Skip to main content

இடதுசாரிகளின் எதிர்காலம் அவ்வளவுதானா?

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

திரிபுரா மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு இயங்கியது. அப்போது அதை பெருமையாக சொன்னால், குட்டியூண்டு மாநிலத்தை ஆட்சி செய்வது பெரிய விஷயமா என்றார்கள்.


ஆனால், இப்போது குட்டியூண்டு மாநிலத்தை வெற்றிபெற்றுவிட்டு இந்தக் குதி குதிக்கிறார்கள். 

 

அந்த அளவுக்கு இடதுசாரிகள் பாஜகவின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த மேற்கு வங்கத்திலும், தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த திரிபுராவிலும் இடதுமுன்னணி அரசு ஆட்சியை அடுத்தடுத்து இழந்திருக்கிறது.

 

இதற்கு காரணம் இடதுமுன்னணியின் மெத்தனம்தான் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

 

மேற்கு வங்கத்தில் தோழர் ஜோதிபாசு முதல்வராக இருந்த சமயத்திலும், அந்த மாநிலத்தில் கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் சமூகநலத் திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை. இன்றுவரை கை ரிக்‌ஷா ஒழிக்கப்படவில்லை.

 

CPIM

 

ஆனால், இந்தியாவிலேயே மிக அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

 

மேற்கு வங்க மாநிலத்தில் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தவிர தொழில் வளர்ச்சியில் இடதுமுன்னணி அரசு கவனம் செலுத்தவில்லை. அரசு கவனம் செலுத்தவில்லை என்பதைவிட, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு மேற்கு வங்க மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது என்பதே உண்மை. 1989ல் தேசிய முன்னணி ஆட்சி நடந்த 2 ஆண்டுகளும், ஐக்கியமுன்னணி ஆட்சி செய்த 2 ஆண்டுகளும்தான் மாநிலத்துக்கு ஓரளவு நிதியுதவி கிடைத்தது. அதுதவிர, 2004ல் ஆட்சிப் பொறுப்பேற்ற ஐமுகூ அரசும் மேற்கு வங்கத்துக்கு ஓரளவு நிதி ஒதுக்கியது எனலாம்.

 

மேற்கு வங்கத்தில் இடதுமுன்னணி அரசு தோற்றதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பிரகாஷ் காரத்தின் அணுகுமுறையே முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற முடிவெடுத்து, அதன்மூலம் திரிணாமுல் காங்கிரஸுடன் காங்கிரஸை கைகோர்க்க வழி செய்தார் என்பதே அவர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

 

ஆம், இடது முன்னணிக்கு எதிரான வாக்குகளை மொத்தம் சேர்க்க பிரகாஷ் காரத் வழி செய்துவிட்டார். அதன்காரணமாக அங்கு ஆட்சியை இழந்த இடதுமுன்னணி, இப்போது மீண்டும் புதிய தலைமுறையினரின் ஆதரவைப் பெறமுடியாமல் தவிக்கிறது. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

 

CPIM

 

மேற்கு வங்கத்தில் இத்தகைய நிலை கண்முன் உருவானதில் இருந்துகூட மார்க்சிஸ்ட்டுகள் தங்களுடைய அரசியல் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.

 

திரிபுராவில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இடதுமுன்னணி, அங்கு தனது எதிர்ப்பு வாக்குகளை குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

 

2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தவுடன் வடகிழக்கு மாநிலங்களைத்தான் முதலில் குறி வைத்தார்கள். திரிபுராவில் பாஜக என்ற கட்சியே இல்லை. ஆனால், அவர்கள் திரிபுரா பழங்குடியினர் கட்சியோடு கூட்டணி அமைத்தார்கள். அந்தக் கட்சியினர் தனிநாடு கோரிக்கைக்காக போராடும் அமைப்பின் அரசியல் பிரிவு என்று தெரிந்து பாஜகவினர் கூட்டணி அமைத்து, பணத்தால் அவர்களை விலைக்கு வாங்கினார்கள்.

 

அவர்களைப் பயன்படுத்தி பழங்குடியினர் பகுதிக்குள் பாஜகவை நுழைத்தார்கள். சமூகநலத்திட்டங்கள் என்ற பேரில் பழங்குடியினருக்கு எரிவாயு சிலிண்டர்களையும், அடுப்பையும் வழங்கினார்கள். அதுவரை அந்த மக்களுக்கு எட்டாப்பொருளாக இருந்த செல்போன்களையும் அறிமுகப்படுத்தினார்கள்.

 

மொத்த வாக்காளர்களே 36 லட்சம் பேர்தான் என்பதால் பணத்தால் அடித்து வாக்காளர்களை விலைக்கு வாங்கினார்கள். தனக்கு கட்சி அடித்தளம் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அவர்களை பாஜகவாக மாற்றினார்கள்.

 

பாஜகவின் இந்த வேலைகள் அனைத்துக்கும் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் இடதுமுன்னணி அரசு மெத்தனமாக இருந்தது. மாநில மக்களை எதிர்க்கட்சி அப்பட்டமாக விலைக்கு வாங்குவதை தடுக்க ஆளும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

25 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே ஆட்சியின்கீழ் இருந்தால், புதிய தலைமுறையினருக்கு ஏற்படும் சலிப்பை பாஜக தனக்கு சாதகமாக மாற்றியது. காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதை பாஜக கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் செய்தது.

 

அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாதம் 15 ஆயிரம் அளவுக்கு உயர்த்துவதாக நடைமுறை சாத்தியமில்லாத பொய்களை அவிழ்த்துவிட்டது.

 

எல்லாமும் சேர்ந்து திரிபுராவிலும் இடதுமுன்னணி அரசை தோற்கடித்துவிட்டது.

 

மாணிக் சர்க்காரின் எளிமையை இடதுமுன்னணி தனது அடையாளமாக காட்டியது. கம்யூனிஸ்ட்டுகள் எளிமையாக இருப்பது செய்தியல்ல. கம்யூனி்ஸ்ட்டுகள், மாறிவரும் உலக சூழலுக்கு ஏற்றபடி மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்பை ஏதோ ஒரு வகையில் இடதுமுன்னணி அரசு நிறைவேற்றத் தவறியிருக்கிறது என்பதையே தேர்தல் தோல்வி காட்டுகிறது.

 

CPIM

 

ஆனால், இடதுமுன்னணி அரசுக்கு மாற்றாக பாஜக செயல்படுமா என்பது போகபோகத்தான் தெரியும்.

 

பாம்புக்கு பால்வார்த்தது போல பிரிவினை இயக்கத்துடன் சேர்ந்து பாஜக தேர்தலை சந்தித்துள்ளது. இனிதான் அந்த இயக்கத்தின் உண்மையான முகம் வெளிப்படும். பழங்குடியினரின் பூர்வீக நிலத்தை கார்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க பாஜக நடவடிக்கை எடுக்கும்போதுதான் அந்தக் கட்சியின் துரோகம் மக்களுக்கு புரியும்.

 

தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியதில்லை. மக்களை பிரித்தாளும் அதன் குணமும் மாறியதில்லை. இதுவரை அமைதியான வாழ்க்கையை வாழ்ந்த திரிபுரா மக்களுடைய வாழ்க்கையில் இனி ஏற்படப்போகும் திருப்பம் எதிர்பாராததாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.