Skip to main content

'ஆண்ட்ரியாவிடம் இருந்து ரகுல் ப்ரீத் கற்றுக் கொள்ள வேண்டும்' - ஸ்ரீரெட்டி பாய்ச்சல் 

Published on 19/08/2018 | Edited on 20/08/2018

தெலுங்கு திரை உலகை சேர்ந்தவர்கள் மீது பாலியல் புகார் கூறி, அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி பிரபலமான நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்ரீரெட்டி புகார் குறித்து ரகுல் ப்ரீத் சிங் கருத்து தெரிவித்தபோது... 'எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. படுக்கைக்கு அழைத்தால் செல்வதும், செல்லாததும் நம் கையில் உள்ளது. திறமைதான் முக்கியம்' என கூறியிருந்தார். இதற்கு ஸ்ரீரெட்டி ரகுலை கடுமையாக திட்டி பேட்டி அளித்தார்.

 

 


 

 

srireddy andrea rakul



அதன் பின்னர் நடிகை ஆண்ட்ரியா ஸ்ரீரெட்டி குறித்து பேசியபோது... 'ஸ்ரீரெட்டி இப்படி பேச தைரியம் வேண்டும். அவர் சொல்வதில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். ஆண்ட்ரியா தனக்கு ஆதரவாக பேசியதைப் பார்த்து நெகிழ்ந்த ஸ்ரீரெட்டி, 'சக நடிகைகள் பற்றி எப்படி பேச வேண்டும் என்று ஆண்ட்ரியாவிடம் இருந்து ரகுல் ப்ரீத் கற்றுக் கொள்ள வேண்டும்' என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ் போட்டார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரு நடிகையைக்கூட தொட்டதில்லை: ஸ்ரீரெட்டி புகார் குறித்து டி.ஆர். பதில்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

 

 

t rajendar interview

 

 

ஒரு கதாநாயகியைக் கூட தொட்டு நடித்ததில்லை என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ள புகார் குறித்து இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
 

 

 

சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. முதலில் தெலுங்கு இயக்குநர்கள், நடிகர்கள் மீது குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கில் இருந்து தமிழ்நாடு பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி, பிரபல இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்ததாக நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது தற்போது பாலியல் புகார் அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர்,
 

சினிமாத்துறையில் நல்லவர்களும் உள்ளனர், சில மோசமானவர்களும் உள்ளனர். பாலியல் புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை. அந்த புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். 
 

 

 

நான் சினிமாவில் 1979-80ல் என்ட்ரி ஆகினேன். ஒரு கதாநாயகியைக் கூட தொட்டு நடித்ததில்லை. நடிகைகளுக்கு டயலாக் சொல்லிக்கொடுக்கும்போதுகூட தொட்டு சொல்லிக்கொடுத்தது கிடையாது. நான் தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்திருக்கிறேன். என் மேல எந்த கிசுகிசுவும் வந்தது இல்லை.


புகார் சொல்லுவது உரிமை. புகாருக்கு ஆளானவர்கள் பதில் சொல்ல சொல்லுங்கள். அவர்களுக்கு வாய் இல்லையா? அவர்களுக்கு மைக் இல்லையா? என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை அவர்களிடம் கேளுங்கள் என்றார்.