Skip to main content

எடப்பாடியை அதிர வைத்த சர்வே!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

லோ தலைவரே, தேர்தல் பரபரப்பில் பொள்ளாச்சி கொடூரத்திற்கு நியாயம் கிடைக்காமல் போயிடுமோன்னு மக்கள் யோசிக்கிறாங்க''’

"நமக்குத்தான் புது பிரச்சினை வந்தா, பழைய பிரச்சினை மறந்திடுமே... அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் என்ன நடக்குது?''

ops-eps

"எப்படியாவது இந்த விவகாரத்தில் தலை உருளாம இருக்கணும்னு நினைக்கிற அ.தி.மு.க. சீட் பங்கீட்டில்தான் மும்முரமா இருக்கு. பா.ஜ.க.வின் பியூஷ்கோயல் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உட்கார்ந்து சீட் பங்கீடு பற்றி பேசுற அளவுக்குப் போயிருக்கு. தொடர்ந்து நடந்த ஆலோசனையில் பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா உள்ளிட்ட கட்சிகளாடு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்துப் பேசினார்கள். தனி தொகுதியில் நிற்க சரியான வேட்பாளர் இல்லை. அதனால் 4 தொகுதியையும் பொதுத் தொகுதியாவே கொடுங்கன்னு தே.மு.தி.க. சுதீஷ் கேட்டிருக்காரு. பிரேமலதா மதுரையில் நிற்க விரும்புவதாகவும் சொல்லிருக்காரு. பா.ம.க. சார்பில் கலந்துக்கிட்ட ஜி.கே.மணியும், ஏ.கே.மூர்த்தியும், எங்களுக்கு திண்டுக்கல் தொகுதியை ஒதுக்குவதாகச் சொல்லியிருந்தீங்க... அதுக்கு பதில் ஆரணியையோ, மயிலாடுதுறையையோ கொடுங்கன்னு கேட்டிருக்காங்க. பா.ஜ.க. சார்பில் பொன்னார், தி.மு.க. கூட்டணியில் இணக்கமான போக்கு இருக்கு. நம்ம கூட்டணியில் இன்னும் அது ஏற்படலையேன்னு சொல்ல, அதற்கப்புறம்தான் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் ஏற்பாட்டில் ராமதாஸ்-விஜயகாந்த் சந்திப்பு நடந்திருக்கு.''’

ramdoss

""இழுத்தடிச்ச த.மா.கா. ஒரு சீட்டுக்கு ஒப்புக்கொண்டது எப்படியாம்?''’

""தங்கமணியும் வேலுமணியும்தான் வாசனோட பேச்சுவார்த்தை நடத்துனாங்க. உள்ளாட்சித் தேர்தலில் பார்த்துக்கலாம்னு சொல்லியும் வாசன் கேட்கலை. அப்புறம், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பேசி, வாசனுக்கு கேபினட் மந்திரி பதவின்னு டீல் போட, ஒரு சீட்டுக்கு ஓ.கே. சொல்லிட்டாங்க. த.மா.கா.வுக்கு தஞ்சையை அ.தி.மு.க. ஒதுக்கிவிட்டது. இங்கே தினகரன் தரப்பு வலிமையாக களமிறங்கி வேலை செய்யும் என்பதால், த.மா.கா. தலையில் கட்டிட்டாங்கன்னு கூட்டணிக்குள் முணு முணுப்பு கேட்குது.''’
rang
"ஒவ்வொரு தொகுதியின் கள நிலவரம் பற்றியும் ரிப்போர்ட் வந்திருக்குமே?''’

""நடக்க இருக்கும் தேர்தலில் வீக்கான நாடாளுமன்ற -சட்டமன்ற தொகுதிகள் எத்தனைன்னு ஒரு அவசர சர்வேயை எடுக்கச் சொல்லியிருக்கார் எடப்பாடி. அதில் அ.தி.மு.க. அணி 28 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடக்கும் 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் ரொம்பவும் வீக்கா இருக்குன்னு தெரியவர... அந்த தொகுதிகளில் இருக்கும் சாதிய அமைப்புகள், சமூக அமைப்புகள், மகளிர் குழுக்கள், முகநூல் குழுமங்கள்னு அனைத்தையும் விட்டமினால் கவனிக்கவும் சிறப்புத் திட்டங்கள் வகுக்கும்படி சொல்லியிருக்கிறார். எம்.பி. தொகுதியைவிட எம்.எல்.ஏ. தொகுதியில்தான் அதிக கவனமாம்.''’

"தினகரனின் அ.ம.மு.க. என்ன ப்ளானில் இருக்கு?''’

