Skip to main content

கலைஞர் சிலை சிலரைப் படுத்தும்பாடு!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவுக்கும், தந்தை பெரியாருக்கும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அளவுக்கு வேறு யாருக்கும் சிலைகள் இல்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக காமராஜருக்கும், அம்பேத்கருக்கும் சிலைகள் உள்ளன.

 

 

kk

 

 

தந்தை பெரியார் நவீன தமிழகத்தை கனவு கண்டார் என்றால், அறிஞர் அண்ணா அவர்கள், பெரியாரின் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியை அமைப்பதில் வெற்றி கண்டார். மிகக் குறுகிய காலமே ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால், அவருக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர், பெரியாரின் கனவுகளை நிறைவேற்றுவதில் பெரிய அளவில் வெற்றிபெற்றார்.

 

 

அண்ணாவுக்கு அடுத்தபடியாக சீனியாரிட்டி பெற்ற தலைவர்கள் வரிசையில் இருந்தார்கள். ஆனால், அண்ணாவுக்கு அடுத்தபடியாக தந்தை பெரியாரின் அன்பைப் பெற்றவர் கலைஞர்தான் என்பதை 1968ல் அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சமயத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

 

ஆம், 1968 ஜனவரியில் சென்னையில் அண்ணா தலைமையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் நினைவாகத்தான், மெரினாவுக்கு இன்று அழகு சேர்த்துக் கொண்டிருக்கிற 10 சிலைகள் நிறுவப்பட்டன. அந்த மாநாடு முடிந்த கையோடு, முதல்வர் அண்ணாவுக்கு அன்றைக்கு மவுண்ட்ரோடு என்று அழைக்கப்பட்ட அண்ணாசாலையில் சிலை திறக்கப்பட்டது.

 

 

அண்ணாவுக்கு சிலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞருக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணாவிடம் கோரிக்கை வைத்து, அனுமதியும் பெற்றார். ஆனால், பெரியாரின் இந்த முயற்சியை அன்றைக்கு பிராமணர்கள் பலர் கடுமையாக விமர்சித்தார்கள். அண்ணாவுக்கு சிலை வைப்பதை ஏற்றுக்கொண்ட அவர்கள், கலைஞருக்கு சிலை வைக்கும் முயற்சியை விமர்சித்தார்கள் என்றால், அவர்கள் அன்றைக்கே கலைஞரை எந்த அளவுக்கு கற்பனை செய்திருக்கிறார்கள் என்பது புரியும்.

 

 

கலைஞரை கடுமையான வார்த்தைகளால் பிராமணர்கள் சிலர் அர்ச்சித்தற்கு காரணம் என்னவாக இருந்திருக்க முடியும்? அவரே எழுதியதுபோல அவர் பிறந்த சாதியைத் தவிர வேறு எதுவாக இருந்திருக்க முடியும். ஒருகட்டத்தில் பெரியாரின் சிலை வைக்கும் முயற்சி தேவையில்லாதது என்றும், சிலை வைக்கும் அளவுக்கு தான் தகுதி பெற்றவன் அல்ல என்றும் கலைஞரே மறுத்து அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

kk

 

 

ஆனால், அந்த அறிக்கையைப் பெரியார் பொருட்படுத்தவில்லை. தனது முயற்சி குறித்து விடுதலை இதழில் தலையங்கமே எழுதினார். 1968 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதியிட்ட விடுதலை இதழில் கலைஞரின் அறிக்கையைக் குறிப்பிட்டு, அவர் மறுத்தாலும், சிலை வைப்புக் கமிட்டியார் தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவுடன் அவருக்கு சிலை வைப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.

 

 

தந்தை பெரியாரின் ஆசை அண்ணா உயிருடன் இருக்கும்போதே வெளிப்பட்டது ஆகும். அதன்பிறகு, திமுகவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு, கலைஞர் முதல்வரானார். தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி மறைந்தார். அவருக்கு அரசு மரியாதை அளிப்பதற்காக தனது ஆட்சியையே பறிகொடுக்கவும் தயாராய் இருந்தார் கலைஞர். அந்த அளவுக்கு பெரியாரின் சீடராய் கலைஞர் இருந்திருக்கிறார் என்பதை அறியமுடியும். பெரியாரின் மறைவுக்குப் பிறகு, மணியம்மை, கி.வீரமணி ஆகியோர் தலைமையில் கலைஞருக்கு சிலை அமைக்கும் முயற்சி மீண்டும் உயிர்ப்பெற்று, அண்ணாசாலையில் 1975 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி மாபெரும் விழா எடுத்து, பேராசிரியர் தலைமையில், மணியம்மை முன்னிலையில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் கலைஞர் சிலையை திறந்துவைத்தார்.

 

 

kk

 

 

அந்தச் சிலை பலருடைய வயிற்றெரிச்சலுக்கு தொடர்ந்து ஆளானது. கலைஞர் என்ற தலைவரின் வளர்ச்சி ஒரு பிரிவினரை தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருந்தது. 1987ல் எம்ஜிஆர் இறந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை பயன்படுத்தி, கலைஞர் சிலையை உடைத்தெறிந்தனர். அந்தப் படம் ஏடுகளில் வந்தபோதுகூட எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர்,
 

 

"உடன் பிறப்பே,

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்த சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை-

நெஞ்சிலே தான் குத்துகிறான்;

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!'' என்று கவிதை எழுதினார். அதன்பிறகு அதே இடத்தில் சிலை வைக்க திராவிடர் கழகம் முயற்சித்தபோது கலைஞர் அதை நிராகரித்துவிட்டார்.

 

 

kk

 

 

கலைஞர் தனது ஆட்சியில் எத்தனையோ கலைநயமிக்க சிலைகளையும், நினைவுச் சின்னங்களையும், கட்டிடங்களையும் கட்டியிருக்கிறார். திமுக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்திலேதான் திமுகவின் தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயம் என்ற மாபெரும் கட்டிடத்தை தொண்டர்களிடம் பெற்ற நிதியில் கட்டி எழுப்பினார். இதோ, அந்த அலுவலகத்தின் அருகிலே, தனது தலைவர் அண்ணாவின் அருகிலே அவரே சிலையாக மாறியிருக்கிறார். 

 

 

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.