Skip to main content

சட்டம் சாமானியர்களுக்கு மட்டும்தான்!  சர்க்காருக்கு அல்ல!

Published on 03/09/2018 | Edited on 03/09/2018

இருசக்கர வாகனங்களில் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் ஒரு அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. உடனே, இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர ஆயத்தமாகிவிட்டனர் காக்கிகள். 


 

jayalalithaa car


 

பெரும்பாலான இடங்களில் கறாராக நடந்துகொள்கின்றனர். சில இடங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் கண்டுகொள்வதில்லை. ஹெல்மெட் அணிந்திருந்தாலும், ஆர்.சி.புக், லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ் போன்றவற்றை கேட்கிறார்கள். இவற்றில், ஆர்.சி. புக், லைசென்ஸ் விஷத்தில் பிரச்சனைகள் வருவதில்லை. பெரும்பாலானோர் வைத்திருப்பார்கள். இந்த இன்ஸ்யூரன்ஸ் இருக்கிறதே! அதாவது, வாகனத்துக்கான காப்பீடு. இதுதான் பல வாகனங்களுக்கும் காலாவதி ஆகியிருக்கும். ஏனென்றால், இருசக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ வாங்கும்போது, ஓராண்டுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தப்படும். அது காலாவதியான பிறகு, பலரும் காப்பீட்டைப் புதுப்பிப்பது இல்லை. அதனால்தான், காப்பீடு இல்லை என்ற காரணத்துக்காகப் பலரும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. 
 

 

 

வாகன சோதனை நடத்தி, காப்பீடு விஷயத்தில் சாமானியர்களைக் கசக்கிப் பிழியும் போக்குவரத்துக் காவல்துறையினர்,  அரசுத்துறை வாகனங்களுக்கும் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்களா?  விசாரணையில் இறங்கினோம். 
 

jayalalithaa car


 

2014, மே 8-ஆம் தேதி, சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பயன்பாட்டிற்காக டொயேட்டா கிர்லோஸ்கர் கார்கள் வாங்கப்பட்டன. இவையனைத்தும் சென்னை காவல் ஆணையர் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டன. இந்தக் கார்களை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். 2015, மே 7-ஆம் தேதியோடு இந்த வாகனங்களுக்கான காப்பீடு முடிந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காப்பீடு செலுத்தாமலேயே, இந்த வாகனங்கள் உலா வருகின்றன. அந்த வாகனங்களின் பட்டியல் இதோ –
 
 

வாகன எண்     பயன்படுத்துபவர்
டி.என்.01 ஜி 6276   கூடுதல் ஆணையர் (தெற்கு) மகேஷ்குமார் அகர்வால்
டி.என்.01 ஜி 6298 இணை ஆணையர் (தெற்கு) மகேஷ்வரி
டி.என்.01 ஜி 6283  தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன்


 

காவல்துறை அதிகாரிகளின் வாகனங்கள்  இப்படியென்றால்,  அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களின் வாகனங்கள் எப்படி? 
 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்காக, அவர் பதவியேற்ற 10 நாட்களில், அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி டொயேட்டோ கிர்லோஸ்கர் கார் வாங்கப்பட்டது. கூடுதல் செயலாளர் பெயரில் பதிவு செய்யப்பட்ட (பதிவு எண் டி.என்.07 ப்பி.ஜி. 5577) இந்த  வாகனத்துக்கு,  இன்று வரையிலும் காப்பீடு என்பதே இல்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்காக 2018, ஜனவரி 18-ஆம் தேதி புதிதாக, டி.என்.07 சி.எம். 2233  பதிவெண் உள்ள  கார் ஒன்று  வாங்கப்பட்டது. இந்தக் காருக்கு உரிய காப்பீட்டு தொகையை செலுத்திவிட்டனர். 


 

jayalalithaa car


வாகனக் காப்பீடு மிகவும்  அவசியமானது. விபத்து நேரிடும்போது, நமக்கான இழப்பீடோ, அல்லது வாகனம் சேதம் அடைந்தால், அதற்கான இழப்பீடோ, காப்பீடு நடப்பில் இருந்தால் மட்டுமே, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறமுடியும். அதற்காகத்தான், காப்பீடு சான்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. காப்பீடு சான்றி இல்லாமல் வாகனங்களை இயக்குவது, வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால், மோட்டார் வாகனச் சட்டம் 146, 196-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும். அப்படியென்றால் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள்தானே? அந்த வகையில்,  ஆட்சியாளர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் குற்றவாளிகள் அல்லவா? 

 

 

 

jayalalithaa car

 

 

jayalalithaa car


 

 

 

 

 


 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.