""எம்.பி. அண்ட் எம்.எல்.ஏ. தொகுதிகளில் அ.ம.மு.க. பிரிக்கும் ஓட்டுகளால் அ.தி.மு.க. ஒன்றில்கூடக் கரை ஏறிடக்கூடாதுன்னு நினைக்கிறார் தினகரன். தனிச்சி நிற்பதன் மூலம் தங்கள் கட்சிக்கு இருக்கும் வாக்கு பலத்தைத் தெரிஞ்சிக்கவும் அவர் ஆசைப்படுறார். இடைத்தேர்தல் தொகுதிகளில்தான் தினகரன் கவனம் ஷார்ப்பா இருக்கு. 13-ந் தேதி திருவண்ணாமலை அபர்ணா ஓட்டலில் தன் உறவினரான ராஜராஜனோடு தங்கி, கட்சி நிர்வாகிகளோடு தேர்தல் குறித்து ஆலோசிச்சார். தேர்தல் செலவு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கு. 14-ந் தேதி, பரப்பனஹள்ளி சிறையில் சசிகலாவை சந்திச்சி, வேட்பாளர் பட்டியலுக்கு ஓ.கே. வாங்கிட்டு, தேர்தலுக்கான நிதி பற்றியும் தினகரன் பேசி, க்ரீன் சிக்னல் வாங்கிட்டாராம்.''’

"அ.ம.மு.க.வோடு கூட்டணி அமைக்கும்னு எதிர்பார்க்கப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேற முடிவு எடுத்திடுச்சே?''’

"தி.மு.க. அணிதான் வேல்முருகனின் முதல் சாய்ஸ். அது சரிப்படலை. குடல் பிரச்சினையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், சென்னை காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆயிட்டார். அவரை தினகரன் சார்பில் சந்தித்த வெற்றிவேல், அ.ம.மு.க.வோடு கூட்டணி பற்றி பேசினாலும், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கடுமையாக மோதும் சூழலில் நாம் தனித்து இருப்போம்ங்கிற முடிவுக்கு வந்துட்டாரு.''’
kamal
""தி.மு.க. சைடில் என்ன நடக்குது?''’

""ராகுல் விசிட்டால் தி.மு.க. கூட்டணியின் தொகுதி அறிவிப்பு தாமதமாயிடிச்சி. ஆனா, காங்கிரசைத் தவிர மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளை அந்தந்த கட்சிகளும் முன்கூட்டியே முடிவு செய்திடிச்சி. கள்ளக்குறிச்சியைக் கேட்ட ஐ.ஜே.கே. பாரிவேந்தருக்கு பெரம்பலூர் ஒதுக்கப்பட, அதன் பெரும்பாலான பகுதி திருச்சிக்குள் வருவதால், கே.என்.நேருவை சந்திச்சி தேர்தல் வேலையைத் தொடங்கிட்டாரு பாரிவேந்தர்.''’

"இடைத்தேர்தலிலும் நிற்கப் போறதா மக்கள் நீதி மய்யம்’ முடிவெடுத்திருக்கே?''’

"பதட்டமா இருக்கும் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடக்குமாம். டார்ச் லைட் சின்னம் கிடைத்ததும் தெம்பான கமல், தனக்கான பலம் என்னன்னு எல்லா தொகுதிகளிலும் பார்க்க நினைக்கிறார்.''

“கமலுக்கு டார்ச்லைட் ஒதுக்கிய தேர்தல் ஆணையம், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கான இரட்டை மெழுகுவத்தி சின்னத்தை ஒதுக்க மறுத்திருக்குது. ஏற்கனவே விடுதலை சிறுத்தை களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்படலை.''

Next Story

'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' - திமுக தலைவர் ஸ்டாலின்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The impossibility situation really saddens me too'-DMK President Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தநிலையில் 'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது.  தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'பதில் சொல்லுங்க சார்...'- தேர்தல் பறக்கும் படையினரிடம் இரவில் வாக்குவாதம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'Answer me sir...'-Argument at night with election flying soldiers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மறுபுறம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் சுவர் விளம்பரங்கள் மறைக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு சரியான ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம் மட்டும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் 47 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த நிலையில் பணத்தை கொண்டு வந்த நபர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோம்புபள்ளத்தில் காரில் சென்றவர்களிடம் தாசில்தார் மாரிமுத்து தலைமையிலான பறக்கும் படை குழுவினர் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த 47 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். 50,000 ரூபாய் வரை மருத்துவ செலவுக்காக எடுத்துச் செல்லலாம் எனக்கு கூறப்பட்டிருக்கும் நிலையில் 47 ஆயிரம் ரூபாயை நீங்கள் பறிமுதல் செய்துள்ளீர்கள் என அதிகாரிகளுடன் காரில் சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'உங்களுக்கு தேர்தல் பறக்கும் படை வேலை இருக்கிறது என்றால் எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா? ஹாஸ்பிடலுக்கு கட்டுவதற்காக 47 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டுப் போக முடியாதுன்னு சொல்றீங்க. எப்படி சார் எடுத்துட்டு போகாம இருக்கிறது. செய்தியில் சொல்றாங்க 50,000 வரை எடுத்துக்கொண்டு போலாம்னு. அதுவும் ரவுண்டா ஐம்பதாயிரம் கூட இல்லை 47,000 தான் இருந்தது. அந்த ஜி.ஓ வ எங்களுக்கு கொடுங்க. எங்கள் பணத்தை நாங்கள் எலக்சன் முடிஞ்ச பிறகு கூட வாங்கிக்கிறோம்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.