Skip to main content

"எடுத்தவங்க மேல தப்பில்லை... ஆனா, படம் ஓடக் கூடாது" - 'இருட்டு அறையில் முரட்டு குத்து' பற்றி பிரபல இயக்குனர்!

Published on 08/05/2018 | Edited on 09/05/2018
vijay milton


சமீபத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்து இருக்கின்ற இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. இருந்தும் ஒரு பக்கம் இப்படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.

 

 

 

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... "இந்த படத்தின் முன்னோட்ட காட்சியை பார்க்கும் போதே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று நினைத்தேன். திரைத்துறையில் இருந்து கொண்டே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று சொல்லும் போது எனக்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு படம் ஓடினால் தான் திரைத்துறைக்கு நல்லது. வேற யாராவது தயாரித்திருந்தால் எதுவும் தெரிந்திருக்காது. மிகவும் மதிக்கக் கூடியவரே இந்த படத்தை தயாரித்திருப்பது, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அவர்கள் சொல்லித்தான் ‘ஏ’ படம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் தப்பில்லை. ஆனால், இந்தப்படம் ஓடக்கூடாது என்று எனக்கு ஏன் தோன்றியது என்றால், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பலர் வருகிறார்கள். இந்தப் படம் ஓடியது என்றால், இளைஞர்களுக்கு இதுதான் பிடிக்கும் போல, இதுதான் சினிமா என்று நினைத்துக் கொண்டு எல்லாரும் இதுபோன்ற படங்கள் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த கால கட்டத்திற்கு இது சரிபட்டு வராது. ஏதோ பேசனும்னு தோன்றியது, பேசாமல் இருந்தால் தப்பு என்று தோன்றியது. அதான் பேசிவிட்டேன். இதனால் வரும் எதிர்வினையை சந்திக்கவும் தயார்" என்றார்.

 

iamk

சார்ந்த செய்திகள்

Next Story

'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குனரின் அடுத்த வேலை... - கஜினிகாந்த் விமர்சனம்

Published on 05/08/2018 | Edited on 06/08/2018

 

maniyarfamily

தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி ஜானரை அறிமுகப்படுத்தி பல்வேறு தரப்பிலிருந்து திட்டுவாங்கி ஹிட் கொடுத்த சன்தோஷ் பி ஜெயக்குமார் முதல்முறையாக நல்ல ஃபேமிலி படம் கொடுத்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும், சில காலமாக தோல்விப் படங்களையே கொடுத்த ஆர்யாவுக்கு கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் என வெளியாகியிருக்கும் 'கஜினிகாந்த்' இருவரின் குறிக்கோளையும் நிறைவேற்றியுள்ளதா?

 

arya



ரஜினிகாந்த் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பிறந்து 'கஜினி' போல மறதி கொண்டிருப்பதால் அவர் கஜினிகாந்த். மறதி நோயால் கஷ்டப்படும் ஆர்யா தனக்குள்ள பிரச்னையை எப்படி ரகசியமாக வைத்து ஹீரோயின் சாயிஷாவை காதலித்து, பின் அவர் தந்தை சம்பத்திடம் நல்ல பெயர் வாங்கி சாயிஷாவை கரம் பிடிக்கிறார் என்பதே படம். 

 

sayeesha



ஆர்யாவுக்கு மிக எளிதான பாத்திரம். இயல்பாக நடித்துள்ளார், ஆங்காங்கே உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றுள்ளார். இந்தப் படத்தில் நமக்குப் பிடித்த 'பாஸ்' ஆர்யாவைப் பார்க்கலாம். ஒரு இடைவெளிக்குப் பிறகு  இது அவரின் மறுபிரவேசம் என்றே சொல்லலாம். அழகு, மெழுகு சிலை சாயீஷா அப்பாவி கதாநாயகியாக வருகிறார். நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு குறைவே. ஆர்யாவின் தந்தை ஆடுகளம் நரேன், நண்பர் சதிஷ், ஆகியோர் வரும் சில காட்சிகள்தான் படத்தின் பெஸ்ட் மொமெண்ட்ஸ். குறிப்பாக இவர்கள் பங்குபெறும் ஆள்மாறாட்ட காட்சிகளில் தியேட்டர் சிரிப்பலையில் அதிர்கிறது. மொத்த படத்திலும் நமக்கு கிடைக்கும் ஆச்சரியம் ஆடுகளம் நரேன்தான். அதிகமாக இவரை சீரியஸாகவே பார்த்த நமக்கு இந்தப் படம் சிரிப்பு சர்ப்ரைஸ். காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் எல்லோரும் தங்கள் பணியை சரியாக செய்து சிரிக்கவைத்துள்ளனர். சம்பத், வழக்கம் போலவே கோபமாக வருகிறார், அவரும் தன் பங்குக்கு சிரிக்கவைக்கிறார்.

