Skip to main content

இது தளபதிகள் மோதிய போர்! - கர்நாடகா முதல்வரை தீர்மானித்தவர்கள்   

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

குஜராத் பிரதமராக இருந்த நரேந்திர மோடியை, இந்தியாவின் பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்தபோது, அதனை செயல்படுத்தும் தளபதியாக நியமிக்கப்பட்டவர் மோடி அமைச்சரவையில் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்து, போலி என்கௌண்டர் வழக்கில் சிக்கி சிறை சென்ற அமித்ஷா. அவரின் தேர்தல் வியூகம் மோடியை பிரதமராக்கியது. 

 

reddy



கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் எடியூரப்பாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கும் பொறுப்பை பாஜக தலைமை, ஜனார்தன ரெட்டியிடம் ஒப்படைத்தது. காங்கிரஸ் கட்சி, சித்தராமைய்யாவுக்கு அதே வேலையை செய்ய சிவக்குமாரிடம் ஒப்படைத்தது. இந்த இருவரும்தான் தங்கள் கட்சி வெற்றி பெற கோடி கோடியாய் பணத்தை செலவழித்தார்கள். 

தேர்தல் முடிவு யாருக்கும் பெரும்பான்மையில்லை. பெரும்பான்மையில்லாத நிலையில் மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரத்தைக் கொண்டு கர்நாடகா முதல்வர் பதவியில் பாஜக எடியூரப்பாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வேலையை ஜனார்தனரெட்டியிடம் ஒப்படைத்துள்ளது பாஜக. எடியூரப்பாவை பதவியில் இருந்து இறக்கிவிட்டு காங்கிரஸ் – ஐக்கிய ஜனதா தளம் குமாரசாமியை முதல்வர் பதவியில் அமரவைக்கும் பொறுப்பை சிவக்குமாரிடம் ஒப்படைத்துள்ளது காங்கிரஸ் கட்சி தலைமை. 

கோடி கோடியாய் பணம் வைத்துக்கொண்டு அனைத்து விதமான வழிகளிலும் பேரம் பேசிய இந்த தளபதிகள் பின்னணி என்ன? 

 

sivakumar



பாஜக – ஜனார்தன ரெட்டி

ஆந்திராவில் இருந்து பிழைப்புக்காக கர்நாடகா வந்தவர் ஜனார்தனரெட்டி. இவரின் சகோதரர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, நண்பர் ஸ்ரீராமுலு. கர்நாடகாவின் பெல்லாரி, ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை வெட்டியெடுத்து சம்பாதித்துக்கொண்டு இருந்தார்கள் ரெட்டி பிரதர்ஸ். அரசியல் அடைக்கலம் வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இருந்தார்கள்.

1999 நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த சோனியாகாந்தி, பெல்லாரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜகவின் சுஷ்மா சுவராஜ்ஜை நிறுத்தியது பாஜக தலைமை. அப்போது சுஷ்மாவுக்காக தேர்தல் கள தளபதியாக இருந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். அந்தத் தேர்தலில் சுஷ்மா தோல்வியை சந்தித்தாலும் ரெட்டி சகோதரர்களின் தேர்தல் பணியால் கவரப்பட்ட சுஷ்மா, அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். அதோடு, அப்போது மத்தியில் பாஜக ஆட்சி என்பதால் சலுகைகளை வாரி வழங்க ரெட்டி சகோதரர்களின் தொழில் பல மடங்கு வளர்ந்து கோடிக்கோடியாய் கொட்டியது. அதில் ஒரு பங்கு சுஷ்மாவுக்கும் சென்றதாக சொல்லப்பட்டது. 

 

 


2001ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக முதல் முறையாக பெல்லாரி பகுதியில் 3 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றது. அதற்கு முழு முதல் காரணகர்த்தா ரெட்டி சகோதரர்கள். 2006ல் கர்நாடகா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டியில்லை. ஜனதா தளமும் – பாஜகவும் கூட்டணி சேர்ந்து, நீ இரண்டரை வருடம், நான் இரண்டரை வருடம் என ஒப்பந்தம் போட்டுக்கொண்டு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார்கள். இதற்கு பெரும் பலமாய் இருந்தது ரெட்டி சகோதரர்கள். தனது நண்பர் ஸ்ரீராமுலுவை அமைச்சராக்கினார் ஜனார்த்தனரெட்டி. 

மீண்டும் அடுத்த தேர்தல்... பாஜகவை ஆட்சியில் அமர்த்த கடுமையாக தேர்தல் வேலை செய்தது ரெட்டி சகோதரர்கள்தான். சில நூறு கோடிகளை செலவு செய்தார்கள். பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்று, சுயேட்சைகள் ஆதரவுடன் எடியூரப்பா முதல்வரானார். ஜனார்தனரெட்டி, சுற்றுலாத்துறை அமைச்சரானார். சகோதரர்கள் வாரிய தலைவரானார்கள். நண்பர் ஸ்ரீராமுலுவும் அமைச்சரானார். முன்பை விட பல மடங்கு உயர்ந்தது ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோத கனிம வியாபாரம். இது தொடர்பான வழக்குகளுக்காக 2011 செப்டம்பர் 5ந்தேதி ஜனார்தனரெட்டி கைது செய்யப்பட்டார்.

எடியூரப்பா எவ்வளவோ முயன்றும் பாஜகவின் மத்திய தலைமை காப்பாற்றவில்லை. இதனால் கோபமான ஜனார்த்தனரெட்டி, 2013 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனது நண்பர் ஸ்ரீராமுலுவை பாஜகவில் இருந்து வெளியில் வரவைத்து தனிகட்சி தொடங்கவைத்தார். எடியூரப்பாவும் தனிக்கட்சி தொடங்கினார். 2013 தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னால் பாஜக தலைமை, எடியூரப்பா, ஸ்ரீராமுலுவை சமாதானம் செய்து பாஜகவுக்கு அழைத்துக்கொண்டது. 2014ல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரான பின், 2015 ஜனவரி மாதம் சிறையில் இருந்த ஜனார்தன ரெட்டிக்கு பிணை கிடைத்து வெளியில் வந்தார். 

