Skip to main content

ஆடி காரில் எமன் வர தமிழக அரசே காரணம்: கே.பாலு

Published on 03/08/2018 | Edited on 03/08/2018

 

கோவையில் பேருந்துக்காக காந்திருந்த பயணிகள் மீது ஆடி கார் சீறிப்பாய்ந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆடி காரை ஓட்டி வந்த ஜெகதீஷ் என்பவர், மது அருந்தியது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. 
 

 

 

போலீஸ் கமிஷனர் பெரியய்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது, கார் டிரைவர் ஜெகதீசன் குடிபோதையில் இருந்ததை டாக்டர் முன்னிலையில் ஒப்புக்கொண்டு உள்ளார். இதுகுறித்து டாக்டர்கள் ஒப்புதல் சான்றிதழ் வழங்கி உள்ளனர். ரத்த மாதிரி எடுத்தும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஜெகதீசன் மீது ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 304(2) உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தே அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி மரணம் விளைவித்தல், 337 (உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கவனக்குறைவாக செயல்படுதல்), 338(கடும் காயத்தை ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துதல்), 279 (அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் வாகனத்தை ஓட்டுதல்) ஆகிய 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குடிபோதையில் காரை ஓட்டிச்சென்றது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 183(அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்), 184(அபாயகரமாக ஓட்டுதல்), 185 (குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது) ஆகிய மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. கைதான டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 304 (2) சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் குறைந்த பட்சம் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. 

 

balu


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சமூக நீதி பேரவையின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான கே.பாலு,
 

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு டாஸ்மாக் கடை முன்பு கிட்டதட்ட 200 இருசக்கர வாகனங்கள் நிற்கின்றன, மாலையில் மட்டும். குடித்துவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு போகும்போது காவல் காக்கிறது, காவல்துறை. பின் சிறிது தூரம் தள்ளி நின்று நானும் சோதனை செய்கிறேன் என சோதனையில் ஈடுபடுகின்றனர். 
 

 

 

அரசாங்கம் தெரிந்தே செய்கிறது. மதுக்கடைகளுக்கு முன் நிற்கும் வண்டிகளெல்லாம் குடித்துவிட்டு வருபவர்களுடையது, கடை அரசாங்கத்தினுடையது. அதனால் அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. இந்த விஷயத்தை மிக கவனமாக பார்க்கவேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்டவன் அப்பாவி அவன் ஒரு பாவமும் செய்யாதவன். இவன் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி ஏற்படும் விபத்தை எதைவைத்தும் ஈடுசெய்ய முடியாது. 
 

அதிவேகமாகவோ, கவனக்குறைவாகவோ வாகனம் ஓட்டி ஒரு விபத்து நடக்கிறதென்றால் அதற்கு இழப்பீடு, காப்பீடு ஆகியவற்றை தரலாம். ஆனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அதனால் ஏற்படும் விபத்திற்கு இழப்பீடோ, காப்பீடோ வழங்கவேண்டுமென சட்டத்தில் சொல்லப்படவில்லை. யார் விபத்திற்கு காரணமோ அவர்தான் வழங்கவேண்டும் என சொல்கிறது. இது அனைத்து இடங்களிலும் சாத்தியமாகாது. 
 

 

 

அதனால் மதுக்கடைகளை நடத்தும் அரசாங்கம் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்படும் விபத்துகளுக்கான நிதி என ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கவேண்டும். இந்த மாதிரியான விபத்துகள் நடக்கும்போது அவரது உரிமம் உடனடியாகப் பறிக்கப்படுவதையும் தாண்டி அந்த வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் அதுகுறித்த பயம் வரும். இவையனைத்தையும் தாண்டி இப்படியான விபத்துகளுக்கு அரசாங்கம்தான் காரணம். முழுக்க, முழுக்க அரசாங்கம் மட்டும்தான் காரணம். ஏனென்றால் மது விற்பது அரசாங்கம்தான், மதுக்கடைகளின் முன் நிற்கும் வாகனத்தை எடுத்துச் செல்ல அனுமதிப்பதும் அரசாங்கம்தான் அதனால்தான் இதற்கு முழு காரணமும் அரசாங்கம் என கூறுகிறேன் என்றார் உறுதியாக.