 

gajinikanth



'பலே பலே மகாதிவோய்' தெலுங்கு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சன்தோஷ் பி ஜெயக்குமார். தெலுங்கில் உரிமை வாங்கி எடுக்கும் அளவுக்கு புதிய கதை அல்ல. சபாஷ் மீனா டூ உள்ளத்தை அள்ளித்தா, உள்ளத்தை அள்ளித்தா டூ கஜினிகாந்த் என காட்சிகள் அப்படியே ஃபார்வேர்ட் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் பொழுதுபோக்குக்கு குறைவில்லை. க்ளைமாக்ஸையாவது தமிழில் எடுக்கும்போது சற்று மெருகேற்றியிருக்கலாம். அடல்ட் காமெடி மட்டுமல்ல இப்படி ஒரு படமும் எடுக்க வரும் என நிரூபித்துவிட்டார் இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர். எந்த வகை படமாக இருந்தாலும் கலர்ஃபுல்லாக காட்சி ரீதியில் தரமாக உருவாக்குவது சன்தோஷின் பலம். எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவுக்கும் இப்படம் ஆறுதல் வெற்றியாக அமைகிறது.

 

 


பல்லுவின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல். பால முரளி பாலுவின் பாடல்களும் பின்னணி இசையும் ஓகேதான். மொத்தத்தில் எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல் பொழுது போனால் போதும் என்பவர்களை வருத்தப்பட வைக்கமாட்டார் 'கஜினிகாந்த்'.

ரசிகர்களும் கஜினியைப் போலவே பழைய படங்களை மறந்துவிட்டு சென்றால் என்ஜாய் பண்ணலாம்.



 

 

Next Story

'பல்லு படாம பாத்துக்க' பட டைட்டில் காரணம் இதுதான்' - இசையமைப்பாளர் ஓபன் டாக்

Published on 22/06/2018 | Edited on 23/06/2018
balamurali

 

'பீச்சாங்கை' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான பாலமுரளி பாலு அடுத்ததாக 'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படங்கள் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து வித்யாசமான படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் இசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டிராபிக் ராமசாமி' படம் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து இவர் அடுத்ததாக 'கஜினிகாந்த்', 'பல்லு படாம பாத்துக்க', 'தட்றோம் தூக்குறோம்' ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தன் அடுத்தடுத்த படங்களை பற்றியும், தற்போது இசையமைத்திருக்கும் டிராபிக் ராமசாமி படத்தை பற்றியும் பாலமுரளி பாலு நம்முடன் பேசும்போது.... 

 

 


"நான் இசையமைத்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தாண்டி அதில் இடம்பெற்ற 'அழுக்கு ஜட்டி அமுதவள்ளி' பாடலால் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. யு டியூபில் இந்த பாடலுக்கு அமுதவள்ளி என்ற பெண் 'என் பெயர் அமுத வள்ளி. நீங்கள் இந்த பாடலை போட்டதனால் நண்பர்கள் அனைவரும் என்னை கிண்டல் செய்கின்றனர். எனக்கு ஒரு அழுகையாக வருகிறது' என்று கமண்ட் செய்திருந்தார். அதை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப வருத்தமாகிவிட்டது.

பின்னர் அந்த பெண்ணிடம் வேறு ஒரு ஐடியில் இருந்து தொடர்பு கொண்டு சமாதானம் படுத்தினேன். அதிலிருந்து இனி பொறுப்புடன் பாடல்கள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. ஒரு 85 வயது முதியவர் இந்த வயதில் இவ்வுளவு செய்யும்போது நாம் நம் வாழ்வில் என்ன செய்தோம் என்று தோன்றியதை சவாலாக எடுத்துக்கொண்டு நான் இசையமைத்த படம் 'டிராபிக் ராமசாமி'. படத்தில் வரும் உணர்ச்சிகரமான பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

 

 


நான் அடுத்து இசையமைத்திருக்கும் 'கஜினிகாந்த்' படம் குடும்பத்துடன் சென்று பார்க்கும் யு சான்றிதழ் படமாக இருக்கும். ராகங்களை முன்னிறுத்தி வரும் பாடல்கள் இப்போது அபூர்வமாக உள்ளதால், இப்படத்தில் 'ஸ்ரீ ராகம்' என்ற ராகத்தில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளேன். மேலும் இந்த பாடல் உட்பட மொத்தம் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். இதையடுத்து நான் 'பல்லு படாம பாத்துக்க' படத்திற்கு இசையமைத்துள்ளேன். இது ஒரு  'சோம்பி' வகை காமெடி படம். படத்தின் டைட்டிலான 'பல்லு படாம பாத்துக்க' என்பது சோம்பிவுடைய பல் நம் மேல் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். அப்படி சோம்பி பல் நம் மேல் பட்டால் நாமும் சோம்பி ஆகிவிடுவோம் என்பதனால் இப்படத்திற்கு இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 

 


இதுவரை நான் இயக்குனர்களுக்கு ஏற்றவாறு பாடல்கள் கொடுத்தேன். இந்த படத்தின் இசை அப்படி இல்லாமல் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். படத்தில் பேய்களின் சத்தத்தை வைத்து ஒரு பாடலும், ஜாஸ் கலந்த டப்பாங்குத்து பாடலும், ஒரு வித்தியாசமான குத்து பாடலும் உள்ளது. இதைத்தொடர்ந்து நான் புதுமுகங்கள் நடிக்கும் 'தட்றோம் தூக்குறோம்' படத்திற்கும் இசையமைத்து வருகிறேன்" என்று மனம் திறந்து பேசினார்.