். அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த விலை உயர்ந்த கம்ப்யூட்டர்களை பொதுமக்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் கொண்டுசேர்க்க நினைத்தார் ஸ்டீவ். ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கிய 10 ஆவது நாளில், அதன் முதல் கம்ப்யூட்டரான ஆப்பிள் 1 ஐ உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தார் ஸ்டீவ். அங்கு தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிப்பயணம் 1985 ஆம் ஆண்டு வரை யாரும் நெருங்க முடியாத அளவு வேகமாக பாய்ச்சல் எடுத்தது. இந்த வெற்றிப்பயணத்தின் நடுவே அவரால் எடுக்கப்பட்ட சில முடிவுகள் அவருக்கே பாதகமாக அமையப்போவது அறியாமல், தனது கனவுகளை நோக்கி பயணித்து கொண்டிருந்தார் ஸ்டீவ். 

 

steve jobs life history

 

அப்படி அவர் எடுத்து முடிவு ஒன்று தான் 1985 ல் அவரை ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியே அனுப்பியது என்று கூறலாம். 1983 ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்திலிருந்த ஜான் ஸ்கல்லி என்பவரை, ஆப்பிள் நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார் ஸ்டீவ். ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ வாக ஜான் ஸ்கல்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த சூழலில் 1985 ஆம் ஆண்டு ஆப்பிள் 2 தொடர்பாக ஸ்டீவ் மற்றும் ஜான் ஸ்கல்லி இடையே ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாடு, ஸ்டீவை ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேற வைக்கும் அளவு விஸ்வரூபம் எடுத்தது. இந்த கருத்து மோதலின் விளைவாக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து, தான் வேலைக்கு சேர்த்த ஜான் ஸ்கல்லியாலேயே வெளியேற்றப்பட்டார் ஸ்டீவ். ஜான் ஸ்கல்லியின் இந்த முடிவிற்கு ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என அப்போது அந்நிறுவனம் அறிந்திருக்கவில்லை.

வெளியே வந்த ஸ்டீவ், நெஸ்ட் என்ற நிறுவனம் ஒன்றை தொடங்கினார். நெஸ்ட் நிறுவனம் எதிர்பாராத தோல்விகளை ஸ்டீவுக்கு பரிசாக அளித்தது. ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறியது, நெஸ்ட் சோபிக்காதது என அடுத்தடுத்த சறுக்கல்களை சந்தித்திருந்த ஸ்டீவ், திரைத்துறை நோக்கி தனது பார்வையை திருப்பினார். பிக்ஸார் கிராஃபிக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அந்நிறுவனத்தில் எடுக்கப்பட்ட 'டாய் ஸ்டோரி' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. துவண்டிருந்த ஸ்டீவ் மீண்டும் வெற்றியை நோக்கி ஓட ஆரம்பித்த காலம் அது. பிக்ஸார், நெஸ்ட் என துவண்டிருந்த ஸ்டீவின் சாம்ராஜ்யம் மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியே வந்த ஸ்டீவ், மீண்டும் ஒரு முதன்மை தொழில் நிறுவனத்தை கட்டமைத்து எழுப்புவதில் வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்தார். ஆனால் ஸ்டீவை இழந்த ஆப்பிள் நிறுவனமோ திவால் அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. 

 

steve jobs life history

 

1996, திவால் விளிம்பில்  தத்தளித்து கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம் மீண்டும் ஸ்டீவை தேடியது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 1997ஆம் ஆண்டு தனது நெஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனத்துடன் இணைத்தார் ஸ்டீவ். சரிந்துகொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்தை மீண்டும் தூக்கிநிறுத்த அவருக்கு ஒரு மிகப்பெரிய துணை தேவைப்பட்டது. அப்போது அவருக்கு கை கொடுத்தவர்தான் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரே காலகட்டத்தில் துவங்கப்பட்ட நிறுவனங்கள்தான். தொடக்க காலத்தில் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றினாலும் பின்னர் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.

"மைக்ரோசாப்ட் நிறுவனம் ரசனையில்லாதது. மூன்றாம் தர தயாரிப்புகளை மக்களுக்கு தருபவை" இவை 1996 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் குறித்து ஸ்டீவ் கூறியவை. இரு நிறுவனங்களும் பரஸ்பரம் விமர்சித்துக்கொண்டாலும், ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ் தனிமனித நாகரிகத்தை முறையாக கடைபிடிப்பவர்களாகவே இருந்தனர். தொழில் ரீதியாக பல போட்டிகளை சந்தித்தாலும், அன்றைய சூழலில் இணைந்து பணியாற்றுவதே சிறந்தது என முடிவெடுத்தன இரு நிறுவனங்களும். இதன் பலனாக திவால் நிலையில் இருந்த ஆப்பிள் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணித்தது. 

