Skip to main content

சிறையில் எடுத்த செல்பி!!!

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

   
 

jail selfie


                       

உத்திரபிரதேசத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள  சிறையில் கடந்த சனிக்கிழமை கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட விசாரணை கைதி, சிறையில் இருந்தபடி சக கைதிகளுடன் இணைந்து செல்பி எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முசாபர்நகர் சிறையில் கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக விஜய் சௌத்ரி என்பவன் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று சிறையில் ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகியுள்ள மோஹித் மற்றும் சச்சினுடன் செல்பி எடுத்து தனது ஃபேஸ்புக் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை கண்டறிந்த சிறை நிர்வாகம், விஜயிடமிருந்து கைபேசியை கைப்பற்றியது. இவர் அதிகாரிகளிடம் சிக்க, சமூக வலைதளத்தில் பரவியதே காரணம். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பே பிப்ரவரி 16ஆம் தேதி இதேபோல் இரண்டு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளான். ஆனால் அப்போது சிறை அதிகாரிகள் கவனிக்கவில்லை.

இதுகுறித்து சிறை அதிகாரி சக்சேனா கூறுகையில், "விஜய் சௌத்ரியை கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த டிசம்பர் மாதம் இந்தியச்சட்டம் 307 மற்றும் 323ன் கீழ் கைது செய்தோம். இவர்களுக்கு கைபேசிகளை கொடுப்பது யாரென்று தெரியவில்லை. அதற்கு விசாரணை நடந்து வருகிறது. இதனை தடுக்க சிறையில், ஜாமர் கருவி பொறுத்தவுள்ளோம் என்று கூறினார்.

சிறையில் கைபேசிகள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இப்போதெல்லாம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சிறைகளில் மறைமுகமாக கைபேசியை உபயோகிக்கின்றனர். அதிலும் செல்வாக்கு மிகுந்தவர்களேல்லாம் சிறை அதிகாரிகளுக்கு தெரிந்தே தனது பாதுகாப்புக்காக என்று கூறி உபயோகிக்கின்றனர். செல்வாக்கு மிகுந்தோர் கைபேசி மட்டுமா பயன்படுத்துகிறார்கள் ஷாப்பிங் கூடதான் சென்றுவருகிறார்கள். இதையே கண்டுகொள்ளவில்லை சிறை நிர்வாகம் அதை கண்டுகொள்ளுமா?

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
25 years in prison for a construction worker for A 9-year-old girl was misbehaviour in vellore

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி அருகில் உள்ள மாங்காய் தோட்டத்தில் கட்டிப் போட்டு சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி இந்த வழக்கில் நேற்று (15-03-24) தீர்ப்பளித்தார். அதில், சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.