நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின் ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை நஸ்ரியா பின்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் மீண்டும் பிரித்விராஜுடன் நடித்த 'கூடே' படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த நஸ்ரியா அடுத்ததாக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரப் போவதாகவும், இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று விரைவில் வரும் என்றும் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.