Skip to main content

ஒரு நாளைக்கு 600 கிலோ பக்கோடா!!! -அமோகமாக ஓடும் மோடியின் பக்கோடா திட்டம்

Published on 22/06/2018 | Edited on 22/06/2018
pakoda

 

 

 

பிரதமர் மோடியை விமர்சிப்பது என்பது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். அதேபோல அவர் பேசியதை காலாய்ப்பதும் ஒரு வழக்கம்தான். அப்படி அவர் பேசியதில் கலாய்க்கப்பட்ட ஒரு விஷயம்தான் பக்கோடா. இவர் பக்கோடாவை பற்றி பேசியதால், இனி பக்கோடாதான் இந்தியாவின் தேசிய உணவு என்ற அளவுக்கு கலாய்க்கப்பட்டது. பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரங்களில் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவேன் என்று வாக்களித்தார். அதை நம்பி தேர்தலில் வாக்கு அளித்தவர்கள் பலரின் தலையில் தற்போது இடி விழுந்துள்ளது. இதுபோல நம்பி வாக்கு செலுத்துவது என்பது இந்திய மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். வேலைவாய்ப்புக்கு திட்டம் வகுக்கிறார்களே தவிர, அதனால் பயனடைந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது கேள்வி குறியே... 

 

pakoda protest

 

 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக ஒரு திட்டத்தை சொல்லி இந்தியா, உலகம் முழுவதும் கலாய்க்கப்பட்டார். அது என்ன என்றால் படித்து முடித்தவர்கள் வேலை இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள், பக்கோடா கடை போட்டால் கூட நாளுக்கு ரூபாய் 200 சம்பாரிக்கலாம் என்றார். அதற்கு அமித் ஷா முதல் பாஜகவில் இருக்கும் அனைத்து தேசிய செயலாளர்கள் பலரும் அதை ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வழக்கம் போல இதை விமர்சித்தனர். குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டர் ஒருவர் ஒரு படி மேலே ஏறி பக்கோடா கடை திறந்தே கலாய்த்தார். அதுவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. அப்படி கலாய்க்க பக்கோடா கடை போட்டவர், இன்று ஒரு நாளுக்கு கிட்டதட்ட 600 கிலோ வரை பக்கோடா தயாரித்து 35 கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். அவர் பேசியதை கலாய்க்கும் விதமாக இந்தியா முழுவதும் பலரும் பக்கோடா போட்டு போராட்டம் நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 

 


இதைப்பற்றி அந்த பக்கோடா கடையை திறந்து வெற்றிகரமாக நடத்திகொண்டிருக்கும் நாராயன்பாய் கூறியது, "நான் தற்போதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன்தான். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அப்போதும்  காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன். மோடி இந்த பக்கோடா திட்டத்தை பற்றி சொன்னபொழுது வெறும் 10 கிலோ மூலப்பொருட்களுடன் இந்த கடையை ஆரம்பித்தேன். இரண்டு மாத உழைப்பிற்கு பின்னர் இன்று ஒருநாளுக்கு 600 கிலோ வரை பக்கோடா போடுகிறேன். அது 35 கடைகளால் வாங்கப்படுகிறது என்பது மகிழ்ச்சிதான். இந்த கடைக்கு ஸ்ரீ ராம் என்று பெயர் வைத்துள்ளேன். (ராமாயணத்தின் படி) ராமரின் பெயர் சொன்னால் கடலில் கூட கல் மிதக்கும், ராமரின் பெயரை வைத்து அமித் ஷா, மோடி ஆட்சியை பிடிக்கிறார்கள், ஏன் எனது கடை அவர் பெயர் வைத்தால் ஓடாதா".


இந்த கடையில் காலை வேளையிலேயே 300 கிலோ பக்கோடா விற்று தீர்ந்துவிடுகிறதாம்...

 

 

 

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.