Skip to main content

சூர்யா படம் ரிலீஸாவதில் சிக்கல்... படக்குழு அதிர்ச்சி

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாவதாக இருந்த சாஹோ திரைப்படம் வருகிற 30ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

surya

 

 

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்....“நாங்கள் சிறந்ததை பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் சுதந்திர தினத்திலிருந்து தேதியை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றாலும், சாஹோவுடன் சுதந்திர தின மாதம் மற்றும் தேசபக்தி இணைந்திருக்க விரும்புகிறோம். மிகப்பெரிய திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்” என்றார். 
 

பிரபாஸுக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் திரைப்படமாக வெளியாகிறது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளிசர்மா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 

இந்த படம் வருகிற 15ஆம் தேதி வெளியாகிறது என்பதால் அந்த நேரத்தில் வரதாக இருந்த படங்கள் முன்பே ரிலீஸுக்கு தயாரானது. நேர்கொண்ட பார்வை படம் 10ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி என்று ரிலீஸ் தேதியை மாற்றியது. 
 

சாஹோ படத்திற்கு முன்பே ஆகஸ்ட் 30ஆம் தேதி காப்பான் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காப்பான் படம் ரிலீஸ் தேதி தள்ளி வரலாம் அல்லது முன்பே வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்