Skip to main content

ஹாலிவுட் வழியில் விஷால்... புதுமை படைத்த இரும்புத்திரை!

Published on 09/05/2018 | Edited on 11/05/2018
irumbu thirai.jpeg

 

irumbuthirai


விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் மே 11ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹாலிவுட்டில் திரையிடுவது போல இந்தியாவிலேயே முதன் முறையாக 'இரும்புத்திரை' திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் இன்று செய்தியாளர்களுக்கு பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மித்ரன், லைகா குழுமத்தை சேர்ந்த கருணா, அயுப் கான், எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

 


அப்போது இந்த திரையிடல் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் மித்ரன் முதல் பாதி மட்டும் வெளியிட்டதை பற்றி பேசியபோது... "எப்போதும் புதுமையை விரும்புபவர் விஷால் சார். அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்துவந்தார். அது 'இரும்புத்திரை' படத்துக்கு நடந்துள்ளது. காரணம் 'இரும்புத்திரை' திரைப்படத்தின் இண்டர்வல் ப்ளாக் சரியான ஒன்றாக இருக்கும் என்று நம்பியதால் இப்போதுள்ள சூழலில் இப்படத்துக்கு இந்த திரையிடல் சரியாக இருக்கும் என்று எண்ணி இந்த முடிவை எடுத்தோம். மேலும் 'இரும்புத்திரை' படம் ஆதார் அட்டையினால் ஏற்படும் ஆபத்தை பற்றி பேசும் படம் அல்ல டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்டன்ட் யூனியன் 2019 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்றனர் 

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
stunt union

 

 

தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டன்ட் இயக்குனர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன் 1966 ஆம் ஆண்டு  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு,கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கடந்து, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வரும் சங்கம் 52 வது ஆண்டு கடந்து தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சென்ற முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.S.G.சோமசுந்தரம் (எ ) S.D சுப்ரீம் சுந்தரே இந்த ஆண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   

 

திரு.தவசிராஜ். S.D          –       உபதலைவர்

திரு.K.ராஜசேகர். S.D        –      துணைத்தலைவர்

திரு.G.பொன்னுசாமி S.A    -      செயலாளர்

திரு.V.மணிகண்டன் S.A    -      துணைச்செயலாளர்

திரு.S.S.M.சுரேஷ் S.A        -      இணைச்செயலாளர்

திரு.C.P.ஜான் S.A            -       பொருளாளர்

செயற்குழு உறுபினர்கள்

திரு.S.M.ராஜ் S.A 

திரு.P.ரவிக்குமார் S.A 

திரு.R.நாராயணன் S.A 

திரு.R.பாபு S.A 

திரு.A.வெங்கடேஷன் S.A 

திரு.U.ஆனந்தகுமார் S.A 

திரு.V.காசி S.A 

திரு.M.வெற்றிவேல் S.D

திரு.M.சுகுமார் S.A

திரு.B.K.பிரபு S.D

திரு.E.பரமசிவம் S.A

திரு.K.சதாசிவம் S.A

 

மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் இந்த ஆண்டின் பொறுப்பாளர்கள் ஆவார்கள். அதுமட்டுமல்லாமல் 2019 ம் ஆண்டு தேர்தலை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி M.சாகுல் அமீர் S.D அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் பதவியேற்பு விழா இன்று (05.01.2019) காலை ஸ்டன்ட் யூனியனில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி.S.தாணு, எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர், மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், வி.பிரபாகர், சண்முகசுந்தரம் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற உருப்பினர்களுக்கு 24 சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்களும், ஸ்டன்ட் இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.

 

Next Story

தெலுங்கிலும் மாஸ் காட்டிய விஷால்

Published on 09/06/2018 | Edited on 09/06/2018
vishal


அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கதில் விஷால் நடித்த 'இரும்புத்திரை' படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது. நாயகியாக சமந்தா நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் இப்படம் நல்ல வசூலை ஈட்டி தந்ததையடுத்து தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் இப்படத்தை டப் செய்து வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது எதிர்பார்த்தது போலவே தெலுங்கிலும் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதுவரை இப்படம் அங்கு 12 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இனிவரும் நாட்களிலும் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் கிட்டதட்ட நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகரான வசூலை விஷால் அங்கு பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.