Skip to main content

'துப்பாக்கி- 2' பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்தோஷ் சிவன்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

santh


விஜய், முருகதாஸ் ஆகியோர் கூட்டணியில் உருவான  துப்பாக்கி இன்றும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படம். இந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பர். சந்தோஷ் சிவன், முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலாகப் பணிபுரிந்த படம். இதனைத் தொடர்ந்து 'ஸ்பைடர்', 'தர்பார்' உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார்.


விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் முருகதாஸ் கூட்டணியில் 'துப்பாக்கி- 2' படம் உருவாக உள்ளது என்றும் தகவல் வெளியானது.

அந்தச் சமயத்தில் சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இதன் மூலமாக சமூக வலைத்தளங்களில் 'துப்பாக்கி- 2' உறுதியாகிவிட்டது, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார் என்றெல்லாம் செய்தி வெளியாகத் தொடங்கியது.

 

 


இந்நிலையில், சந்தோஷ் சிவன் இந்தத் தகவலுக்கு தனது ட்விட்டர் பதிவின் மூலமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், "எனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதர படங்களின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளேன். இதில் எந்தவொரு குறிப்புமே இல்லை" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் உருவான 'துப்பாக்கி- 2' படம் குறித்தான பேச்சுக்களுக்கு இப்பதிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முதல் இந்திய ஒளிப்பதிவாளர்’ - சந்தோஷ் சிவனுக்கு கிடைத்த பெருமை

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Santosh Sivan Becomes The First Indian Cinematographer To Receive cannes film festival Pierre Angénieux Tribute

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா மே 14 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பதிவாளர்களைக் கௌரவிக்கும் வகையில் பியர் ஆசிங்யு (Pierre Angénieux) என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது இந்தாண்டு சந்தோஷ் சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 24 ஆம் தேதி அவருக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதினை புகழ்பெற்ற பிலிப் ரூஸெலோட், வில்மோஸ் சிக்மண்ட், ரோஜர் டீக்கின்ஸ் உள்ளிட்ட 10 பேர் வாங்கியுள்ள நிலையில், இவ்விருதினைப் பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை சந்தோஷ் சிவன் பெறவுள்ளார். 

1986 ஆம் ஆண்டு மலையாள திரைத்துறை மூலம் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் அறிமுகமானார். தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என மொத்தம் 55 திரைப்படங்கள் மற்றும் 50 ஆவணப்படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் தளபதி, ரோஜா, இருவர், துப்பாக்கி எனப் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னத்துடன் இணைந்து தமிழில் அதிக படம் பணியாற்றியுள்ளார். இதுவரையில் 12 தேசிய விருது வாங்கிய அவர், இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.

Next Story

தமிழில் பாடகியாக அறிமுகமாகும் மஞ்சு வாரியர்

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Manju Warrier is making her debut as a singer in Tamil

 

இந்தியாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு 'இனம்' படம் வெளியானது. அதன் பிறகு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர்களை வைத்து 'சென்டிமீட்டர்' படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' மற்றும் 'சேவாஸ் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

 

இந்நிலையில் மஞ்சு வாரியார் தமிழில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். 'சென்டிமீட்டர்' படத்தின் 'கிம் கிம்' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முதலாக தமிழில் இந்த பாடலை மஞ்சு வாரியர் பாடியுள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் சில பாடல்களை பாடியுள்ள மஞ்சு வாரியர் 'கிம் கிம்' பாடலின் மூலம்  தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார். 'கிம் கிம்' பாடலின் மலையாள லிரிக் வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.