Skip to main content

முதல் முறையாக யுவன் இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
santhosh narayanan sang in Yuvan's music for the first time

இயக்குநர் ராம் ‘பேரன்பு’ படத்தைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். ‘வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்’ சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையில்,  நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ இப்படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இப்படத்தின் முதல் பாடல் காதலர் தினமான கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியான இப்பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகள் எழுதியிருந்தார். இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில், இப்படத்தின் 2வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஏழேழு மலை’ எனத் தலைப்பில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார். நாளை (05-07-24) மாலை 6 மணியளவில் வெளியாகும் இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் இப்பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

மனதை வருடும் ‘ஏழேழு மலை’ பாடல்; யுவன் இசையில் வெளியீடு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
yezhu malai yezhu kadal 2nd song released

கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குநர் ராம், தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். ‘வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்’ சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்த படம் சர்வதேச பல இடங்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வாங்கியுள்ளது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.  இப்படத்தின் முதல் பாடல் காதலர் தினமான கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியான இப்பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகள் எழுதியிருந்தார். இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘ஏழேழு மலை’ எனத் தலைப்பில் தொடங்கும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்த பாடலில் ‘நீரோடை முழுதும் உன் வேர்வைக் கயல்கள்...  முட்புதரின் இடையில் உன் பார்வை முயல்கல்.. என்ற வரியும், ‘தனைக் கண்ட விழியைத் தொலைத்த ஓர் கனவாய்..  திசைக்கெட்டுத் தறிக்கெட்டு ஓடுகிறேன்...’ என அற்புதமான வரிகள்  நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கேட்க முடிகிறது. இதன் மூலம் மதன் கார்க்கி தேர்ந்த பாடாலசிரியர் என்று மீண்டும் நிரூபித்துக்கிறார். மனதை வருடும் இப்பாடல் மீண்டும் மீண்டும் கேட்க கேட்க தூண்டுகிறது. முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Next Story

“இது எனக்கு மிகவும் கசப்பான தருணம்” - யுவன் சங்கர் ராஜா உருக்கம்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Yuvan Shankar Raja said in Bhavatharini AI voice in   song of the goat movie

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ லிரிக் வீடியோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், வழக்கமான விஜய் பாடல்களின் கொண்டாட்டம் சற்று கம்மி என்கின்றனர் சிலர். 

இந்த நிலையில் விஜய்யின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘தி கோட்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்னசின்ன கண்கள்..’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலையும் விஜய் பாடியிருக்கும் நிலையில் அவருடன் இணைந்து மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுல் இடம்பெற்றுள்ளது. பவதாரிணி அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளது படக்குழு.  

சகோதரியின் குரலைப் பயன்படுத்தியது குறித்து யுவன் சங்கர் ராஜா, “இந்தப் பாடல் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெங்களூரில் இந்தப் பாடலுக்கான இசைப்பணியிலிருந்த போது நானும் வெங்கட் பிரபும் எங்களது சகோதரி பவதாரிணியை பாட வைக்க நினைத்தோம். இந்தப் பாடல் அவளுக்கானது என்று உணர்ந்தோம். அந்தநேரத்தில் பவதாரிணியும் குணமாகத்தான் இருந்தாள். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் பவதாரிணி உயிரிழந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. அவளது குரலை நான் இப்படி பயன்படுத்துவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எனது இசைக்குழுவுக்கும், இந்தப் பாடல் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி. இது எனக்கு மிகவும் கசப்பான தருணம்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.