Skip to main content

பி.ஆர்.ஓ சங்க நிர்வாகிகள் தேர்தலில் புதிய தலைவர் தேர்வு 

Published on 25/06/2018 | Edited on 25/06/2018
pro

 

 

 

2018 - 2020ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தேர்தல் நேற்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். கிரிதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்காக தற்போது தலைவராக இருக்கும் டைமண்ட் பாபுவும், பொருளாளராக இருக்கும் விஜய முரளியும் போட்டியிட்டனர். இதில் கடைசி நேரத்தில் டைமண்ட் பாபு வாபஸ் பெற்றதால் தலைவராக விஜய முரளி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக பெருதுளசி பழனிவேலும், பொருளாளராக யுவராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மேலும் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வருமாறு.... துணை தலைவராக இராமானுஜம் மற்றும் கோவிந்தராஜ், இணை செயலாளராக குமரேசன் மற்றும் ஆனந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக வி. பி. மணி, கிளாமர் சத்யா, மதுரை செல்வம், நிகில்முருகன், சரவணன், சாவித்திரி, ஆறுமுகம், சங்கர், செல்வகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்