Skip to main content

ஸ்டாலின் செய்வதெல்லாம் சரியா?

Published on 25/05/2018 | Edited on 25/05/2018

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடுகிறார். அவருடைய போராட்ட வழிமுறைகள் அனைத்தும் அவருக்கு எதிராகவே திரும்பிவிடுகின்றன என்ற விமர்சனம் இப்போது எழுகிறது.

எடப்பாடி அரசு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பிலிருந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வரை பல போராட்டங்களை நடுநிலையிலான கட்சிக்காரர்களே குறை சொல்கிறார்கள்.


 

STALIN

 

 

 

குறிப்பாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரத்தை ஸ்டாலின் கையாண்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் திமுகவைச் சேர்ந்த கீதா ஜீவனின் சகோதரர் பெரும்பாலான காண்ட்ராக்ட்டுகளை எடுத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது. இதற்கு ஆதாரம் எதுவுமில்லை என்று கீதாஜீவன் சொன்னாலும், குற்றம்சாட்டுகிறவர்கள் மீது வழக்குத் தொடுக்காமல் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

 

பொதுவாகவே எதற்கெடுத்தாலும் திமுக மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் பல வகையிலும் பரப்பப்படுகின்றன. அமைச்சர்களே இப்படியெல்லாம் திமுகவை தொடர்புபடுத்துகிறார்கள். அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை தொடரவேண்டும் என்று திமுகவினர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், திமுக தலைமை இதில் கவனம் செலுத்த மறுப்பது ஏன் என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு விமர்சிக்க உரிமை உண்டு என்று திமுக நினைக்கிறது என்றாலும்கூட எதற்கும் ஒரு அளவில்லையா என்பதே தொண்டர்களின் தொடர் கேள்வி.

 

மற்ற எந்தக் கட்சியைக் காட்டிலும் தலைமையின் முடிவுகளை விமர்சிக்கக்கூடிய அளவுக்கு திமுகவில்தான் தொண்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கலைஞர் காலத்திலிருந்தே இது தொடர்கிறது. கலைஞர் உடல்நலமின்றி ஓய்வெடுக்கும் நிலையில், ஸ்டாலின் எடுக்கும் பல முடிவுகள், அவருடைய நடவடிக்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் அதிகரிக்கின்றன. திமுகவில் குழு மனப்பான்மை அதிகமாகி வருகிறது.

 

 

 

கலைஞர் காலத்திலும் குழுக்கள் இருந்தன. ஆனால், அத்தனை குழுக்களும் கலைஞரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவை. எனவே, அவர்களுடைய போட்டிகள் கட்சிக்கு இழப்பை ஏற்படுத்துவதில்லை. இப்போது குழுக்கள் தமக்கென்று தனித்தனி பாதைகளை வகுத்து செயல்படத் தொடங்கியிருக்கின்றன.

 

ஸ்டாலின் எல்லாக் குழுக்களுக்கும் ஆன தலைவராக இல்லாமல், அவருக்கு நெருக்கமான ஒரு குழுவினருக்கு மட்டுமான தலைவராக செயல்படுகிறார் என்று பல தரப்பிலிருந்தும் விமர்சிக்கப்படுகிறார்.

 

திறமையான பலர் இருந்தாலும், அவர்களை முழுவீச்சில் பயன்படுத்த மறுக்கிறார். தன்னைச் சுற்றியே கட்சி இயங்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

 

 

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மக்கள் மனநிலையை அரசுக்கு  எதிராக திருப்பத் தவறிவிட்டார் என்றும் விமர்சிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை ஸ்டாலின் போய் சந்தித்தார். அன்றைய தினமே மருத்துவமனை அருகே போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் ஒருவர் பலியானார். அந்தச் சமயத்திலேயே ஸ்டாலின் தனது போராட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும். போலீஸ் அடக்குமுறை ஓயும்வரை தூத்துக்குடியை விட்டு வெளியேற மாட்டேன் என்று போராட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறுகிறார்கள். அங்கேய போராட்டத்தை தொடங்கி கைதாகி இருந்தால், திமுகவின் போராட்ட குணம் தூத்துக்குடியில் போலீஸ் அராஜகத்தை கட்டுப்படுத்தி இருக்கும் என்பதே பெரும்பகுதியினர் கருத்து.

 

ஆனால், ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தர்ணா தொடங்கி கைதானதும், அவருடைய கைதைக் கண்டித்து திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியதும் தூத்துக்குடி விவகாரத்தை திசைதிருப்பி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

தூத்துக்குடி அராஜகத்துக்கு எதிரான போராட்டம் ஸ்டாலின் கைதுக்கு எதிரான போராட்டமாக மடைமாற்றப்பட்டது தவறு என்று சாதாரண மக்களே பேசும் நிலை உருவாகிவிட்டது.

 

ஸ்டாலின் போராட்டத்தை நாடகம் என்று முதல்வர் எடப்பாடியே விமர்சிக்கிறார். அதையே தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன. முதல்வரிடம் தூத்துக்குடி சம்பவத்துக்கு காரணம் யார் என்று கேட்டு பதில் பெற முடியாத ஊடகங்கள், அவர் திமுகவைப் பற்றி சொன்ன வார்த்தைகளை தொடர்ந்து ஒளிபரப்பும் நிலைதான் உள்ளது.

 

இதன்விளைவுதான் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பந்த் அறைகூவலுக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் போயிற்று என்கிறார்கள் திமுக முன்னணி பிரமுகர்கள்.

 

 

 

2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதை எதிர்கொள்வதற்கு திமுக தலைமை இப்போதிருந்தே தனது தொண்டர்களையும், அடுத்தக்கட்ட தலைவர்களையும் உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக மகளிர் அணியை விரிவுபடுத்தி, ஊராட்சி அளவுக்கு பலப்படுத்த வேண்டும் என்பதே திமுக தொண்டர்களின் விருப்பம்.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.