Skip to main content

"சீமான் சொன்னதை போய் நான் பாலா அண்ணனிடம் சொல்ல முடியுமா?" - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேட்டி

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

RK Suresh

 

கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ஜோசப் திரைப்படம், விசித்திரன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் இயக்க, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் பாலா தயாரித்துள்ளார். நேற்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் விசித்திரன் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"அமீரா படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது சீமான் அண்ணன்தான், ஜோசப் என்று ஒரு படம் வந்திருக்கிறது. அதை நீ ரீமேக் செய்தால் உனக்கு பொருத்தமாக இருக்கும் என்றார். உடனே போய் அந்தப் படத்தின் ரைட்ஸை வாங்கினேன். உலகின் நூறு சிறந்த படங்களில் ஜோசப்பும் ஒரு படம் என்பதால் அதன் ரீமேக்கை ரொம்பவும் கவனமாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் ஹீரோவாக நடிப்பதில் எனக்கு கொஞ்சம்  தயக்கம் இருந்தது.

 

பாலா சாரிடம் சென்று விஷயத்தைக் கூறினேன். அவர் தயாரிக்கிறேன் என்றார். நீ நடின்னு சீமான் அண்ணன் சொன்னதை போய் நான் பாலா அண்ணனிடம் சொல்ல முடியுமா? நான் நடிக்கிறேன்... நீங்க தயாரிங்க என்று சொன்னால் அது சரியாக இருக்காது. அதனால் விஜய் சேதுபதி, மாதவன் யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று அவருக்கு யோசனை சொன்னபோது அவரும் நீயே நடி என்றார். நான் கொஞ்சம் யோசித்தேன். ஏன்டா உன் மேல உனக்கு நம்பிக்கையில்லையா, நீ நடி... இந்தப் படம் உன்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் என்றார். 

 

இந்தப் படத்திற்காக 120 கிலோவிற்கு உடல் எடையை அதிகரித்தேன். பின், 90 கிலோ, 80 கிலோ என படத்திலேயே வித்தியாசம் காட்டியிருப்போம். அந்தக் கேரக்டருக்கான பாடிலாங்குவேஜ் வரவேண்டும் என்பதற்காக நடிக்கும்போது நாள் முழுவதும் சிறுநீர் கழிக்காமல் சிறுநீர் பையை நிரப்புவேன். அதன் மூலம், நடிப்பது, பேசுவதில் வித்தியாசம் காட்டமுடியும். படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையுமே பாலா சார்தான் தேர்வு செய்தார். 

 

கரோனா டைம்லதான் இந்தப் படத்தை எடுத்தோம். நான் குண்டானதை நிறைய பேர் பார்க்கவில்லை. சிலர் படம் பார்த்துவிட்டு ஆச்சர்யமாக கேட்டார்கள். படம் பார்க்கும்போது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை கூட்டிய புகைப்படத்தை எங்கும் வெளியிடக்கூடாது என பாலா சார் சொல்லிவிட்டார். 

 

படம் பார்த்துவிட்டு பாலா சார் என்னிடம் எதுவுமே பேசவில்லை. என் முதுகில் ஓங்கி அடித்துவிட்டு, உன் புருஷன் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடுவான் என என் மனைவிடம் கூறினார். மேலும், நல்ல நடிச்சிருக்கான். நானே எதிர்பார்க்கல என்றார்".         

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காடுவெட்டி படத்தின் ரிலீஸ் அப்டேட்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
rk suresh kaduvetti release update

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் 'காடுவெட்டி' படத்தில் நடித்து வருகிறார். சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுபாஷ்சந்திரபோஸ், பரமசிவம் உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாதிக் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த பொங்கலை முன்னிட்டு படத்தின் முதல் பாடலாக ‘வீர பரம்பரடா...’ எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இதையொட்டி நடந்த ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே. சுரேஷ் கலந்து கொண்டார். ட்ரைலரில் படம் விரைவில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 15 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்.கே. சுரேஷ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
rk suresh then mavattam movie music director issue

தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே. சுரேஷ் தற்போது காடுவெட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். சோலை ஆறுமுகம் இயக்கத்தில் மஞ்சள் ஸ்கீரீன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் சிக்கித் தலைமறைவாக இருந்த ஆர்.கே. சுரேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் நடந்த காடுவெட்டி பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்து பேசினார். 

இப்படத்தை அடுத்து தென் மாவட்டம் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது எக்ஸ் தள பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆர்.கே. சுரேஷ் இப்படத்தை எழுதி இயக்குவதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் யுவன் ஷங்கர் ராஜா தென் மாவட்டம் பட போஸ்டர் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “தென் மாவட்டம் படத்தில் இசையமைப்பாளராக நான் கமிட்டாகவில்லை. யாரும் இது தொடர்பாக பேசவும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்து பதிவிட்ட ஆர்.கே சுரேஷ், “யுவன் சார் நீங்கள் எங்களுடன் ஒரு திரைப்படத்திற்கும் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். தயவுசெய்து ஒப்பந்தத்தை சரிபார்க்கவும்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆர்.கே சுரேஷ் இசை அமைப்பாளர் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தென் மாவட்டம் படத்தின் புதிய இசை அமைப்பாளர் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.