Skip to main content

இலவச நீட் கோச்சிங்! வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது எளிதே! - வழிகாட்டுகிறது கிங்ஸ் அகாடமி!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

Free Neet Coaching - Studying MBBS in abroad is easy now - Kings Academy Offer

 

மருத்துவராக வேண்டும் என்பது மாணவர்களில் பெரும்பாலானவர்களின் லட்சியமாக இருக்கும். மருத்துவர்களுக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பு என்றைக்குமே அலாதியானது. இதனால், மருத்துவத் துறையில் சேர்ந்து படிப்பதற்கான ஆர்வமும் அதிகமாக இருக்கும். மருத்துவம் என்பது வேலையல்ல... சேவை. அதனாலேயே மருத்துவர்கள் மக்களின் போற்றுதலுக்குரியவர்களாக இருக்கிறார்கள். உயிர்காக்கும் மருத்துவராக வேண்டும் என்று விரும்புவரா நீங்கள்?

 

இலவச நீட் கோச்சிங்!
 

இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், நீட் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். மருத்துவராகும் உங்கள் கனவை நனவாக்க `கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி (KIMA)’ உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது. மருத்துவர் கனவோடு இருக்கும் மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு மாத இலவச ஆன்லைன் நீட் கோச்சிங்கை வழங்குகிறது.

 

Free Neet Coaching - Studying MBBS in abroad is easy now - Kings Academy Offer

 

திறமையான வல்லுநர் குழு மூலம் நடத்தப்படும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் நீட் மாதிரி டெஸ்டுகள், இலவச ஸ்டடி மெட்டீரியல்கள் வழங்கப்படும். இந்த கோர்ஸில் இணைந்து பயன்பெறத் தவறாதீர்!

 

வெளிநாட்டிலும் மருத்துவம் படிக்கலாம்!
 

பிளஸ் டூவில் நல்ல கட்-ஆஃப் இருந்தும், நீட் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்தாலும், சில மதிப்பெண் புள்ளிகளால் மருத்துவப் படிப்பைத் தவறவிட்டர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் குறைந்த செலவில் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க முடியும் என்கிறது மாமல்லபுரத்தில் இயங்கிவரும் கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி.

 

ஃபிலிப்பைன்ஸின் முன்னணி மருத்துவக் கல்லூரியான தாவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேஷன் (DMSFI)-இன் இந்தியப் பயிற்சி நிறுவனமாக கிங்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்திய மாணவர்களுக்கு சிறப்பான நீட் பயிற்சியை அளித்து வருவதோடு குறைந்த செலவில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு 1.4 வருட சிறப்புப் பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகிறது.

 

Free Neet Coaching - Studying MBBS in abroad is easy now - Kings Academy Offer

 

ஃபிலிப்பைன்ஸில் என்ன பிளஸ்?
 

ஃபிலிப்பைன்ஸில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. நீட் தேர்ச்சி மட்டுமே போதும். இதற்காகத் தனியாக வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய அவசியமில்லை. அதேபோல், தங்குவதற்கான செலவும், உணவுக் கட்டணமும் குறைவு. சர்வதேசத் தரத்திலான அதிநவீன வசதிகள் கொண்டது DMSFI. அனுபவம் வாய்ந்த துறை வல்லுநர்கள் கொண்ட ஆசிரியர் குழு மூலம் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கி வருகிறது. மாணவர்களுக்குப் பாதுகாப்பான நாடாகக் கருதப்படுகிறது ஃபிலிப்பைன்ஸ். ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருப்பதால், மாணவர்களுக்கு மொழி ஒரு பிரச்னையாக இருக்காது. இந்தியாவில் இருந்து எளிதாக ஃபிலிப்பைன்ஸ் சென்றுவர முடியும் என்பது கூடுதல் வசதி.

 

FMGE தேர்வு என்றால் என்ன?
 

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட Foreign Medical Graduates Examination - FMGE என்ற தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஃபிலிப்பைன்ஸ் தாவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேஷனில் படித்த மாணவர்கள், இந்தியாவில் FMGE தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்தத் தேர்வுக்கான பயிற்சியையும் கிங்ஸ் நிறுவனம் அளிக்கிறது. இந்த ஆண்டு FMGE தேர்வில் DMSFI-ல் பயின்ற மாணவர்கள் 6 பேர் தேசிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறார்கள்.

 

Free Neet Coaching - Studying MBBS in abroad is easy now - Kings Academy Offer

 

பொன்னான வாய்ப்பு!
 

வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் உங்கள் மகனோ/மகளோ தேர்ச்சி பெற திறமையான வல்லுநர்கள் குழு மூலம் கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி இலவச ஆன்லைன் பயிற்சியை அளிக்கிறது. குறைந்த இடங்களே இருப்பதால், உடனடியாக இந்த லிங்கில் (www.kingsneet.in) உங்கள் தகவல்களைக் கொடுத்துப் பதிவு செய்துவிடுங்கள்... இந்த பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டு விடாதீர்கள்!

 

 

 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

“ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Minister Udayanidhi Stalin says Jayalalitha should be praised

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும் இந்த குழுவினர் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்றத் தொகுதிவாரியான பொதுக்கூட்டங்களில் பொறுப்பு அமைச்சர்களுடன், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில், இன்று (17-02-24) ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பொதுக்கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “புதிய கல்வி கொள்கை மூலம் 5,8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்து நமது மாணவர்களை படிக்கவிடாமல் பா.ஜ.க செய்கிறது. ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. 

நீட் விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் மறைந்ததும், அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட் தேர்வு விலக்கு ஏற்படுமோ அதுதான் முதல் வெற்றி” என்று கூறினார்.