Skip to main content

“அது அவமானம் அல்ல...”- கரோனா குறித்து த்ரிஷா !

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா.சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி விலங்குகள் நல ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.

 

trisha



UNICEF-அமைப்பு பிரபலங்களில் ஒருவரைத் தூதராக தேர்ந்தெடுப்பார்கள்.அந்த வகையில் பல முன்னணி நடிகைகள் ஐநா அமைப்புகளின் கௌரவ தூதராகப் பதவியில் உள்ளனர்.
 

அண்மையில் நடிகை த்ரிஷா தென்னிந்திய UNICEF-அமைப்பு தூதராக நியமிக்கப் பட்டுள்ளார். தற்போது உலகம் முழுவதும் பீதியைக் கிளப்பி வரும் கரோனா வைரஸ் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் த்ரிஷா.தமிழக அரசாங்கத்தின் கரோனா விழிப்புணர்வு விளம்பரத்திற்காக கரோனா வைரஸ் குறித்தும், தனிமைப்படுத்துதல் குறித்தும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
 

 



அதில், “கோவிட்-19 அல்லது கரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது.மற்ற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அண்மையில் தமிழகத்திற்கு வந்தவர்கள் தங்களைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை யாரும் டார்ச்சர் செய்யப்போவதில்லை,அது அவமானமும் இல்லை.அரசாங்கத்தின் விதிமுறைகளை முறியடிக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்