Skip to main content

நான் மைக் டைசன், நாக்கவுட் தான்... பா.ஜ.க.வை முகவரி இல்லாமல் செய்துவிடுவேன்... பஞ்ச் 2018

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
punch 2018

 

2018 பஞ்ச் டயலாக்களுக்கு குறைவில்லாத வருடம், பத்திரிகையாளர் சந்திப்பு, விழா, மேடை, கண்டனக்கூட்டம் என அனைத்து இடங்களிலும் நம் அரசியல் தலைவர்கள்  பஞ்ச் டயலாக்குகள் பேசினர். அவற்றுள் சில...

 

 

  • ஆர்.கே.நகரில் நடைபெற்றது இடைத்தேர்தல் அல்ல எடைத் தேர்தல். -டிடிவி தினகரன்
     
  • ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டதே பாஜக தான். -தமிழிசை
     
  • ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு நிமிடம் போதும். -மு.க.ஸ்டாலின்
     
  • இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு. -ரஜினி
     
  • ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல -ராஜேந்திர பாலாஜி
     
  • நான் உங்கள் வீட்டு விளக்கு -கமல்ஹாசன்
     
  • எங்களை தொட்டுக் கூட பார்க்க முடியாது. -எடப்பாடி பழனிசாமி
     
  • தூங்குகிற புலியை மத்திய அரசு இடருகிறது. -வைகோ
     
  • கைக்குலுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ இந்தியா வரவில்லை. -கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
     
  • ஆன்மீக இடத்தில் அரசியல் பேசுவதா?  -ரஜினிகாந்த்
     
  • இது ரத யாத்திரை இல்லை, ரத்த யாத்திரை! -கி.வீரமணி
     
  • வாடிவாசல் திறந்த எங்களுக்கு.. மோடி வாயை திறக்க தெரியாதா? -போராட்டக்களத்தில் மாணவர்கள்..!
     
  • போராளிகளின் உணர்வு சில முட்டாள்களுக்கு புரியாது -வேல்முருகன்
     
  • பா.ஜ.க.வை முகவரி இல்லாமல் செய்துவிடுவேன்! - சந்திரபாபு நாயுடு
     
  • தமிழக மக்கள் மோடியின் பக்கம் உள்ளனர் -தமிழிசை
     
  • துப்பறிவாளன் படத்தில் நடித்தால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா? -டி.ராஜேந்தர்
     
  • போராட்டம்.. போராட்டம்ன்னு போய்ட்டா தமிழ்நாடு சுடுகாடாக மாறும்! -ரஜினிகாந்த்
     
  • மதுரை விரைவில் சிட்னியாக மாறப்போகிறது -செல்லூர் ராஜூ
     
  • முகவரி இல்லாத அழகிரி -ஆர்.பி.உதயகுமார்
     
  • ஜெ. அரசின் சாதனைகளை நிலவு வரை எடுத்து செல்வோம், ஆனால் அங்கு சைக்கிள் செல்லாது. -ஆர்.பி. உதயக்குமார்
     
  • நான் ஜெயலலிதா யுனிவர்சிட்டியில் சேர்ந்தபோது எல்கேஜி படிக்க வந்தவர் டிடிவி தினகரன் -ஓபிஎஸ்
     
  • நான் மைக் டைசன், நாக்கவுட் தான் -ஜெயக்குமார்
     
  • அதிமுக பாஜகவுக்கு அடிமையில்லை, மக்களுக்கு மட்டும்தான் அடிமை -ராஜேந்திர பாலாஜி
     
  • எப்போது வரனும் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுவதுதான் முக்கியம் -ரஜினிகாந்த்
     
  • ஜெயலலிதா இல்லாததால் குளிர்விட்டுப்போச்சு -ஜெயக்குமார்
     
  • அதானி, அம்பானி நினைவில் மோடி, கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் நினைவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். -மு.க.ஸ்டாலின்
     
  • மக்களை நன்முறையில் பார்த்தால், அவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் -தமிழிசை சௌந்தரராஜன்
     
  • நான் என்ன சொல்கிறேனோ அதைதான் செய்வேன் -ராகுல் காந்தி
     
  • இது வெறும் ஓட்டு அல்ல, உங்கள் ஆயுதம் -ராகுல் காந்தி
     
  • ஒரு வருடத்திற்குள் வழக்குகளை முடிப்பேன், எங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள். -பொன்.மாணிக்கவேல்
     
  • ஒரு அடி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் -தினகரன்
     
  • எங்களை மீறி, ஒரு பிடி மண்ணையும் என்.எல்.சி. எடுக்க முடியாது -அன்புமணி

 

 

 

பாம்பைக் கடித்தவர்... வயலில் சன்னி லியோன் பேனர் வைத்தவர்... என்னலாம் பண்ணிருக்காங்க பாருங்க!!! விநோதங்கள் 2018!!! பகுதி 1

 

 

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.