Skip to main content

''ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும் செய்வதைத்தான் நானும் செய்யவிருக்கிறேன்'' - பா ரஞ்சித் அறிவிப்பு!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்  கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 5 புதிய படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளார். இதன் அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பா.ரஞ்சித் இதுகுறித்து பேசியபோது...

 

pa ranjith

 

"சினிமா என்பது ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கானவர்களுடன் பேசக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஊடகம். ஒரு நல்ல படம் எவ்வாறு பார்வையாளர்களால் ஏற்கப்படுகிறது, மதிக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் இந்த சினிமா துறையில் கண்டிருக்கிறோம். நான் தயாரித்த முதல் இரண்டு படங்களையும் மக்களுடன் இணைக்க முடிந்ததற்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இந்த ஒத்துழைப்புக்கான திரைப்படங்கள், கதைகள் மற்றும் இயக்குனர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். கோல்டன் ரேஷன் பிலிம்ஸ், லிட்டில் ரெட்கார் பட நிறுவனங்களுடன் இணைந்து எனது நீலம் புரொடக்‌ஷன் ஐந்து புதிய படங்களை தயாரிக்கவுள்ளது.

 

 

இந்த படங்களை லெனின் பாரதி, மாரி செல்வராஜ், சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகியோர் இயக்கவுள்ளனர். இந்த ஐந்து படங்கள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படவுள்ளன. தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் நல்ல மார்க்கெட் உள்ளது. ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும் பலர் கூட்டு சேர்ந்து படம் தயாரிக்கிறார்கள். அந்த முறை வரவேற்கத்தக்கது. அதுபோலவே இந்த ஐந்து புதிய படங்களையும் இணைந்து தயாரிக்கிறோம். இந்த அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்