Skip to main content

பாமக... பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

Published on 06/02/2019 | Edited on 08/02/2019


வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும் மேலும் அமமுக, மக்கள் நீதி மய்யம் என பலகட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதில் கூட்டணி என்ற கணக்கில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் மற்றும் சில அமைப்புகள் திமுக கூட்டணியில் வலுவாக உள்ளது. அடுத்ததாக அதிமுக அணியில் பாஜக உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அக்கூட்டணியில் வேறு கட்சிகள் எதுஎது என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக அணியில் பாமக, தேமுதிக, தமாகா இந்த கட்சிகள் ரகசிய டீலிங்கில் இருந்துவருவது ஊடகங்கள் மூலம் அவ்வப்போது அம்பலமாகி வருகிறது.

 

 

pmk

 

 

இதில் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணி பற்றி வெளிவருகிற கருத்துக்களை அக்கட்சியின் தலைவரான டாக்டர் ராமதாஸ் மறுத்து வருகிறார். மேலும் ஊடகங்கள் கற்பனை குதிரையில் ஏறி சவாரி செய்கிறது என்றும், அவரவர்  இஷ்டத்துக்கும் பாமக தேர்தல் கூட்டணி விஷயத்தில் கண்டபடி எழுதுவது தவறு என்றும் யாருடன் கூட்டணி என்கிற முடிவை எடுக்கும் அதிகாரம் எங்கள் கட்சி எனக்கு தந்துள்ளது. ஆகவே நான் எடுக்கும் நிலைதான் கட்சியின் அதிகாரபூர்வ முடிவு அறிவுப்பு என கூறியிருக்கிறார்.

 

 

ஆனால் என்னதான் பொத்தி பொத்தி வைத்திருந்தாலும் ஒருநாள் பூனைக்குட்டி வெளியே வரும் என்ற கூற்று இப்போது  அம்பலமாகியுள்ளது.

 

அது என்ன கூற்று?

 

பாமகவின் தருமபுரி எம்பியாக இருப்பவர் அன்புமணி ராமதாஸ். இந்த தொகுதியில் உள்ள  தருமபுரி முதல் மொரப்பூர் வரை ரயில்வே திட்டம் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்திலேயே இந்த ரயில்வே திட்டத்தை நிறைவேற்றக்கோரி மத்திய அரசிற்கு பலக்கடிதங்கள் அப்போதிலிருந்தே அனுப்பப்பட்டது. இந்த ரயில்வே திட்டத்தால் தருமபுரி மக்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும் என்பதே உண்மை. தருமபுரி தொகுதி மக்கள் சென்னை செல்வதென்றாலும், அல்லது சென்னையிலிருந்து வருவதென்றாலும் மொரப்பூருக்கு வேறு வாகனத்தில் வந்துதான் ரயிலில் செல்ல  இருக்கிறது.

 

pmk

 

அன்புமணி எம்பியாக வந்த இந்த ஐந்து வருட காலமாகவும் இந்த ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று பாராளுமன்றத்தில் பேசியதோடு மத்திய ரயில்வே அமைச்சரை 18 முறை சந்தித்து கடிதம் கொடுத்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இறுதியாக 2016 -2017 பட்ஜெட்டில் நிபந்தனைகளுடன் இந்த ரயில்வே திட்டத்தை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது. 

 

அது என்ன நிபந்தனை?

 

இத்திட்டத்திற்காக செலவழிக்கப்படும் செலவில் மாநில அரசு பாதி செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. மாநில அரசிற்கும் கடிதம் எழுதினார் அன்புமணி. ஆனால் வருவாய் எதுவும் இல்லை ஆகவே பாதி தொகையை மாநில அரசு ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்ற நவம்பர் மாதமே அறிவித்துவிட்டது எடப்பாடி அரசு. இதன் பின்னணியில் தான் பூனைக்குட்டியை சென்ற 4 ஆம் தேதி ரயில்வே அமைச்சரின் கடிதம் மூலம் பார்க்க முடிந்தது. 

 

 

pmk

 

 

அதாவது மாநில அரசின் பங்கே வேண்டாம். இந்த திட்டத்திற்கான மொத்த தொகை 358 கொடியே 95 லட்சம் இதை முழுமையாக மத்திய அரசு ஏற்கிறது. அடுத்த 10 நாட்களுக்குள் மொரப்பூர் தருமபுரி அகல மின்சார ரயில் பாதையை துவைக்கி வைக்கும் விழாவிற்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் நேரில் வருவதாக எம்பி அன்புமணிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இத்திட்டம் அப்பகுதி மக்களின் 78 ஆண்டு கோரிக்கை இதன்மூலம் அன்புமணிக்கு கிடைத்த வெற்றி என்று பாமகவினர் கொண்டாடுகின்றனர்.

 

 

pmk

 

 

எம்பியாகி ஐந்து வருடமாக கஜினி முகமது போல் 18 முறை படையெடுத்தும் கிடைக்காத இந்த திட்டம் இப்போது கிடைதித்திருப்பதன் பின்னணி கூட்டணி என்ற பூனை குட்டிதான். அதிமுக, பாஜக  கூட்டணியில் பாமகவிற்கு  7 இடங்கள் என்று பேச்சுவார்த்தை தொடங்கி தற்போது 5 இடங்கள் என பேச்சு தொடர்கிறது. கூடக்குறைய இடங்கள் இருந்தாலும் கூட்டணி உறுதி என்பதே பாஜக மத்திய அரசு அன்புமணி தொகுதிக்கு ரயில்வே திட்டத்தை அறிவித்துள்ளது.

 

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.