Skip to main content

ஏழைகள் வயித்துல அடிச்சு இப்படி ஒரு ரோடு எடப்பாடி அரசுக்கு தேவையா? குள்ளம்பட்டி விவசாயிகள் கொந்தளிப்பு!! 

Published on 13/06/2018 | Edited on 13/06/2018
salem chennai 8 lane road


சேலம் - சென்னை இடையே அமைய உள்ள எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக நிலத்தை அளக்க வரும் அதிகாரிகளை விரட்டுவோம் என குள்ளம்பட்டி கிராம விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 
 

நக்கீரன் இணைய ஊடகத்திடம் குள்ளம்பட்டி கிராம மக்கள் கூறியது: 
 

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்தான்னு சொல்றாங்க. எட்டு வழிச்சாலையால் இனி இந்த விவசாய நிலம் பூராவுமே அழிஞ்சு போய்டும். அப்புறம் முதுகெலும்பு இல்லாம எப்படி இந்தியா இருக்கும்? எடப்பாடி அரசுக்கிட்ட நான் கேட்கிறேன். 

 

 

 

எட்டு வழிச்சாலை வேண்டாம் என்று இங்கே இத்தனை விவசாயிகள் மனு கொடுத்திருக்கிறோம். இந்த சாலை வேண்டும் என்று யாராவது மனு கொடுத்திருக்கிறார்களா? எட்டு வழிச்சாலை வேண்டும் என்பவர்கள், அவர்களின் சொந்த நிலத்தை கொடுக்க தயாராக இருக்கிறார்களா? 
 

எடப்பாடி அரசாங்கத்தை கண்டிக்கிறோம். நாங்க அவருக்கு ஓட்டுப் போடல. நாங்க ரெட்டலைக்குதான் ஓட்டு போட்டோம். இந்த ரோட்டை போட்டால், கண்டிப்பாக இந்த ஆட்சி கலைந்து விடும். தூத்துக்குடி சம்பவத்தை விட பெரிய சம்பவம் சேலத்தில் நடக்கும். எங்களுக்கு ரேஷன் கார்டு வேணாம், ஆதார் கார்டு வேணாம். அரசாங்கம் எங்களுக்கு என்னென்ன ஆவணங்கள் கொடுத்திருக்கிறார்களோ அத்தனையும் கொடுத்து விடுகிறோம். 
 

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை போட்டால் மூனு மணி நேரத்தில் சென்னைக்குப் போலாம்னு சொல்றாங்க. அதனால் இந்தப் பகுதியில் என்ன தொழில் வளம் பெருகும்? விவசாயிகள் இல்லாமல், விளை பொருள் இல்லாமல் வெறும் பணத்தை மட்டும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சாப்பிட்டு விடுவார்களா? 
 

தரிசு நிலங்களை மட்டும்தான் இந்த திட்டத்துக்காக எடுப்போம்னு எடப்பாடி சொன்னாரு. வாரத்துக்கு ரெண்டு நாள் எடப்பாடி சேலத்துக்கு வர்றாரு. அவர் ஒருமுறையாவது இந்த இடத்தில் நேரில் வந்து பார்க்கணும். இங்கு உள்ளதெல்லாம் தரிசு நிலமா? விவசாய நிலத்தை அழிச்சு அப்படி என்ன ரோடு போடப்போறாங்க? 

 

 

 

மோடி நான்காண்டு சாதனை அறிக்கையில், விவசாயத்துக்குதான் முன்னுரிமை என்று கூறுகிறார். ஆனால், அவரேதான் இப்போது விவசாயத்தை அழிக்கப் பார்க்கிறார். கனிம வளங்களை திருடிச் செல்வதற்கான திட்டம்தான் இந்த எட்டுவழிச்சாலை திட்டம். பெரு முதலாளி ஒருவர் சம்பாதிக்கிறதுக்காக இத்தனை விவசாயிகளை வதைக்க வேண்டுமா? 
 

ஏழைகள் வயித்துல அடிச்சு இப்படி ஒரு ரோடு எடப்பாடி அரசுக்கு தேவையா? சேலத்துக்கு எடப்பாடி நல்லது செய்வாருனுதான் நினைச்சேன். ஆனால் இப்படி பண்ணுவாருனு நினைக்கவே இல்லை. 

 

 

 

கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி போராடுவோம். நிலத்தை அளப்பதற்கு யார் வந்தாலும் அவர்களை விரட்டுவோம். அதையும் மீறி நிலத்தை அளந்தால், விஷம் குடித்து தற்கொலை செய்வோம். எங்கள் மீது ரோடு போட்டுக் கொள்ளட்டும். 

இவ்வாறு குள்ளம்பட்டி விவசாயிகள் ஆவேசமாகக் கூறினர். 

Next Story

“தமிழக அரசுக்கு நன்றி” - குகேஷ் நெகிழ்ச்சி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Thank you to the Government of Tamil Nadu Gukesh 

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கனடாவில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர் குகேஷூக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தொடரில் முதல் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. அதாவது கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர் உதவியாக இருந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.