 

 


அந்த ஜனார்தனரெட்டி, இந்த 2018 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என்பதற்காக சுமார் 45 தொகுதிகளுக்கான தேர்தல் செலவை முழுவதும் ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் செய்தார். மற்ற தொகுதிகளுக்கும் செலவு செய்தார். ஆனால் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தும் பிரதமர் மோடியின் ஆசிர்வாதத்தாலும் ஆளுநரின் அட்டகாசத்தாலும் முதல்வராகினார் எடியூரப்பா. பெரும்பான்மைக்கு தேவையான 7 எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து இழுக்க ஒரு எம்.எல்.ஏவுக்கு 150 கோடி என ரேட் பிக்ஸ் செய்து வலை வீசினார் ரெட்டி. இதில் இரண்டு, மூன்று எம்.எல்.ஏக்கள் சிக்கினர். அதே நேரத்தில் பாஜகவின் எடியூரப்பாவுக்காக, ஜனார்தனரெட்டி பேரம் பேசிய ஆடியேவை காங்கிரஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இத்தனை வியூகங்களும் பேரங்களும் தோற்றுப்பாக கண்ணீர் உரை நிகழ்த்தி தனது 56 மணி நேர முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவ்வளவு வலிமை மிக்க தளபதி இருந்தும் தளவாடங்கள் இருந்தும் இவரால் எம்.எல்.ஏக்களை கைப்பற்ற முடியாததற்கு காரணம் எதிரணியில் இருந்த பலமான இன்னொரு தளபதி. 

  sivakumar



 

reddy



காங்கிரஸ் – சிவக்குமார்

மைசூர் அருகிலுள்ள கனகபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது தம்பி சுரேஷ். இரண்டு பேருமே தீவிர காங்கிரஸ் செயல்பாட்டாளர்கள். விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இன்று இவர்கள் செய்யாத தொழிலே கிடையாது. கனிம வளத்தை வெட்டி விற்பதுதான் முக்கிய முன்னணி தொழில். 1983ல் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் 1989 முதல் சட்டமன்ற  தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் அமரும்போதெல்லாம் இவருக்கு அமைச்சர் பதவி நிச்சயம். கடந்த 2013-2018 ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தார். 2015ல் இவர் மீது சுரங்க முறைகேடு என சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

2017ல் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு இரண்டு எம்.பிக்களை தேர்வு செய்யும் தேர்தலில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயன்றபோது, அவர்களை பாதுகாக்கும் பணியை காங்கிரஸ் தலைமை, அமைச்சராக இருந்த சிவக்குமாரிடம்தான் ஒப்படைத்தது. அவர்தான் மைசூர் அருகே நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பாக தங்கவைத்து வேண்டியதை செய்து தந்து, ஒரு எம்.பி சீட்டை கன்பார்ம் செய்து தந்தார். இதில் கோபமான மோடி அரசாங்கம், வருமானவரித்துறையை சிவக்குமார் மீது ஏவியது. சென்னை, பெங்களுரு, டெல்லி என 67 இடங்களில் 300 அதிகாரிகள், 80 மணி நேரம் ரெய்டு செய்தும் அமைச்சராக இருந்த சிவக்குமாரை அசைக்க முடியவில்லை பாஜகவால். 

 

 


2018 சட்டமன்ற தேர்தலில் ராம்நகர் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட சிவக்குமார், வேட்பு மனுவில் 700 கோடி சொத்துள்ளது  என்று கணக்குகாட்டி தேர்தல் ஆணையத்தை அலறவிட்டார். தேர்தல் முடிவில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனதா தளம் வேட்பாளர் நாராயணகவுடாவை விட 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளரை டெபாசிட் இழக்க வைத்தார். காங்கிரஸ்க்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லையென்றதும் ஜனதா தளத்துடன் காங்கிரஸ் தலைமை கூட்டணி வைத்து, மஜத குமாரசாமியை முதல்வராக்க முடிவு செய்தது. அப்படி முடிவு எடுக்கப்பட்டதும் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருக்கும் பொறுப்பை சிவக்குமாரிடம் தான் சித்தாராமையா ஒப்படைத்தார். இந்த சிவக்குமார் தந்த தெம்பில்தான், குமாரசாமி, நாங்களும் பாஜகவில் இருந்து எம்.எல்.ஏக்களை தூக்குவோம் என்றார் கெத்தாக. சிவக்குமார் முதன் முதலாக 1985ல் சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டபோது, எதிர்த்துப் போட்டியிட்டவர் ஜக்கிய ஜனதா தளம் தேவகௌடா. அவரிடம் தோற்ற சிவக்குமார், இப்போது கட்சி தலைமை சொன்னதற்காக அவரது மகனை முதல்வராக்க முயற்சி எடுத்து வருகிறார். 

இப்படி காங்கிரஸ் – பாஜக இரண்டு தரப்பிலும் இரண்டு தளபதிகளை களத்தில் இறக்கினார்கள். கர்நாடகாவின் முதல்வர் யார் என்பது இந்த மைன்ஸ் அதிபர்கள் கைகளில்தான் உள்ளது. தற்போது எடியூரப்பாவின் தளபதி தோற்றிருக்கிறார். சித்தராமையாவின் தளபதி வெல்வாரா? விரைவில் தெரியும். 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.