Next Story

ஆடி கார் தந்தது யார்? சித்ராவை சந்தித்த எம்.எல்.ஏ.வா? அமைச்சரா? மீண்டும் மீண்டும் பரபரப்பு!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020
audicar-chitra

 

சின்னத்திரை நடிகை சித்ரா தங்கியிருந்த ஹோட்டலுக்கு அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பே ஒரு மந்திரியின் கார் வந்து போயிருக்கிறது. விஜய் டி.வியின் ஷூட்டிங் அரங்குகள் நிறைந்த ஈ.வி.பி பிலிம் சிட்டி ஸ்பாட்டுக்கு பக்கத்தில் உள்ள அந்த ஹோட்டலுக்கு அமைச்சரின் கார் அடிக்கடி வரும்.

 

போலீஸ் பாதுகாப்பைத் தவிர்த்து விலையுயர்ந்த காரில் ஆரோக்கியமான மந்திரி அங்கு வருவது வழக்கம். சித்ராவுக்கு ஆடி கார் வரை பிரசண்ட் செய்யப்பட்டதன் பின்னணியிலும் இவர் இருக்கிறாராம்.

 

இந்த செய்தி அரசல் புரசலாக மீடியாக்களில் வெளியானதும், சென்னை மந்திரியை நோக்கி சந்தேக வலை பரவியது. அவரது ஆதரவாளர்கள மறுத்தனர். ஆனாலும், அ.தி.மு.க. சைடிலிருந்தே மீண்டும் மீண்டும் பரபரப்பு கிளம்பியது. அடுத்ததாக, பெரம்பலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச் செல்வன் பெயரை உருட்டினர் சொந்தத் தொகுதி கட்சிக்காரர்களே!

 

2011-ஆம் ஆண்டு சசிகலாவின் அண்ணி இளவரசியின் சகோதரர் கண்ணதாசன் பெரம்பலூரில் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அவரது சிபாரிசில் எம்.எல்.ஏ. சீட் வாங்கியவர் இளம்பை தமிழ்ச்செல்வன். 2016-ல் ஜெ.வின் நேரடி சாய்ஸில் சீட் பெற்றார். வாடகை வீட்டிலிருந்து வசதியான வாழ்க்கைக்கு மாறினார். பொள்ளாச்சி காமக்கொடூரங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியானபோது தமிழ்ச்செல்வனும், அவரது ஆட்களும் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற பெயரில் பெரம்பலூரில் உள்ள ஹோட்டலில் ரூம்போட்டு அங்கு வேலை தேடிவந்த இளம்பெண்களை ஆபாசமாகப் படமெடுத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி, தொடர் டார்ச்சர் தந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ வாக்குமூலத்தை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அறம் என்பவர் வெளியிட்டார். ""இது தொடர்பான புகார்கள் எம்.எல்.ஏ. மீது இப்போதும் இருக்கிறது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார்'' அறம்.

 

audicar-chitra

 

இந்நிலையில், வேலை வாங்கித் தருவதாக மோசடி நடந்த அதே பெரம்பலூர் ஹோட்டலில் நடந்த ஒரு விழாவுக்கு நடிகை சித்ராவை அழைத்திருந்தார் தமிழ்ச்செல்வன். 2020-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகவும் எம்.எல்.ஏ.வின் அழைப்பின் பேரில் சித்ரா பெரம்பலூர் வந்திருக்கிறார். அதற்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் 21- ஆம் தேதி பார்க் ஹவுஸ் என்கிற கிஃப்ட் ஃஷாப்பை திறந்து வைக்க சித்ராவை எம்.எல்.ஏ. அழைத்து வந்துள்ளார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சித்ராவின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கோவையைச் சேர்ந்த ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியின் நிர்வாகியான தினேஷ் மூலமாகவே சித்ரா தமிழ்ச்செல்வனின் விழாக்களுக்கு வந்துள்ளார்.

 

இது பற்றி தினேஷிடம் கேட்டோம். அவர், ""24 வயதில் ஈவென்ட் மேனேஜ்மேண்ட் துறையில் செயல்படுகிறேன். சித்ராவை எனக்கு தெரியும். அவரை பெரம்பலூருக்கு அழைத்து சென்றது நான்தான். ஆனால், எம்.எல்.ஏ. எனது செல்போன் மூலமாக சித்ராவுக்கு அனுப்பிய குறுந்தகவல்களால்தான் அவருக்கும் அவர் கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மையல்ல. சித்ராவும் எம்.எல்.ஏ.வும் பேசவேண்டுமென்றால் நேரடியாகவே பேசிக் கொள்வார்கள். எனக்கு ஹேம்நாத்தை சித்ரா பதிவுத் திருமணம் செய்த விபரம்கூடத் தெரியாது'' என்றார்.

