Skip to main content

பேஸ்புக் அடுத்து கூகுள் பிளேவில் தகவல் திருட்டு!!!

Published on 18/04/2018 | Edited on 18/04/2018
OS

  

 

நமது கம்ப்யூட்டர் அனைத்தும் விண்டோஸ் (Windows) என்ற இயங்குதளத்தின் (operating system) மூலம் செயல்படுகிறது. இந்த ஆப்ரடிங் சிஸ்டத்தின் ஒரு தளத்தில் இயங்கும் இணையத்தளத்தில் (இன்டர்நெட்) முதன்மை பகுதிகளாக வலைதளங்கள் (வெப்சைட்) இயங்குகின்றன. அதுபோல பெரும்பாலான மொபைல் போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு செயல்படுகின்றன. அதில் இயங்கும் கூகுள் பிளே (Google Play) பதிவிறக்கம் மற்றும் அப்டேட் மூலம் அனைத்தும் கைப்பேசி செயலிகளும் (Mobile app) இயங்குகின்றன. இணையம் அல்லது நெட்ஒர்க் மூலமாக ஒரு கம்ப்யூட்டரிலிருந்து தகவல்களை திருடமுடியும். குறிப்பிட்ட கம்ப்யூட்டரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். அதன் செயல்பாட்டை கூட முடக்கிவிட முடியும். அதுபோலதான் நமது கைப்பேசி செயலிகளின் மூலமாக வேறு நபரால் நமது கைப்பேசியிலிருக்கும் தகவல்களை திருடமுடியும். தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். கைப்பேசி  செயல்பாட்டை கூட முடக்கிவிட முடியும். ஆக கைப்பேசி செயலிகளை  ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்த முடியும். இப்படி நடந்து விடக்கூடாது என்று பல அடுக்கு சோதனைகளும். அதிரடி நடவடிக்கைகளும் எடுத்துவருகிறது கூகுள் நிறுவனம். சமீபத்தில் கூட சீனா தனது செல்போன் தயாரிப்புகள் மூலமாக இந்தியர்களின் தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக செய்திகள் உலாவியது. ஆனால் அது உண்மையில்லை. அந்த காரியத்தை சீனா செய்யாது, ஆனால் அமெரிக்கா செய்யும். சரி கூகுள் பிளேவுக்கு வருவோம்.         

 

கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் ஒரு டிஜிட்டல் சந்தையாக 2008 இல் துவக்கப்பட்டதுதான் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store). இது ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை தளம். இதற்கு முன்னர் இதன் பெயர் ஆண்ட்ராய்டு மார்கெட் (Android Market). 2017 புள்ளி விவரத்தின்படி,  கூகுள் பிளேவில் 3.5 மில்லியன் கைப்பேசி செயலிகள் உள்ளன. இப்பொழுது இன்னும் அதிகரித்திருக்கும். தினம்தோறும் புதுபுது சேவைக்களுக்கான செயலிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல நாள்தோறும் லட்சக்கணக்கான செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டும் வருகின்றன. ஆக இந்த டிஜிட்டல் சந்தை மிக பரபரப்பாக இருந்து வருகிறது. இதன் மூலம் செயலிகளின் உரிமையாளர்களுக்கும், கூகுள் நிறுவனத்திற்கும் லாபம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சினிமா, இசை, டிஜிட்டல் புத்தகங்கள், செய்தித்தளம், விளையாட்டு, நிதிசேவை, வாட்ஸ் ஆப், டார்ச்லைட் என இன்னும் பல வகையான செயலிகள் கூகுள் பிளேவில் கொட்டிக் கிடக்கின்றன. இப்போது பிரச்சனை கூகுள் பிளேதான். சென்ற ஆண்டு இண்டர்நெட்டிலிருந்து பாதுகாப்பற்ற சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்தால் அதன் மூலம் உலகளவில் ரேன்சம்வேர் (ransomware attack) வைரஸ் தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் கம்ப்யூட்டர்களில் ரேன்சம்வேர் தாக்குதல் மூலம் முக்கிய தகவல்கள் முடக்கப்பட்டது. ரேன்சம்வேர் பாதிப்பிலிருந்து விடுவிக்க மென்பொருள் நுண்நாணயமான கிரிப்டோகரன்சி பிட்காயினில் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தியது. இந்த தாக்குதல் மட்டும் 150 நாடுகளில் 2,30,000 மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. 

 

 

bit coin


 

அதேபோல் கூகுள் பிளேவில் உள்ள  செயலிகள் மூலமாக இந்த காரியத்தை செய்யமுடியும் என்பதுதான் இப்போது அதிர்ச்சியான தகவல். இந்த பிரச்சினையை கூகுள் நிறுவனத்திற்கு மென்பொருள் ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இதன் ஒருகட்டமாக மூன்று மாதத்திற்கு முன்னர் பாதுகாப்பற்ற சட்டவிரோதமான 7,00,000 செயலிகளை கூகுள் பிளேவிலிருந்து நீக்கியது கூகுள் நிறுவனம். இருப்பினும் தாங்கள் எச்சரிக்கையாக இருப்பதாக கூகுள் நிறுவனம் தொடர்ந்து உத்தரவாதம் அளித்து வருகிறது.  இன்னொரு பிரச்சினை இன்று உலக பணப்பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்து வருவது மின்னணு பணமான பிட்காயின்.  இந்த கிரிப்டோகரன்சியின் மென்பொருள் C++ மொழியில் எழுதப்பட்டது. உலகின் எங்கிருந்தும் எந்த நாட்டிற்கும் அனுப்பலாம். இந்த பிட்காயின் தீவிரவாதிகள் தங்களுக்கான நிதியை திரட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். கருப்பு பணம் கூட இப்பொது பிட்காயினாக மாறிவருகிறது. இதனால் பிட்காயின் உட்பட அனைத்து கிரிப்டோகரன்சிகளை இந்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இந்த பிட்காயினை கூகுள் பிளேவில் உள்ள செயலிகள் மூலமாக அனுப்பமுடியும் என்பது இன்னொரு பூதாகரமான பிரச்சினை.


 

online theft




பொதுவாக நாம் பயன்படுத்தும் பல்வேறு செயலிகள் நமது மொபைல் போனை பயன்படுத்திக் கொள்கிறது. இந்த செயலிகள் மூலமாக நமது கைரேகை பதிவு, காலண்டர், தொடர்பு முகவரி, இருக்கும் ஏரியா, செல்போன் எண், இமெயில் முகவரி போன்ற தகவல்கள் பெறப்படுகின்றன. தற்போது கிளம்பியுள்ள பிரச்சினையே ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகள், அதிலும் பிரபலமான குழந்தைகளின் செயலிகள் சட்டவிரோதமாக குழந்தைகளின் தகவல்களை சேகரிக்கின்றன என்பதுதான். பிரபல அமெரிக்க ஆய்வறிக்கையில் 6,000 குழந்தைகளுக்கான செயலிகளில் குழந்தைகளின் ஆன்லைன் தனியுரிமை பாதுகாப்பு சட்டம் (Children's online privacy protection Act (COPPA) சட்டத்தை மீறி சட்டவிரோதமாக குழந்தைகளின் தகவல்களை சேகரிப்பதாக தெரிவித்துள்ளது. அதிலும் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் தகவல்கள் அவர்களின்  பெற்றோர்களின் அனுமதி இன்றி பெறப்படுவதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இப்போது பேஸ்புக் அடுத்து கூகுள் பிளேவிலும் தகவல் திருடப்படுவதாக குற்றச்சாட்டு பரபரப்பாக எழுந்துள்ளது. 

 

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார்.