Skip to main content

பிரித்விராஜ் பட விவகாரம்; "எங்கள் தலைவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை" - விஸ்வ இந்து பரிஷத் விளக்கம்

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

prithviraj movie issue Vishwa Hindu Parishad organisation explained

 

பிரித்விராஜ் நடிப்பில் 'கோல்ட்', 'காப்பா' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது 'ஆடு ஜீவிதம்', 'விலயாத் புத்தா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே 'ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பை புத்தாண்டு தினத்தன்று பிரிதிவிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். 

 

மேலும் படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இப்படத்தை 'இ4 என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்க தீபா பிரதீப் வசனம் எழுதுகிறார். இப்படத்தின் தலைப்புக்கு கேரள மாநில விஸ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் பிரதீஷ் விஸ்வநாத், "குருவாயூரப்பன் பெயரில் எடுக்கவுள்ள இப்படம் அவரைக் கேலி செய்யும் வகையில் இருந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" எனக் கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளம் வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தார். 

 

இந்த நிலையில் மிரட்டல் விடுத்த பிரதீஷ் விஸ்வநாத், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது என மாநிலத் தலைவர் விஜி தம்பியும், பொதுச் செயலர் ராஜசேகரனும் தெரிவித்துள்ளனர்.  மேலும், "விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் ஒரு திரைப்படம் உருவாவதற்கு முன்பே தீர்ப்பு வழங்கும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை. படம் வெளியான பிறகு எங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் நாங்கள் அதை தெளிவுபடுத்துவோம். எனவே இப்போது வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும் எங்கள் அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தயவு செய்து இந்த சர்ச்சையில் எங்கள் அமைப்பைத் தேவையில்லாமல் இழுக்காதீர்கள்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலையாளப் படங்கள் திடீர் நிறுத்தம் - தொடரும் சிக்கல்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
malayalam cinema pvr issue

மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டு தொடர்ந்து பல படங்கள் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் முதன் முதலில் ரூ.200 கோடி வசூலித்த படமாக இருக்கிறது. ஆடுஜீவிதம் குறுகிய நாட்களில் ரூ.100 கிளப்பில் இணைந்தது. மேலும் பிரேமலு, பிரம்மயுகம் எனத் தொடர் வெற்றிப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்தச் சூழலில் அண்மையில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளப் படங்களை, திடீரென அவர்களது திரையரங்குகளில் திரையிடுவதை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தினர். இதற்கு காரணமாக திரையிடப்படும் விபிஎஃப் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தங்களது திரையரங்குகளில் க்யூப், யுஎஃப்ஓ, உள்ளிட்ட சில ஃபார்மெட்களில் படங்களைத் திரையிடுவதற்கு விபிஎஃப் என்ற கட்டணத்தை தயாரிப்பாளர்களிடத்தில் வசூலித்து வந்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மாற்றாக ‘பிடிசி’ எனப்படும் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் படங்களை திரையிட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இந்த முடிவை எதிர்த்துதான் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளத் திரைப்படங்களை நிறுத்தியுள்ளார்கள்.  இதனால் இந்த விவகாரம் தற்போது மலையாளத் திரையுலகில் பெரிதாக பேசப்படுகிறது. திரைப்படங்கள் திரையிடப்படாததால் வசூலைப் பாதிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அதனால் இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேசி, பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம், ஜெய் கணேஷ் ஆகிய மலையாளப் படங்கள் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய முன்னணி தமிழ் நடிகர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The leading Tamil actor praised the film 'Premalu'

சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதில், ‘பிரேமலு’ திரைப்படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கியிருந்தார்.  நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் ‘பிரேமலு’ படம் இடம்பெற்றுள்ளது.

The leading Tamil actor praised the film 'Premalu'

இந்த நிலையில், ‘பிரேமலு’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக ‘பிரேமலு’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.