 

steve jobs life history

 

கணினிகள் தயாரிப்பை கடந்து எதிர்கால தொழில்நுட்பங்கள் சார்ந்த சாதனங்களையும் தயாரிப்பது என முடிவெடுத்தது ஆப்பிள். அதன்படி வாக்மேன்களை தூக்கிக்கொண்டு மக்கள் திரிந்த காலத்தில், பாடல்களை கேட்பதற்காக சிறிய அளவிலான ஐபாட் -ஐ அறிமுகம் செய்தது. இது மிகப்பெரிய வெற்றியை அந்நிறுவனத்திற்கு தேடித் தந்தது. ஐபாட் கொடுத்த வெற்றி உற்சாகத்துடன், 2007ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் துறையில் கால்பதித்தது ஆப்பிள். "ஆடம்பரமாக செலவு செய்யும் பணக்காரர்களுக்கானது இந்த போன்கள்" என கமெண்ட் அடித்தார் பில் கேட்ஸ். அப்படி கூறப்பட்டாலும், விலையும் அதிகமாக இருந்தாலும், அதன் தரம் மக்களை கவர்ந்தது. விளைவு, ஸ்டீவ் எதிர்பார்த்தது போலவே மாபெரும் வெற்றியாக அமைந்தது ஐபோன்.

பெற்றோர் கைவிட்டது, கல்லூரி படிப்பு இடைநிறுத்தம், ஆப்பிள் நிறுவனம் தொடக்கம்,  ஆப்பிளில் இருந்து வெளியேற்றம், நெஸ்ட், பிக்ஸார் கொடுத்த வெற்றிகள், ஆப்பிள் நிறுவனத்தை மீட்டெடுக்க கடின உழைப்பு, ஐபாட், ஐபோன் வெற்றி என வாழ்க்கை முழுவதும் சறுக்கல்களையும், சாதனைகளையும் மாறிமாறி சந்தித்த ஸ்டீவ் ஜாப்ஸ் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வீழ்ந்தார். பின்னர் ஏற்பட்ட நோயின் கடுமையான தாக்கத்தால் 2011, அக்டோபர் 5 அன்று உயிரிழந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். 

 

steve jobs life history

 

பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் வாழ்ந்தவர் ஸ்டீவ். தொழில் ரீதியாக ஐ.பி.எம், மைக்ரோசாப்ட் உடன் ஏற்பட்ட பிரச்சனை அவர் மீது சர்ச்சையை ஏற்படுத்தியது என்றால், தனது காதலிக்கும், தனக்கும் பிறந்த மகளை, தனது மகள் இல்லை என ஸ்டீவ் கூறி, அது நீதிமன்றம் வரை சென்றது அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் சர்ச்சையாக்கியது. 27 ஆண்டுகால தேடுதலுக்குப் பின் கண்டறிந்த தனது சகோதரிக்கு அவர் காட்டிய பாசம் பலரையும் பாராட்ட வைத்தாலும், மறுபுறம் தனது உண்மையான தாய், தந்தையை விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இப்படி சர்ச்சைகளுக்கும், சறுக்கல்களுக்கும் பஞ்சமில்லாமல் வாழ்ந்தாலும், இன்றைய நவீன உலகில் அவர் ஏற்படுத்திய விஞ்ஞான புரட்சியும், அவர் வெளிப்படுத்திய கடின உழைப்பும், தொழில்நுட்பம் என்ற ஒன்று உள்ளவரை இளைஞர்களின் கனவுகளுக்கு உயிராகவும், உரமாகவும் இருக்கும் என்பது மிகையாகாது. 

 

 

Next Story

எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு வந்த குறுந்தகவல்; ஆப்பிள் நிறுவனத்துக்கு  மத்திய அரசு நோட்டீஸ்!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Central government notice to Apple for message received by opposition MPs

 

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசாங்கம் தனது செல்போனை ஹேக் செய்ய முயற்சிப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளதாக கடந்த 31 ஆம் தேதி காலை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. அதானி மற்றும் பி.எம்.ஓ. நபர்களின் பயத்தை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, எனக்கு மற்றும் இந்தியா கூட்டணியின் மூன்று தலைவர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கை வந்துள்ளது” என்று தெரிவித்தார். அது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இதனையடுத்து, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, ’உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம்” என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. 

 

இந்த குறுஞ்செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சசி தரூர், மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து பதிவிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்” என்று தெரிவித்தது. 

 

இதனிடையே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதினர். ஆனால், அவர்கள் வைத்திருந்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘இந்திய கம்ப்யூட்டர் அவசரகால நடவடிக்கை குழு (சி.இ.ஆர்.டி), இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர், “எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்படுவதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் சி.இ.ஆர்.டி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு அவர்கள் (ஆப்பிள் நிறுவனம்) தேவையான ஒத்துழைப்பு தருவார்கள்” என்று கூறினார். 

 

 

Next Story

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதா? - விளக்கமளித்த ஆப்பிள் நிறுவனம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Cell phones of opposition MPs hacked?; Explained by Apple

 

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சியினர் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு தங்களுக்கான ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில் அடுத்த மாதம் தெலுங்கானா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, அரசாங்கம் தனது செல்போனை ஹேக் செய்ய முயற்சிப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளதாக இன்று (31-10-23) காலை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. அதானி மற்றும் பி.எம்.ஓ. நபர்களின் பயத்தை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, எனக்கு மற்றும் இந்தியா கூட்டணியின் மூன்று தலைவர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கை வந்துள்ளது” என்று தெரிவித்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, ’உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். 

 

உங்கள் கைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களைக் கூட அவர்களால் அணுக முடியும்’ என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும், இதேபோன்ற செய்தி மின்னஞ்சல் மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சசி தரூர், மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து பதிவிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

 

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்.” என்று தெரிவித்துள்ளது.