Skip to main content

‘உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன்” - நடிகர் ராதாரவியின் உருக்கமான வேண்டுகோள்

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
 

radharavi

 

 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,23,328 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,005 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,991 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1024 லிருந்து 1071 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1022 இந்தியர்கள், 49 வெளிநாட்டினர் என மொத்தம் 1071 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 29 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 100 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் நடிகர் ராதாரவி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஆடியோ ஒன்றைச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ தயவு கூர்ந்து, மக்கள் யாரும் பத்தாம் தேதி வரை வீட்டைவிட்டு வெளியேறாமல் இருப்பது நல்லது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஆகியோரின் உத்தரவை மக்கள் பின்பற்ற வேண்டும். நமக்காக அவர்கள் உழைத்திட இருக்கிறார்கள், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் வீட்டிலேயே இருங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன் மக்கள் வீட்டிற்குள் இருங்கள். காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியார்களுக்கு உதவி செய்யுங்கள். இன்னும் ஒரு பத்து நாள் அமைதியாக இருந்துவிட்டால் கரோனா என்னும் கொடியவனினுடனான போராட்டத்தில் நாம் வெற்றிபெறுவோம் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்