Skip to main content

சாக்குப் பையில் பள்ளிப்படிப்பு... இந்திய அரசியலமைப்புக்கு அவரே பிடிப்பு - அவர்தான் அம்பேத்கர்!

Published on 14/04/2020 | Edited on 14/04/2020


இந்திய அரசியல் சாசனத்தின் தளகர்த்தர் பாரத ரத்னா அம்பேத்கருக்கு இன்றைக்குப் பிறந்த தினம். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அவருக்கு வாலிபக் காலம் அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை. பள்ளிக்குச் சாக்குப் பையை எடுத்துக்கொண்டு அதில் அமர்ந்து பாடம் கற்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். சாதி ஏற்றத்தாழ்வுகள் அவரை அனலாய் எறித்தது. ஆனால் பனிமலையாய் அவற்றை எதிர்த்து போரிட்டார். பல போராட்டங்களுக்குப் பிறகு, பல பட்டங்களையும், ஆய்வு கட்டுரைகளையும் சமர்பித்து டாக்டர் பட்டம் பெற்ற அவர், பரோட மன்னரின் ஆட்சியில் ராணுவச் செயலாளராகப் பணியில் சேர்ந்தார்.  பணியில் இருந்த அவருக்கு ஒரு நாள் தாகம் ஏற்படவே அங்கிருந்தவர்களைத் தண்ணீர் கேட்டுள்ளார். யாரும் தண்ணீர் தர முன்வரவில்லை. மீண்டும் கேட்டார் யாரும் அசையக்கூட வில்லை. என்ன காரணம் என்று அவருக்கு உடனடியாகப் புரியவில்லை.
 

ுப



15 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில், தான் சாக்குப் பையில் அமர்ந்த நினைவலைகள் அவருக்கு வந்து சென்றது. நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் நமக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று உணர்ந்தார். அங்கீகாரம் கிடைக்காது, நாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த நொடி முடிவெடுத்தார். பதவியை ராஜினாமா செய்தார். படிப்புக்காக முதன்முதலில் அமெரிக்கா சென்ற அவருக்கே இந்திய அரசியலமைப்பை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் அந்த வாய்ப்பு அவருக்கு எளிதாகக் கிடைத்து விடவில்லை. போராட்டம், போராட்டம் தொடர்ந்து பேராட்டம். இந்த வார்த்தைகள் யாருக்கு பொருத்துகிறதோ இல்லையோ அம்பேத்கருக்கு நூறு சதவீதம் பொருந்தும். தீண்டாமை இருளை விரட்ட தொடர்ந்து பேசினார், எழுதினார். அதிகார வர்க்கத்தோடு மோதினார், உயர் பதவிகளை தூக்கி எறிந்தார். அம்பேத்கருக்கு வாழும் வரை கருணையின்றி தொல்லை கொடுத்த இந்தச் சமூக கட்டமைப்பு இறப்புக்கு பிறகும் உடனடியாக அவருக்கான மரியாதையைச் செய்யவில்லை. இறந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகே அவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது. சிலருக்கு விருதுகள் பெருமை சேர்க்கும். சிலர் விருதுகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்பேத்கருக்கு இரண்டாவதாகச் சொல்லப்பட்டது நூறு சதவீதம் பொருந்தும்!


 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.