Skip to main content

மோகன் ஜி வெளியிட்ட புதிய அறிவிப்பு; வாழ்த்திய பாஜக தலைவர் அண்ணாமலை

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

mohan g and selvaraghavan next movie tittle announced

 

'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி 'திரௌபதி' மற்றும் 'ருத்ர தாண்டவம்' ஆகிய  படங்களின் மூலம் பிரபலமானார். இந்த இரு படங்களும்  வெளியான போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பினாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. ஒரு சாரார் மத்தியில் இப்படங்களுக்கு  வரவேற்பு கிடைத்தாலும் சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றன. இதனைத் தொடர்ந்து மோகன் ஜி தற்போது இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நடிக்கவுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். 

 

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'பகாசூரன்' என்ற பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு வரும் (18.4.2022) திங்கட்கிழமையில் இருந்து தொடங்கி முழு வீச்சில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மகாபாரதத்தில் பகாசூரன் என்ற அரக்கனுக்கு ஊர் மக்கள் உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பார்கள். ஆனால் பகாசூரன் உணவுப் பொருட்களுடன், உணவு கொண்டு வருபவர்களையும் தின்றுவிடுவார் என்றும், அதனால் குந்தி தேவியின் மகன் பீமன் பகாசுரனைக் கொன்றுவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அரக்கனின் பெயரைப் படத்திற்கு மோகன் ஜி வைத்துள்ளதால், இந்த மகாபாரத கதையிலிருந்து எதையோ இப்படத்தில் கூற உள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

இதனிடையே பகாசூரன் திரைப்படம் வெற்றி பெற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதனை ரீட்வீட் செய்த மோகன் ஜி "மிக்க நன்றி அண்ணாமலை அண்ணா. உங்களின் வாழ்த்து எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“செல்வராகவனை இயக்குவேன் என நினைத்ததில்லை” - தனுஷ்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
selvaraghavan look from dhanush 50 raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவு படம் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு அவரது கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது செல்வராகவன் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புது லுக்கில் செல்வராகவன் இடம்பெற்றிருக்கிறார். இதுவரையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பல படங்கள் நடித்த நிலையில் இப்படத்தில் செல்வராகவனை தனுஷ் இயக்கியுள்ளார். செல்வராகவனை இயக்குவது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்களை ஒரு நாள் இயக்குவேன் என்று நினைத்ததில்லை சார்” என குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

ராயன் - விளக்கம் கொடுத்து சஸ்பென்ஸ் உடைத்த செல்வராகவன்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
dhanush raayan update by selvaraghavan

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக, அஜித்தை வைத்து செல்வராகவன் இயக்கவிருந்த காசிமேடு பட கதையைத் தான் தனுஷ், தற்போது ராயன் என்ற தலைப்பில் சிறு மாற்றங்கள் செய்து இயக்கி வருவதாக செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் செல்வராகவன் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நண்பர்களே, ராயன் படத்திற்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியதாக செய்திகள் வந்துள்ளன. ராயன் பட ஸ்கிரிப்ட் அல்லது ஸ்கிரிப்ட் பணிகளிலும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். ராயன் படம் தனுஷின் கனவு ஸ்கிரிப்ட், அதனால் அவரது படமாக எடுத்துள்ளார். இந்த படத்தில் நான் நடிகனாக மட்டுமே இருந்துள்ளேன்” என்றார். 

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் செல்வராகவன் இப்படத்தில் நடிப்பதை சொல்லி உறுதிப்படுத்தியுள்ளார்.