 

audicar-chitra

 

இந்த விவகாரம் குறித்து பெரம்பலூர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரான குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரனிடம் கேட்டோம், ""இளம்பை தமிழ்ச்செல்வன் இதுபோன்ற பெண் விவகாரங்களில் சிக்குவது வாடிக்கை. சித்ரா மரணத்தில் இளம்பை தமிழ்ச்செல்வனுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் மீடியாக்களில் வெளியாகிறது. ஏற்கனவே தமிழ்செல்வன் அத்துமீறி ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டதாக வந்த புகாருக்கும், சித்ராவுடன் நெருக்கமாக பழகி அவரது தற்கொலைக்கு அவர் காரணமானார் என எழுந்திருக்கும் புகாருக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் எனக்கு போட்டியாக மாவட்ட செயலாளர் பதவியை பெற முயற்சித்தார். அடுத்த முறை எம். எல்.ஏ.வாக அவர் வெற்றி பெற்றால் அவர் அமைச்சர் ஆகிவிடுவார் என்கிற காரணத்தால் நான் சித்ரா விவகாரத்தில் தமிழ்ச்செல்வன் மீது புகார் கிளப்புகிறேன் என அவர் சொல்லி வருகிறார். அவர் அமைச்சரானால் எனக்கு மகிழ்ச்சிதான். என்னை பொறுத்தவரை தமிழ்ச்செல்வன் தனது விவகாரமான செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்'' என்றார்.

 

audicar-chitra

 

இதுபற்றி இளம்பை தமிழ்ச்செல்வனின் கருத்தை அறிய தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால் ஃபோனை அவர் எடுக்கவில்லை. வீட்டில் நேரில் சந்திக்க அப்பாயிண்ட் மெண்ட் கேட்டு தொடர்பு கொண்டோம். இரண்டரை மணி நேர காத்திருப்புக்கு பிறகு நம்மை சந்தித்தார். ""முன்பு என் மீது சொல்லப் பட்ட அந்த சர்ச்சைக்குரிய புகார் நான் சார்ந்திருக்கும் அ.தி.மு.க.வினராலேயே ஊதிப் பெரிதாக்கப்பட்டது. அந்த வழக்கு தற்பொழுது முடிந்துவிட்டது. 

 

2020-ஆம் ஆண்டு சித்ரா ஒரு ஹோட்டல் விழாவில் கலந்துகொள்ள பெரம்பலூருக்கு வந்தார். நான் அந்த விழாவில் கலந்து கொள்ள வில்லை. வேண்டுமென்றால் ஹோட்டல் நிர்வாகத்திடம் விசாரித்துக் கொள்ளுங்கள். மற்ற விழாக்களில் சித்ராவுடன் நான் கலந்துகொண்டேன். அவையெல்லாம் வெறும் ஐந்து நிமிட நிகழ்ச்சிகள். சித்ராவுக்கு ஆடி கார் வாங்கித் தர நான் உதவி செய்யவில்லை. நானே வாடகை வீட்டில்தான் இன்னமும் குடியிருக்கிறேன். நான் உபயோகப்படுத்தும் கார் கூட 9 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியது. நான் ஏன் ஒரு நடிகைக்கு மிக விலை உயர்ந்த காரை வாங்கித் தர உதவி செய்ய வேண்டும்'' என்றார்.

 

சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத் போலீசுக்கு கொடுத்த வாக்குமூலத்தில் உங்களுக்கும் சித்ராவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியிருக்கிறாரே என நாம் அவரிடம் கேட்டதற்கு, ""அவையெல்லாம் தவறான செய்திகள். எனது கட்சியில் இருக்கும் பலர் எனக்கு விரோதமாக செயல்படுகின்றனர். சித்ராவுக்கு நான் குறுஞ்செய்தி அனுப்பினேன் என்பது பொய். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு நடிகைக்கு குறுஞ்செய்தி அனுப்பி வம்பில் மாட்டிக் கொள்ளமாட்டேன்'' என்றார்.

