Skip to main content

கர்ப்பிணி மனைவி... வீட்டின் பின்புறம் ஒளிந்திருந்த முதல் கணவர்... வெளியான அதிர்ச்சி சம்பவ தகவல்!

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவி என்ற சனா முகமதுவை அவரது முதல்  கணவர் அம்பு விட்டு கொலை செய்த சம்பவம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையை அவரது முதல் கணவர் ஏன் செய்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவி என்ற சனா முகமது கிழக்கு லண்டனில் தன்னுடைய இரண்டாவது கணவரான இம்தியாஸ் முகமது அவருடன் வசித்து உள்ளார்.  அப்போது நடந்த விசாரணையில் தேவி ஏழு வருடங்களுக்கு முன்னதாக இம்தியாஸ் முகமது என்பவரைத் திருமணம் செய்து கொண்டு தன் பெயரை சனா முகமது என மாற்றி இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். தேவியின் முதல் கணவரான ராமனோஜ்க்கும், தேவிக்கும் மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். இரண்டாவது திருமணம் செய்த இம்தியாஸ் முகம்மதுக்கும், தேவிக்கும் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன. 

 

issues


 

issues



இந்நிலையில் தேவி தனது இரண்டாவது கணவர் மூலம் 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இரண்டாவது கணவருடன், தேவி சந்தோசமாக கிழக்கு லண்டன் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். தேவி மற்றும் அவருடைய இரண்டாவது கணவரான இம்தியாஸ் இருவரும் கிழக்கு லண்டனில் இருக்கும் அவர்களது வீட்டில் இருந்தபோது தேவியின் முதல் கணவரான ராமனோஜ் வீட்டிற்குள் வில்லும் அம்பும் ஏந்தி கொண்டு அவர்கள் இருவரையும் தாக்குவதற்காக சென்றிருக்கிறார். அப்போது பயந்து போன தேவியும், இம்தியாஸும் வீட்டில் ஆளுக்கொரு புறம் ஓடியுள்ளனர். அப்போது முதல் கணவர் ராமனோஜ் எய்த அம்பு தேவியின் இதயத்தை துளைத்தது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் தேவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தீவிர போராட்டத்திற்கு பின்பு தேவியின் வயிற்றில் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு எடுத்தனர் அதனை அடுத்து சிறிது நேரத்திலேயே தேவி பரிதாபமாக உயிரிழந்தார். 

 

issues



பின்னர் போலீசார் தேவியை கொலை செய்த அவரது முதல் கணவரை கைது செய்து விசாரணை செய்தனர். தற்போது தேவியை முதல் கணவர் கொலை செய்தது ஏன் என்ற காரணம் வெளிவந்துள்ளது. தேவியும் அவரது இரண்டாவது கணவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர்களை கொலை செய்வதற்கு அவர்களின் வீட்டின் பின்னால் இருக்கும் ஒரு அறையில் ஒரு மாத காலமாக பதுங்கி இருந்து அவர்களை கண்காணித்து வந்தேன் என்று விசாரணையில் கூறியுள்ளார். மேலும் தேவியை கொலை செய்வதற்காக அம்பு வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவியின் கொலை குறித்த தகவல் தற்போது வெளியாகி லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.