Skip to main content

"என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்" - பசுபதி புகழாரம்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021
bfhdhd

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பட்டா பரம்பரை' படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ஆர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில் ரங்கன் வாத்தியாராக நடிகர் பசுபதி நடித்து ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் பசுபதி சார்பட்டா படத்தில் நடித்தது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

"வணக்கம்,

 

தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும், பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள். தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்,நெருக்கமானவன். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

 

என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள். ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், ஊடக நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் 3 விருதுகளைப் பெற்ற சார்பட்டா பரம்பரை

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

3 award-winning Sarbata parambarai in Japan

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கிய 'சார்பட்டா பரம்பரை' படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதில் துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை வட சென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார் ரஞ்சித்.

 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படக் குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் விமர்சன ரீதியாகவும் பலரது வரவேற்பைப் பெற்றது. சில வாரங்கள் முன் இப்படத்தின் இரண்டாம் பாகம் 'சார்பட்டா பரம்பரை 2' உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பான போஸ்டரை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மேட்ச் பார்க்க ரெடியா... ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட சுற்று 2" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில் ஜப்பானில் நடைபெற உள்ள 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஒசாகா தமிழ் சர்வதேசத் திரைப்பட விழா’வில் சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த கலை இயக்குநருக்கான விருதுகளை சார்பட்டா பரம்பரை வென்றுள்ளது.

 

 

Next Story

'சார்பட்டா பரம்பரை' பிரபலங்களுடன் இணைந்த த்ரிஷா

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

Trisha joins 'Sarpatta Parambarai' celebrities

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'பரமபதம்'. அடுத்து மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து முடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி அருண் வசீகரன் இயக்கும் 'தி ரோடு' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தில் மியா ஜார்ஜ், 'சார்பட்டா பரம்பரை' பட பிரபலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் 'டான்சிங் ரோஸ்' சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2000-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. மேலும் மதுரையில் இன்று படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.