 

சித்ரா மரணம் குறித்து விசாரிக்கும் போலீஸ் வட்டாரங்கள், சித்ராவுக்கு மேனேஜர் என யாரும் கிடையாது. அவரே அவரது வேலைகளைப் பார்த்துக் கொள்வார் என்கிறார்கள். அதையேதான் நம்மிடம் பேசிய தினேஷும் உறுதி செய்தார். சித்ராவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். அவரது தாயாருக்கும் தெரியும். சித்ரா ஹேம்நாத்தை பதிவுத் திருமணம் செய்து கொண்டது மிக நெருங்கிய உறவினர் களுக்கு மட்டும்தான் தெரியும். சித்ராவுக்கு வரும் மெசேஜ்கள் விவகாரத்தில் அவரது தாயார், சித்ராவுக்கு ஆதரவாக இருந்துள்ளார். அதை அவரது கணவர் ஹேம்நாத் எதிர்த்துள்ளார். இதுதொடர்பாக சித்ராவின் விஜய் டிவி சூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று ஹேம்நாத் பலமுறை தகராறு செய்துள்ளார். சித்ராவின் தாயார் அதை தட்டிக் கேட்டுள்ளார்.

 

இந்த மோதலில்தான் சித்ரா இறந்துள்ளார். சித்ராவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தற்கொலை எனக் கூறப்பட்டுள்ளது. அதுவே சந்தேகத்திக்குரியது. அந்த பிரேதபரிசோதனை கொஞ்சம் தாமதமாகவே நடந்துள்ளது. அதில் வந்த தற்கொலை முடிவுக்கு ஆளும் அ.தி.மு.க. தரப்பின் நெருக்கடியே காரணம் என்கிறார்கள் சித்ராவுக்கு நெருக்கமான நண்பர்கள். சித்ராவுக்கு பாப்புலாரிட்டி தந்த டி.வி சேனலின் நட்சத்திரங்கள் திருமண வாழ்க்கையில் ஜொலிப்பதில்லை என்ற சென்ட்டிமென்ட்டும் சின்னத் திரை வட்டாரத்தில் நிலவுகிறது. .

 

இதற்கிடையே சித்ராவின் மரணத்தைப் பற்றியும், ஆடி கார் பற்றியும் விசாரிக்க பெரம்பலூருக்கும், புதுக்கோட்டைக்கும் போலீஸ் டீம் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Next Story

வீட்டிலேயே பணம் அச்சடித்த பெண்... ஆடி கார் ஆசையால் போலீஸிடம் சிக்கினார்...

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

ஆடி கார் வாங்க வேண்டும் என்பதால் பணத்தை வீட்டிலேயே பிரிண்ட் போட்டு ஷோரூமிற்கு எடுத்து சென்ற 20 வயது ஜெர்மனி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

german woman arrested for using fake currency to buy audi car

 

 

ஜெர்மனியை சிறந்த 20 வயதான பெண் ஒருவர் நீண்ட காலமாக ஆடி கார் ஒன்றை வாங்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரிடம் அதற்கான பணம் இல்லாத நிலையில் வீட்டிலேயே கள்ள நோட்டு அடிப்பதென முடிவெடுத்துள்ளார். சாதாரண இன்க்ஜெட் பிரிண்டர் மூலம் 15,000 யூரோ பணத்தை பிரிண்ட் எடுத்த அவர், நேராக ஆடி கார் ஷோரூமிற்கு சென்றுள்ளார்.

அங்கு ஆடி A3 2013 ரக காரை தேர்வு செய்த அவர், அதனை வாங்கிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் அதற்கான பணத்தை செலுத்த கவுண்டருக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பணத்தை கொடுத்த போது அதனை மிக எளிதாக போலி நோட்டுகள் என அங்கிருந்த நபர் கண்டறிந்துள்ளார். ஆனாலும் இந்த பெண் எதோ பிராங்க் ஷோ நடத்துகிறார் என எண்ணி அவரிடம் பேசியுள்ளார்.

பின்னர் அவரிடம் தொடர்ந்து பேசிய போது, அவர் உண்மையிலேயே அந்த போலி நோட்டுகளை வைத்து கார் வாங்க வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் காவல்துறைக்கு போன் செய்துள்ளனர். பின்னர் அங்கு  வந்த காவலர்கள் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.